web log free
April 26, 2024
kumar

kumar

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை பெறுவதைத் தவிர்க்குமாறு அமைச்சரவை வழங்கிய உத்தரவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை வேட்பாளர் பிணை வைப்புப் பணத்தைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க சென்றதாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை சந்திக்க செல்லவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்று தெரண 360 நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இ தனை தெரிவித்தார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு கடப்பாடு இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தேர்தலுக்கான சூழலை தயார்படுத்தும் பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசியதாகவும் அதனால் தான் ஜனாதிபதியை சந்திக்க சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பிலும் தெற்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பு மருதானையில் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண்கள் குழுவினால் இது தெரியவந்துள்ளது.

மருதானையிலுள்ள விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 19 பெண்களை கைது செய்திருந்தனர் அதில் 11 பேர் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் அனுப்ப முடியாததாலும், வாழ்வதற்கு போதிய வருமானம் இல்லாததாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து சில தரகர்கள் வடமாகாணத்திற்கு வந்து தனியார் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. தரகர்கள் இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பு மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறைந்த நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அவர்கள் கூறினர். 

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மற்றொரு புதிய கூட்டணி உருவாக உள்ளது. இம்முறை விமல் வீரவன்ச, அனுர பிரியதர்ஷன யாப்பா, டலஸ் அலகப்பெரும மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஹெலிகொப்டர் சின்னத்தில் இணைய தீர்மானித்துள்ளது.

புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என பெயரிடப்படவுள்ளது. 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து இன்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய இந்த பயணி இலங்கையின் பட்டகன பிரதேசத்தில் வசித்து வந்தவர்.

அவர் இன்று (10) அதிகாலை 02.18 மணியளவில் தனது தாயாருடன் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு தனது தாயாரை அழைத்து வரும் வேளையில் இன்று (10) அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். 

பயணியின் சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா, பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 94507 குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் இந்த மரணத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (10) நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. 

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கஞ்சா கடத்தல், புதையல் அகழ்வு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று (09) காலை மொனராகலைக்குச் சென்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தமது காவலில் எடுத்து நீண்ட நேரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகநபர்கள் இந்த மோசடிகளுக்கு பிரதேசத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட 06 பேரை மொனராகலையில் உள்ள அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தின் கூரையில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தவிர, அவரது பொலிஸ் சாரதி, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் மற்றும் புதையல் வேட்டையாடும் ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இவர் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரத்தை எடுத்துச் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த ஜீப்பை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சோதனையிட்டனர்.

சந்தேக நபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நண்பர்கள் நால்வரும் ஜீப்பில் பயணித்த சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவுக்கு சொந்தமான மொனராகலை உத்தியோகபூர்வ இல்லத்தில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 550 கஞ்சா செடிகளை கண்டெடுத்துள்ளனர்.

15 கிலோ எடையுள்ள கஞ்சா கையிருப்பு உலர்த்துவதற்காக மேற்கூரையில் மறைத்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் படல்கும்புர பகுதியில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையில், சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று காலை மொனராகலைக்கு சென்றிருந்தது.

அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரி கடந்த (02) அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததோடு, ஏனையவற்றுக்கு மத்தியில் செலவு சரிசெய்தலுடன் கூடிய விலைச்சூத்திரம் தயாரிக்க முன்மொழியப்பட்டது. 

குறித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதி கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் அரச ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் முற்றாக குறைக்கப்படாது எனினும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

அதன்படி, இந்த கொடுப்பனவுகள் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக நேர விடுப்பு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் தவிர்த்து சம்பளத்திற்காக மாதாந்தம் 9300 கோடி ரூபாய் செலவாவதாக அவர் கூறினார். 

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுக வளாகத்தில் வைத்து கரையோர பாதுகாப்பு அதிகாரிகளை தாக்க முற்பட்ட 07 மீனவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (09) இரண்டு மீனவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலகம் மீதும் மீனவர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகள் கடலில் மோதியதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது கடலோர காவல்படை அதிகாரிகள் தலையிட்டு அதனை கட்டுப்படுத்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.