web log free
October 24, 2024
kumar

kumar

 

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை சம்புத்தலோக மகா விகாரையை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மகா சங்கத்தினரை சந்தித்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் எமது நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (04) காலை விவசாய அமைச்சில் உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் இடம்பெற்றது.

இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியம் குறித்து, தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் திட்டமும், இந்தப் பருவத்துக்கான உணவுப் பயிர்த் திட்டமும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாயச் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களும் அழிந்துள்ளன.

தாழ்வான பகுதிகளில் மரக்கறி பயிர்களும் மழையினால் நாசமாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் தோட்டங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பச்சைப்பயறு தேவையில் 40 சதவீதத்தை இந்த சாகுபடியின் மூலம் பெற முடிந்ததாக கூறினார்.  

 

புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றும் (05) காலை தொடக்கம் பல அலுவலக புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்ற அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இடையில் சிகரெட் பிடிப்பது தொடர்பில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட 78 அலுவலக புகையிரதப் பயணங்கள் நேற்று (04) இடைநிறுத்தப்பட்டமையால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருக்கும் போது சுற்றுலா அமைச்சின் பணிகளை பார்வையிட நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் எவ்வித அதிகாரமும் இன்றி காணி அமைச்சின் பணிகளை பார்வையிடச் சென்று அலுவல்களை மேற்கொண்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு மாத்திரமே உரிய இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த வாரம் காணி அமைச்சுக்குச் சென்று அதன் நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து விசேட கலந்துரையாடலை நடத்தினார்.

அமைச்சின் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சில காணி உறுதிப்பத்திரங்களை திடீரென வழங்குமாறும், பத்திரப்பதிவுகளை ஒரு வாரத்திற்குள் பூர்த்தி செய்யுமாறும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று நாடு திரும்பியுள்ளார்.

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. 

என்டெக் 2.0 பதிப்பினூடாக 300 பட்டக்கீழ் பயிலுநர்களிற்கு புலைமைப்பரிசில்களை வழங்கும் SLTC ஆய்வுப் பல்கலைக்கழகம்.

தேசத்தின் மிகப்பெரியதும் கல்விப் புலமையின் அடையாளமுமான அரசசார்பற்ற பல்கலைக்கழகமான SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது 2023-204 ஆம் கல்வியாண்டிற்கான திறமை அடிப்படையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுகத்தினை அறிவிப்பதில் பெருமையடைகின்றது.

கல்வி வெற்றியை வளப்படுத்துவதிலான அதன் தொடரும் அர்ப்பணிப்புக்களுடன் ஆய்வுப் பல்கலைக்கழகமானது பலதரப்பட்டவாறான 25 இற்கும் மேற்பட்ட பட்டக்கீழ் நிகழ்ச்சித்திட்டங்களிற்கு 300 இற்கும் அதிகமான புலமைப்பரிசில்களை வழங்குகின்றது.

திறமை அடிப்படையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமானது தங்களது க.பொ.த. உயர் தரம் மற்றும் கேம்பிரிட்ஜ் அல்லது எட்டெக்ஸல் உயர்தர பரிட்சைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவர்களிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இப்பெருமைமிகு துவக்கமானது அதிசிறப்பான “சித்தியை பெற்ற மாணவர்களிற்கு அவர்களது கற்கைநெறி கட்டணத்தில் 60% கழிவு வரையில் வழங்குகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்> இலங்கை கல்வித்திட்டத்திலான ஒவ்வொரு ‘A’சித்தியும் ஐக்கிய இராச்சியத்தின் கல்வித்திட்டத்தின் கீழான ஒவ்வொரு ‘A* சித்தியும் மாணவர்களிற்கு அவர்களது கற்கைநெறி கட்டணத்திலிருந்ததான 20% கழிவினைப் பெற்றுத்தரும். குறைந்தபட்ச புலைமைப்பரிசில் விருதும் கூட மொத்த கல்வி கட்டணத்தில் குறிப்பிடத்தக்க 22% குறைப்பினை உறுதிப்படுத்தும்.

என்டெக் 2.0 நிகழ்ச்சித்திட்டமானது 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கற்கைநெறிகளது எண்ணற்ற தகுதியான மாணவர்களிற்கு நம்பிக்கை விளக்காக விளங்கி SLTC ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றது. SLTC பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவ கணக்கீடு மற்றும் தகவல் தொழிநுட்ப பொறியியல் விஞ்ஞான தொழிநுட்ப பீடங்கள் மற்றும் இசைப் பீடம் என்பன உள்ளடங்கலாக ஆறாகப் பிரிக்கப்பட்ட பீடங்களாக்கப்பட்டு இலங்கையின் அனைத்து அரசசார்பற்ற பல்கலைக்கழகங்களிலும் மிகப்பெரிய நிறுவனமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆகர்சமிக்க 25 பட்டப்படிப்புக்களை தற்போது வழங்குகின்றது.

இலங்கையில் வேகமாக வளரும் பல்கலைக்கழகமாக அறியப்பட்டதும் தென்னாசியாவிலே மிக்க புத்தாகமான பல்கலைக்கழகமாக கொள்ளப்படுவதுமான SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது கல்வித் தராதரங்களை மீள்வடிவமைப்பதனை தொடர்ந்தும் ஆற்றுகின்றது.

SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது அதன் பல்வேறு தனித்துவமான அம்சங்களினால் போட்டிகளிற்கு அப்பால் காணப்படுகின்றது. உலகத்தர நியமங்களை பேணுவதற்கான பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பினில் SLTC இன் கல்வி அதிசிறப்பான தரத்தினை முதன்முதலில் அங்கீகரித்த நிறவனமாக லான்செஸ்டர் பல்கலைக்கழகம் திகழந்ததுடன் டெய்கின் ஜேம்ஸ் குக் RMIT, ஆக்லன்ட் லிங்கன் பல்கலைக்கழகங்கள் போன்ற உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்கலாக மதிப்புமிகு கல்வி பங்குதாரர்களது விலைமதிப்பற்ற வலையமைப்பை அது கொண்டுள்ளது.

SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது கொழும்பு டிரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் அமைந்துள்ள சிட்டி கெம்பசுடன் விரிவடையும் பாதுக்கையிலான 35 ஏக்கர் அளவில் பரந்திருக்கும் முழு வதிவிட வளாகத்துடனுமாக கல்வி கட்டமைப்புக்களை வலுவூட்டி வளப்படுத்துகின்றது. பாதுக்கை வளாகமானது பூரண விடுதிகள்  கற்றல் பகுதிகள் விரிவுரை மண்டபங்கள் தனிச்சிறப்பான ஆய்வுகூடங்கள் விளையாட்டு வசதிகள் சிறிய அரங்குகள் மற்றும் பல அம்சங்களுடன் சிறப்பான பல்கலைக்கழக அனுபவத்தினை வழங்குகின்றது.

அதேசமயம் முன்னணி தகவல் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப கம்பனிகளிற்கு மத்தியில் அமைந்துள்ள SLTC இன் சிட்டி கெம்பசானது மாணவர்களிற்கு அவர்களது பட்டக்கீழ் படிப்பினைத் தொடரும் அதேசமயத்தில் உயர்தர பணிச்சூழலை அனுபவிக்கும் தனித்துவமான அனுபவத்தினையும் வழங்குகின்றது.

ஆய்வுப் பல்கலைக்கழகமானது என்டெக் 2.0 புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய மற்றும் தகுதியான அனைத்து மாணவர்களையும் அழைப்பதுடன் விருப்பமுடைய விண்ணப்பதாரிகள் ஆய்வு பல்கலைக்கழகத்தின் பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் புலமைப்பரிசில் மற்றும் அதனுடன் இணைந்த கழிவுகள்/ நன்மைகள் குறித்து SLTC இன் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.sltc.ac.lk தளத்திற்கு செல்வதன்மூலமோ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரியில் பல்கலைக்கழத்தினை தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 011 2100500 எனும் இலக்கத்தில் தொலைபேசி மூலமோ அறியமுடியும்.

 

 

 

 

மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிதளவு வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் வழங்கப்படும்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஒரே மதிப்பில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் மேலும் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார், மேலும் 14 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் சவாலான காலகட்டத்தில் பதவியை ஏற்ற அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக உவைஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்கள் மற்றும் ஒன்பது முன்னோடித் திட்டங்களும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அரச சேவையானது டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக வினைத்திறனுடையதாகவும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் “Digicon 2023-2030” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd