web log free
May 02, 2024
kumar

kumar


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சனின் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஞ்சன் ராமநாயக்கவும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 4ம் திகதி காலை 11 மணிக்கு ரஞ்சனை வரவேற்க வெலிக்கடை சிறைக்கு முன் வருமாறு அந்த பதிவில் உள்ளது.

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில்ராஜபக்‌ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாக கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.

ஆனால் 2005 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்காக பல கோடிகளை செலவிட்டு ஆயுதங்களை கொள்வனவு செய்தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வேண்டியதாக கூறுகின்றார்கள்.

வடகொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்கு கடன்களாக இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவ தளபாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால் பசில் ராஜபக்சவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்க பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவுக்கும் (Gotabaya Rajapaksha)தெரியும். அன்றைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்க பிரஜைகளாக இருந்தவர்கள்.

அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர்களை கடத்தி அங்கிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அமெரிக்க அரசு பசில் ராஜபக்சவை மாத்திரமன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழிநடத்திய தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்.

அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத்திற்காக கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும் ,மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம்.

இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப்போவது கிடையாது .ஆனால் இவற்றை மேற்கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படையிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந்தபட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பசில் ராஜபக்சவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது ,எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது ,அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது.

ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்க பிரஜை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

 

கொரோனா தொற்றினால் இன்றும் 1156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 15,492ஆக உயர்ந்துள்ளது.

முன்னரைப் போன்று நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிப்பதோடு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டுகிறது.

கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தில் தமது கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அரசாங்கத்தின் செயல் மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தெரிந்தே வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுவே தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கொலை செய்யும் முயற்சியின் ஆரம்பம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிஸ்ஸங்கவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இணைய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 அடுத்த தேர்தலில் 75% ஆணை பெற்று அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...

மிதுன ராசியில் இருக்கும் திருவாதிரை,புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் கடகத்தில் இருக்கும் புனர்பூசம் 4ம் பாதம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்தனுசு ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன்,ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது,மகர ராசியில் சூரியன், சனி, கும்ப ராசியில் குரு, சந்திரன்,

மிதுனம், கடகத்தில் இருக்கும் திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்
தனுசு ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன்,
ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது,
மகர ராசியில் சூரியன், சனி, கும்ப ராசியில் குரு, சந்திரன்

மேஷம் இன்றைய ராசிபலன் - Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு சில நாட்கள் கால தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும்.

சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.

குடும்பத்தில் உங்கள் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் - Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும் நல்ல நாள் ஆகும் பெண்களுக்கு இனிமையான நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும் பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி பெற்றோர்களுடன் பேசுவதற்கு உகந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவைகளை நல்ல பலன் கிடைக்கும்.

பிரயாணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் நல்லபடியாக அமையும் பிரயாணத்தில் வெற்றி உண்டாகும் என்பதால் வெளிநாடு செல்வது தனவரவு அதிகரிக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் - Gemini
அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.


வேலை வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் பற்றாக்குறை இருந்து வரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வயதானவர்களுக்கு கண் மற்றும் கால் தொடர்பான பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். பொறுமையைக் கைக் கொள்வது மிக முக்கியமானது பேச்சில் நிதானம் தேவை.

கடகம் இன்றைய ராசிபலன் - Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டாகும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்றுக் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

உணவு தொழில் சுற்றுலா தொழில் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானத்தை கொடுத்துவிடும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.

புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் மனதில் மேலோங்கி நிற்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் சற்று பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம் இன்றைய ராசிபலன் - Leo
அன்பர்களுக்கு இன்றைய நாட்டு மிகச்சிறந்த நாள் உத்தியோகத்திலிருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் அதற்கான அடித்தளங்கள் இன்று அமையும் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

வழக்கு மற்றும் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் - Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு செலவினங்கள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கியே செல்லும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

ஒரு சிலருக்கு பிரயாணங்கள் உண்டாகலாம் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் இவைகளால் வெற்றி உண்டாகும் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள் இருப்பினும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் - Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன் வந்து நிற்கும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான தொல்லைகள் ஏற்படும் என்பதால் உணவுப் பொருட்களில் சற்று கவனம் தேவை வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்துவது தொடர்பான திட்டமிடுதல்களில் ஈடுபடுவீர்கள் இவைகளில் வெற்றி உண்டாகும்.

பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாகும் உத்தியோகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய உகந்தநாளாகும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் - Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை பொருளாதாரத்தில் பற்றாக்குறைகளை விரைவில் சரி செய்து விடுவீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

காதல் தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான பல நிகழ்வுகள் உண்டு திருமணத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையாவார்கள் சொந்த தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும் சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் கிடைக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் - Sagittarius
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்யமாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

சொந்த தொழில் செய்வதற்கு திட்டமிடுவதற்கு சிறப்பான நாளாகும். உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக உங்கள் வேலைகள் முடியும் வடக்கு மற்றும் பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாகும். வாகன வகையில் சுபச்செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு.

அலைச்சல்கள் அதிகமாகும் இருப்பினும் வருமானத்தை கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு கூடுதலான கவனத்தை தொழிலில் செலுத்த வேண்டி வரும். அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருக்கும் இருப்பினும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

மகரம் இன்றைய ராசிபலன் - Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் இடத்தில் ஏற்படுவதற்கான நாள் ஆகும். அது தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் வெற்றிகரமாக கல்வியைத் தொடர்வார்கள்.

கல்வி முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம் இன்றைய ராசிபலன் - Aquarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் எளிதில் சரி செய்து விடுவீர்கள்.

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

தொழில் கல்வி மருத்துவ கல்வி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கிடைக்கும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மீனம் இன்றைய ராசிபலன் - Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளியூர் வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

சிலர் வீடு கட்டுவது வீட்டை மராமத்து செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு திட்டம் இடுவதற்கான நல்ல நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட அவற்றை எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள்.

 

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் புதிய முடிச்சு ஒன்றை இடுவதற்கு தயாராகியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு குறைந்தது இரண்டரை வருடங்கள் உள்ள நிலையில், அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு ஆட்சியை தக்கவைக்க முயல்வதாகவும் பெரும்பாலும் நாட்டில் அடுத்ததாக தேசிய தேர்தல் நடைபெறும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

 

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து வருகிறார்கள். சிலர் தனுஷ் எப்படி இருக்கிறார் என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நடிகர் தனுஷை விவகாரத்து செய்து விட்டதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு என்ற நாடகம் இன்றுவரைக்கும் நாடகமாகவே இருக்கின்றதே தவிர எந்த விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்று மாவட்டத்தில் எந்தவித அபிவிருத்தியும் நடப்பதாகத் தெரியவில்லை.

இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அண்மையில் கௌரவ நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு லெட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒரு லெட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.

வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.

கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.

இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம்.

 

தேர்தலை சந்திக்கும் முதன் முறையிலேயே சூப்பர் ஸ்டாரோடு போட்டி போடுகிறார் விஜய். ரஜினிகாந்த் ரிஜிஸ்டர் செய்து வைத்த சின்னங்களை விஜய் கேட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்... கிராமப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மறைமுகமாக போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்குமாறு உத்தரவிட்டுள்ளார் நடிகர் விஜய்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜிக்கு பிறகு அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் ரஜினி-கமல் தான். இதில் கமல் அரசியலில் வருவேன் என கூறிய அடுத்தடுத்த நடவடிக்கைகளை விரைவாக எடுத்தார். கட்சிக்கு பெயர் வைத்து, கொடியை அறிமுகப்படுத்தி சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கி நூலிலையில் தோல்வியடைந்தார். ஆனால் ரஜினியோ பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வருவேன் எனக் கூறி இறுதியில் அரசியலில் இறங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி ரசிகர்களை ஏமாற்றினார்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது விஜய்-அஜித்தைத் தான். இதில் அஜித் திட்டவட்டமாக நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறிய நிலையில், விஜய்யோ எதுவும் பேசாமல் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

ஒரு ஒரு வருடமும் தனது படம் ரிலீசாகும் முன்பு நடைபெறும் இசை வெளியீட்டு விழாவின் போது, அப்போது நடைபெறும் அரசியல் நகர்வுகளை சூசகமாக கலாய்த்து தள்ளுவார் விஜய். அதனாலேயே அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பல அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை ஆரம்பித்த போது அதனை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவரும் விஜய் தான்.

அப்படியென்றால் அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற சந்தேகமும் அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்களில் 129 பேர் வெற்றியும் பெற்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவதாக கூறப்படவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய்.

இப்படியிருக்க தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 12,838 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும், 1,298 பதவிகளுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வர். தேர்தலில் விஜய் படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

ஐ.பி.எல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் 1214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்தனர்.

இதில் இறுதி பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 228 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 355 வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியவர்கள்.

இதில் 370 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள், 220 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் 48 வீரர்களும், ஒன்றரை கோடி பட்டியலில் 20 வீரர்களும், ஒரு 1 கோடி பட்டியலில் 34 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஏலத்தின் முதல் பட்டியல் ஏலத்தில் முதல் வீரராக அஸ்வின் பெயர் தான் வர உள்ளது. இதனால் முதல் வீரராக அஸ்வினை பெற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். முதல் பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட், பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்க வீரர்கள் குயின் டி காக், டுபிளசிஸ் , ஸ்ரேயாஸ் ஐயர், ரபாடா, டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர் தான் ஏலத்தில் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களது அடிப்படை விலை 2 கோடியாகும்.

பேட்ஸ்மேன்கள் பட்டியல் மெகா ஏலத்தில் 2வது பட்டியலில் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மேற்கிந்திய தீவுகள் ஷிம்ரன் ஹேட்மர் அவர் அடிப்படை விலையை ஒன்றரை கோடியாக நிர்ணயித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது அடிப்படை விலையை 1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்., படிக்கல், 2 கோடி ரூபாயாகவும், மணிஷ் பாண்டே ஒரு கோடி ரூபாயாகவும் , ராபின் உத்தப்பா,சுரேஷ் ரெய்னா, ஜேசன் ராய் , ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

ஆல் ரவுண்டர்கள் மெகா ஏலத்தில் 3வது பட்டியல் ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர்,இதில் ஷகிபுல் ஹசன், சி.எஸ்.கே. வீரர் பிராவோ தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இதில் இலங்கை வீரர் ஹசரங்கா ஒரு கோடி ரூபாயாகவும், மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டர் ஹோல்டர் தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடி ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளனர்.குர்னல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல் தங்களது விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். நித்திஷ் ரானா தனது விலையை1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.

எத்தனை வீரர்கள் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் 47 பேரும், மேற்கிந்திய திவுகள் வீரர் 34 பேரும், தென்னாப்பிரிக்க வீரர்கள் 33 பேரும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தலா 24 வீரர்களும், இலங்கையிலிருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து 17 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 5 வீரர்களும் நேபாள், ஜிம்பாப்வே, அமெரிக்காவிலிருந்து தலா ஒரு வீரரும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.