web log free
November 19, 2025
kumar

kumar

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம உடல்நலக் குறைவால் காலமானார். 

இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். 

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம். 

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய  ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, காலியான பொது செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரனை ஏகமனதாக நியமித்தது. 

முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகின்றார்.  

மேலும் அரசியல் குழுவில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில், ஞாயிற்றுகிழமை 29ம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுவில் கலந்து பேசி அங்கே எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்படுவது எனவும் தீர்மானிக்கபட்டது.   

தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக திறைசேரியில் இருந்து 11 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நவ., 14ஆம் திகதி நடத்துவதாக அறிவித்தார்.

தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க  தெரிவித்ததாவது, தேர்தலை நடத்துவது தொடர்பான செலவினங்களை ஈடுசெய்வதற்காக தனது அலுவலகம் 11 பில்லியன் ரூபாவை கோரியதாக தெரிவித்தார். ஜனாதிபதி திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவே விரும்பவில்லை எனவும், அடிமட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை வெற்றி கொள்ளச் செய்யும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும் சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ இருக்கும் பக்கம் தோல்வி  என்று கூறுவது நயவஞ்சகர்கள் மற்றும் மனநோயாளிகளின் கூற்று எனவும் அவர்களை அங்கொடைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவராலும் எப்போதும் வெற்றிபெற முடியாது எனவும், 60 வருடங்களாக அநுர திஸாநாயக்க தரப்பினர் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

24.09.2024 திகதியிடப்பட்ட 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நவம்பர் 14ம் திகதி 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதி செய்துள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட நால்வர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதோடு அவர்கள் அமைச்சரவை அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்கள்.

புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமைச்சரவை அந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும்.

எனினும் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கிய பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சு செயலாளர்களும் நிரப்பப்பட உள்ளனர்.

இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd