14 வயது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாகிய சம்பவமும் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், இதற்கு காரணமான சிறுவனும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.
மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அந்த தொலைபேசியில் இருந்து தான் இணையத்திற்கு பிரவேசித்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.
யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுமியும் சிறுவனும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதேன தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. உக்ரேனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
உக்ரேனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அதே நேரத்தில் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் மீதமுள்ள எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது.
உக்ரேனில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவதானமாக இருக்குமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது உக்ரேனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
இலங்கை இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோல் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் இருப்பதாகவும் நெடுஞ்சாலையில் எப்போது, எங்கு வாகனங்கள் நிற்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
துறைமுகத்தில் தரித்து நின்ற டீசல் கப்பல் நிதிப் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் உள்ள பெட்ரோல் டேங்கருக்கு இன்னும் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மின்வெட்டு தொடரும் எனவும், இன்று நாடு ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தலவாக்கலையில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரின் மரண சடங்கில் மலையகத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார்.
மலையக அரசியல் களத்தில் சின்னத் தம்பி என அறியப்பட்ட இவர் மரண வீட்டுக்குச் சென்றதும் ஊடகவியலாளர்கள் இவரை கண்டு நெருங்கியுள்ளனர்.
உடனடியாக ஊடகங்கள் முன் தனது அரசியல் பேச்சை ஆரம்பித்த இந்த இராஜாங்க அமைச்சர் வடக்கில் மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாடு விஜயம் என வசனங்களை அவிழ்த்துவிடத் தொடங்கினாராம்.
மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரியர் குறித்தும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசாமல் இருந்ததால் அருகில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து தங்களது பிரச்சினை பற்றி பேசுமாறு கூச்சலிட்டுள்ளதுடன் மீனவர் பிரச்சினை பேசுவதாயின் இங்கிருந்து செல்லுமாறும் கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் தலையிட்டு இராஜாங்க அமைச்சரவை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
மரண வீட்டு சோகத்தில் சுற்றி இருந்தவர்கள் சற்று மது அருந்தி இருந்ததையும் மறைப்பதற்கில்லை.
இராஜாங்க அமைச்சர் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (25) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 5.15 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியினை சொல்லிருந்தேன். ஆதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி செயலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன்.
இன்றைய தினம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அதேபோன்று இங்கு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது, ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்கவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வந்த போது, மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றார்.
மக்கள் அவரை ஹு சத்தமிட்டு அனுப்பி வைத்தனர்.