இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார். மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இந்தியா சென்று பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள லோஸ்லியா மரியநேசன் அண்மையில் வௌியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வௌியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
அவ்வாறான சில புகைப்படங்கள் இதோ
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூடும் அல்லது சுற்றுலாத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிட் 19 சவாலை சமாளிக்க உதவும், என்றார்.
தேவையான பொருட்கள்
இராசவள்ளிக் கிழங்கு - 1
தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப்
தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப்
சீனி - 1 - 11/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
குறிப்பு:
இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - 2 கப் வர வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்.
"ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மோசடியாகவோ அல்லது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவராகவோஅல்ல அவர் ஒரு அரசியல் கைதியாக இருப்பதனால் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்காதது ஏன் " என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காகவும் அவரது மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆபாச வழக்கு தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, மும்பையின் ஜூஹு பகுதியில் மொத்தம் 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை தனது மனைவியும் பாலிவுட் நடிகருமான ஷில்பா ஷெட்டி-குந்த்ராவுக்கு மாற்றியுள்ளார். இவர் ஆபாச படங்களை தயாரித்தார் என்றே விவாகரத்து செய்வதாக கடந்தவருடம் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது .
ராஜ் குந்த்ரா என்ற ரிபு சுதன் குந்த்ரா, காந்தி கிராம் சாலையில் உள்ள கினாரா பங்களாவின் முதல் தளத்தில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மாற்றியுள்ளார்.இந்த ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளுடன், முழு ஸ்டில்ட் கார் பார்க்கிங்கையும் நடிகர் தனது பெயருக்கு மாற்றியுள்ளார், Zapkey.com மூலம் அணுகப்பட்ட ஆவணங்களைக் காட்டினார், இது பொதுவில் கிடைக்கும் சொத்துப் பதிவுத் தரவை ஒருங்கிணைக்கிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கிட்டத்தட்ட 6,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன மற்றும் பரிமாற்றத்திற்கான முத்திரைத் தொகை ரூ.1.92 கோடி ஆகும். பரிமாற்ற பத்திரத்தின் ஆவணங்கள் ஜனவரி 21 அன்று மேற்கொள்ளப்பட்டன மற்றும் ஜனவரி 24 அன்று பதிவு செய்யப்பட்டது
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்றுமுன் தினம் (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமன்றி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல எத்தனோல் கடத்தல்காரரை கைதுசெய்து பிணையில் விடுவிக்க உதவியமை தொடர்பிலும் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது .
ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அருந்திக பெர்னாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பிரதமர் தலையிட மறுத்ததை அடுத்து அருந்திகா பதவி விலக நேரிட்டது.
எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் மற்றும் அறிவுறுத்தல்ளை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்,எம், டீ. தர்மசேன அறிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்.