web log free
February 05, 2026
kumar

kumar

தமிழரசுக்கட்சியின் பதில் தலைவராக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கெளரவ எம்.ஏ. சுமந்திரன் ஐயா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இடைவெளியின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் பதவி விலகினால் எஞ்சிய காலத்திற்கு இன்னொரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக சமகி ஜன பலவேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு வாக்களிக்கும் நபர்களின் வீட்டு முகவரிகளில் வேறு நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வீட்டில் உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை உள்ளிட்டு ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதே இதன் நோக்கம் என ஹிருணிகா பிரேமச்சந்திர கூறுகிறார்.

மோசடி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்க அணியினரே இதனை செய்து வருவதாகவும் முன்னாள் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்க சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சீன மக்கள் குடியரசின் மானியமாக 1888 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதற்காக 22 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், இத்திட்டத்தின் முதற்கட்டமாக மொரட்டுவ ராவத்தவத்த பிரதேசத்தில் 575 வீடுகளும் கொட்டாவ பிரதேசத்தில் கலைஞர்களுக்காக 108 வீடுகளும் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக தெமட்டகொட திட்டத்தில் 586 வீடுகளும் மஹரகம திட்டத்தில் 112 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்டமாக பேலியகொட பிரதேசத்தில் 615 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 5 இடங்களில் ஆரம்பிக்கப்படும் இந்த வீட்டுத் திட்டம் 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீடித்த உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பயிர்களை சேதப்படுத்தும் மரக்கன்றுகளை பிடித்து கருத்தடை செய்ய அரசு எடுத்த நடவடிக்கை முடங்கியுள்ளது.

போக்குவரத்து வசதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகள் இன்மையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீண்டும் காடுகளை வளர்ப்பதன் மூலம் சனத்தொகையை கட்டுப்படுத்தவோ அல்லது பயிர் சேதத்தை நிறுத்தவோ முடியாது எனவும் மேலும் சிக்கல்களையே ஏற்படுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

25 மில்லியனுக்கும் குறைவான வங்கி கடன் பெறுநர்களின் 99% பேருக்கு அரசாங்கம் 12 மாத கால அவகாசம் அளித்து, அவர்களின் கடன் தொகையை வங்கிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, பணம் செலுத்தும் திட்டத்தை ஒப்புக்கொண்டது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 முதல் 50 மில்லியன் ரூபா வரையிலான கடனாளிகளுக்கு 9 மாத கால நீடிப்பும், ஏனைய கடன் வாங்குபவர்களுக்கு 6 மாத கால நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பரேட் சட்டத்தை அமல்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியது.

வணிகங்களுக்கு நிவாரணம் என்பது கால நீட்டிப்பு மூலம் மட்டும் அல்ல என்று பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்பட்ட நிவாரணப் பொதியில், குறைந்த வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடன் மதிப்பீடுகளில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்படையான பொறிமுறையை வழங்குதல் போன்ற பல முக்கியமான நடவடிக்கைகளும் அடங்கும்.

பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பை உறுதி செய்வதே இந்த நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா தமிழ்செல்வன் நேற்று மாலை (டிசம்பர் 26) தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரை கடத்திச் செல்ல முற்பட்டதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் விபரங்கள் பொலிஸாரிடம் இருப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தம்மை கடத்த வந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என நேற்று மாலை (டிசம்பர் 26) அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாக, தாக்குதலுக்கு உள்ளான கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் முருகையா தமிழ்செல்வன் குறிப்பிடுகின்றார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த குறித்த நபர் தன்னையும், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரையும் திட்டியதாக முருகையா தமிழ்செல்வன் சக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

சக ஊடகவியலாளரை கடத்த முயன்ற இருவரையும் இன்று (டிசம்பர் 27) மாலைக்கு பின்னரும் பொலிசார் கைது செய்யத் தவறியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீரகேசரி, தினக்குரல், உதயன், தமிழ்வின் உள்ளிட்ட பல தமிழ் ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களாக பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள், மண், மணல் கடத்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் முருகையா தமிழ்ச்செல்வன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன். 

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடன்படிக்கை பொருத்தமற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறு விடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவைக் கண்டறிய முடியும். 

ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப் பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு நடக்கமுடியும்? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது.

 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் மன்மோகன் சிங் சிகிச்சை நேற்று இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை (28) தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இன்று (27) நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அதேவேளை, மன்மோகன் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று (27) காலை 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

தங்கள் சொந்தக் காணிகளையே
விடுவிக்கக் கோருகின்றனர் மக்கள்

- தென்னிலங்கை சிவில் சமூகத்தினரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

"இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன்."

- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் நேற்று புதன்கிழமை காலை வயாவியானில் நடைபெற்றது.

அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், "வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம். பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இந்த அரசின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம். அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம்." - என்றார்.

இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர்,

"2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்ட செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை எனப் பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப்போன்று மீள்குடியமர்ந்தார்கள். 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி.

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனையுடைய ஒருவர். எனவே, இந்த அரசின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.

இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையைத் தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன்." - என்றார்.

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd