web log free
January 19, 2026
kumar

kumar

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திரு.முதித பீரிஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கடந்த மே மாதம் 9ஆம் திகதி கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்திருந்தனர்.

பசில் ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பல முக்கிய தலைவர்கள் இந்த பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த இறுதி கப்பலில் 2,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை விசேட விநியோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, எரிவாயு ஏற்றிவந்த கப்பலொன்று நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த போதிலும் நேற்று பிற்பகல் வரை அதனை விடுவிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

3500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலுக்கு மேலும் 2.5 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

21வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 300,000 வாக்குகள் கூட பெறாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமை மக்களின் ஆணைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு சென்று சரணடைந்தார்.

இதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்கு முன்னதாக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரை கைது செய்வதற்காக கோட்டை நீதவான் பிறப்பித்த பிடியாணையை அவர் சரணடையும் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இறுதி தீர்ப்பொன்றை வழங்கும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் அவருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என கோட்டை நீதவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் பத்து  உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் பதவி விலகுவார்கள் . 

 

 

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ரசிகர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாயிலில் இருக்கும் பாதுகாவலர்களிடம் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன்களை ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்ததால் செல்போன்களை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக விஜபிகளுக்கு முதலைப் பண்ணை வழியாக தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை ஓரமாக உள்ளூர் வாசிகள் நடந்து சென்றதை அனுமதிக்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று (09) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்ட அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd