web log free
July 27, 2024
kumar

kumar

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பாரிய வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 7 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் உள்ளதாகவும் ஏனையவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பொழுதுபோக்கிற்காக அண்டனானரிவோ விமான நிலையத்திற்கு வந்தபோது மடகாஸ்கரின் குடிவரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். 

இந்தியப் பெருங்கடலில் நிக்கோபார் தீவுகளை சூழவுள்ள பகுதியில் இன்று (06) அதிகாலை 5.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உடமைகளுக்கோ உயிர் சேதங்களுக்கோ இதுவரை எந்த தகவலும் இல்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கும் நிக்கோபார் தீவுகளுக்கும் இடையிலான தூரம் சுமார் 1436 கி.மீ., இந்த நிலநடுக்கத்தால் இலங்கை பாதிக்கப்படவில்லை.

ஆசியாவிலேயே இலங்கை இரண்டாவது அதிகூடிய மின்சார விலையைக் கொண்டிருப்பதாகவும் மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களிடம் முறையான தீர்வுகள் இல்லை என்றும் எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய குற்றஞ்சாட்டுகிறார்.

ஒரு நாடு என்ற வகையில் நெருக்கடியிலிருந்து மீளத் தேவையான வெற்றிகரமான நடவடிக்கைகள் எதுவும் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் இதற்கு முன்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது அரசியல் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியதாகவும், ஆனால் இம்முறை அவ்வாறான குறிப்புகளோ விளக்கங்களோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மெகாவாட் மின்சாரம் எரிபொருளால் எடுக்கப்படும் எனவும், அந்தத் தொகை சம்பூரில் இருந்து வர வேண்டும் எனவும் திட்டம் இருந்ததாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தின் வடமேற்குக் கிளை மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்தே இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.

அந்த கடிதத்தின் பிரகாரம், எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மத்தியில் ஒரு வகை வைரஸ் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தொண்டை வலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை இதன் மூலம் காணலாம் என்றார்.

இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 12,496 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 9,435 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் துறையின் தரவுகளின்படி, இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

சுற்றுப்புற சூழலை கவனித்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு பரவுவதை குறைக்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளதால், அவர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்களின் அபிப்பிராயத்திற்கு அமைய நியமிக்கப்படும் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் ஆதரவை இலங்கை பெறாது என்றும் அவர் கூறுகிறார்.

பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய அதிபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடத்தின் மத்தியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தயாராக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அது பொய்யானது என பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் தலையீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். 

தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்திருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆகவே, சட்டத்திற்கு இணங்க தேர்தலை நடத்துவதாக இருந்தால், மார்ச் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.