தற்போது சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. லாஃப் கேஸ் அதன் விநியோகத்தை பல மாதங்களாக கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது.
எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஏற்கனவே கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், டொலர் நெருக்கடி காரணமாக அவை தரையிறங்குவது சுமார் ஒருவாரம் தாமதமாகியுள்ளது.
லிட்ரோவின் உள்ளக வட்டாரங்களின்படி, கடந்த வாரம் பெப்ரவரி 28ஆம் திகதி முதல் லிட்ரோவிடம் எரிவாயு முகவர் இல்லை.
இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், நீண்ட கால விநியோக ஒப்பந்தத்தில் இருந்து விலகி, அவசரமாக இறக்குமதி செய்ய லிட்ரோ தயாராகி வருகிறது.
இதற்குக் காரணம் மிகக் குறைந்த விலையில் எரிவாயுவை வாங்க முடியும் என்று கணிப்பதனாலாகும்.
இதனால், மார்ச் மாதத்துக்குத் தேவையான 30,000 மெட்ரிக் டொன்களை வழங்க எந்த ஒரு விநியோகஸ்தர்களும் இதுவரை முன்வரவில்லை.
80% சந்தையை வைத்திருக்கும் லிட்ரோ நிறுவனங்களால் சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், லாஃப் கேஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சந்தையில் 20% பங்குகளை வைத்திருக்கும் லாஃப் கேஸ் நிறுவனம் சீர்குலைந்துள்ளது.
தொழில் மற்றும் எரிவாயு நெருக்கடியால் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், குறிப்பாக சுற்றுலாத் துறைக்கு அத்தியாவசிய எரிவாயு பற்றாக்குறையால் நெருக்கடி அதிகரிக்கும்.
இது தொடர்பாக லிட்ரோவின் தலைவர் தெசர ஜயசிங்கவிடம் விசாரிக்க லிட்ரோவினால் அவசர அழைப்பு மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அதுவும் வெற்றியளிக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள காணியை, கடந்த 2ஆம் திகதியன்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அனுமதிக்கப் பின்னர், அடையாளப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பகுதி, வெடிபொருள் செயலிழக்கும் சிறப்பு அதிரடிப்படையினரால், கடந்த 4ஆம் திகதி தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதலைப்புலிகளின் தயாரிப்பான “தமிழன் கைக்குண்டுகள்” 220 மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அழிப்பதற்கு நீதின்ற உத்தரவு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோர் வழக்குப்பதிவு செய்யாமல் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளனர்.
அதன்படி போலீசார் மனு ரசீது மட்டும் கொடுத்து விட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின்பேரில் மேலூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் நாகூர்அனிபா என்ற வாலிபருக்கும் காதல் இருந்தது தெரியவந்தது.
எனவே அவர்தான் சிறுமியை அழைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாகூர்அனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ந்தேதி சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றார்.
வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக காணப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சிறுமியை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகவில்லை.
இதனால் டாக்டர்கள் ஆலோசனைபடி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற விவரம் தெரியாததால் சிகிச்சையில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாகூர் அனிபாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைத்து நாகூர் அனிபா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
கடந்த 14-ந்தேதி திருமண ஆசை காட்டி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நாகூர் அனிபா அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராகிம் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் நாகூர் அனிபா பயந்துபோனார். இதனால் விஷம் (எலி பேஸ்ட்) வாங்கிய நாகூர் அனிபா அதை சிறுமிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அதனை துப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் சிறுமியை கொண்டு வந்து தனது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது வீட்டில் விட்டு விடுங்கள் என நாகூர் அனிபா கூறி சென்றுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாகூர் அனிபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபா தாயார் மதினா பேகம், உறவினர்கள் ரம்ஜான்பேகம் என்ற கண்ணம்மாள், ராஜா முகமது ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் நாகூர் அனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு எலி மருந்து கொடுக்கப்பட்ட விவரம் தெரியவந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
என்றாலும் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு மயக்கம் தெளிந்தால் தான் அவர் திருப்பூர் கடத்தி செல்லப்பட்டு எத்தகைய பாலியல் கொடூரத்துக்கு ஆளானார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கருதினார்கள்.
அந்த சிறுமி திருப்பூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால் போலீஸ் தரப்பில் இந்த புகார் மறுக்கப்பட்டது. எனவே சிறுமி மயக்கம் தெளிந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சிறுமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உண்மை தெரியாமலேயே புதைந்து போனது.
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவ் விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களவார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். 100 ஆவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. நிசான்கா (26) மற்றும் அசலன்கா (1) இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறிய இலங்கை அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இலங்கை அணியில் பதுன் நிஷாங்கா(61) ஒருபுறம் போராட, மற்ற பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இழந்தது. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டினார். அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால், முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி பாலோ ஆன் ஆனதால், மறுபடியும் தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை (RDX) வைத்திருந்த குற்றத்துக்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
2007 மே 28ஆம் திகதி இரத்மலானையில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த ட்ரக் மீது கிளைமோர் தாக்குதல்.
2009 பெப்ரவரி 7ஆம் திகதியன்று குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் தேர்தல் பேரணியின் போது மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தது.
2009 மார்ச் 13ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் தேவாலய விழா ஒன்றில் தற்கொலை குண்டுதாரி மூலம் அமைச்சர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 46 பேரை படுகொலை செய்யவும், அன்றைய ஜனாதிபதியை வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளில் உள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணி இன்று ஜனாதிபதி வீடு நோக்கி பேரணி சென்றது.
ஐக்கிய மகளிர் சக்தி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, உப தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ், செயலாளர் நிருபா, நிரோஷா அத்துக்கோரல மற்றும் உறுப்பினர்கள் பலர் இன்றைய தினம் (05.03.2022) கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இல்லத்திற்கு சென்று கையளித்தனர்.
குறிப்பாக மின்சார தடை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள் தொடர்பில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன்களையோ உதவிகளையோ வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாக வார இறுதி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள் குழுவுடன் தற்போது இலங்கை வந்துள்ள இராஜதந்திரிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதில்லை என்ற தீர்மானம் இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக சீன இராஜதந்திரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்திற்கான நிர்மாண ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை பிரதான பிரச்சினையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையும் இதற்குக் காரணம்.
இலங்கை தற்போது 16 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பெற்ற கடனையே திருப்பி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்க நேரிடும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.