web log free
April 19, 2024
kumar

kumar

ஜனவரி 17, 2023ல் சனிப்பெயர்ச்சி கும்ப ராசியில் நடப்பதால், 2023 முதல் 6 மாதங்களில் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்படும் என  ஜோதிட நிபுணர் கே.ஏ.யு. சரச்சந்திர கூறுகிறார்.

இதனால் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாகவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய சக்தியொன்று அதிகாரத்தைப் பெற்று அந்தத் தேர்தலிலிருந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் எனவும் சரச்சந்திர மேலும் குறிப்பிட்டார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மஹாவ வெவ்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களின் பொதுச் சபைக்கான தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மொத்த ஆசனங்களில் 62% ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

வெவ்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 30 உள்ளாட்சிகளில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் ஜனதா விமுக்தி பெரமுனா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஜனதா விமுக்தி பெரமுன 62 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 16 ஆசனங்களையும், சமகி ஜன பலவேக 14 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 9 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

முப்பது மஹாவ கூட்டுறவு உள்ளூராட்சிகளுக்கு நூறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், தேர்தலில் நடைபெற்ற 30 உள்ளூராட்சிகளில் 13 இடங்களுக்கு போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஜனதா விமுக்தி பெரமுனவிலிருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். 
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் விண்ணப்பத்திருந்த விண்ணப்பத்துக்கு, நுவரெலியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரது சொத்து விவரங்கள், கல்வி தகமைகள் மற்றும் தேர்தல்களில் போட்டியிட்ட வருடங்கள் தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி 02.10.2022 அன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.
 
 
இதற்கு வழங்கப்பட்டப் பதில் கடிதத்தில்,
 
அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
 
முத்துசிவலிங்கம் 1994, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
 
பழனி திகாம்பரம் 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும்,
 
வே.இராதாகிருஷ்ணன் 1999, 2004, 2009, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும்,
 
மயில்வாகனம் திலகராஜ் 2015ஆம் ஆண்டும்,
 
ஜீவன் தொண்டமான் 2020ஆம் ஆண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
அரசியல்வாதிகளின் கல்வித் தகவல்கள் வேட்புமனுக்களில் சேர்க்கப்படாததால் ''தேர்தல் ஆணையகத்திடம் அரசியல்வாதிகளின் கல்வி தகவல்கள் இல்லை'' எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் “RTI விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள “சொத்துகள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும். எனவே சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதற்கு அவர்களின் அனுமதி எதிர்காலத்தில் கோரப்பட்டு, அனுமதி கிடைத்தால் மாத்திரமே அந்தத் தகவல்கள் வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தவலறியும் உரிமைச் சட்டத்தின் 3(1) 5ஆம் பிரிவின்படி இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடமையில், கட்டுப்பாட்டில் உள்ள தவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே, உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய வழங்கிய தவல்களில் திருப்தி இல்லை என்பதால் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மேன்முறையீட்டுக்கு 14.11.2022 என திகதி குறிப்பிடப்பட்டு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “நீங்கள் கோரியிருக்கும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களின் அனுமதி கோரப்பட்டது.
 
இதன்படி, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க சம்மந்தப்பட்டவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியும்.
ஆனால் இதனை எதனையும் குறிப்பிடாமல் தகவல்களை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆலுவலகம் மறுத்துள்ளது.
 
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், எம்.கே சமன் ஶ்ரீ ரத்நாயக்கவுக்கு 28.11.2022 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என்பதால் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
நன்றி, பா.நிரோஷ் - ஊடகவியலாளர் 

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலானது காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்கள் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களை கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்ய முயற்சிக்கும்போது அவ்வாறான முறைப்பாட்டை சில காவல்நிலையங்கள் நிராகரிப்பதாகவும், இனிமேல் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரை பதவியில் இருப்பார் என்றும் தற்போதைய பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அனைவருக்கும் தானே பார்த்துக்கொள்ள முடியும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 100 முதல் 200  உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியுமா என அமைச்சர் சந்தேகம் எழுப்பினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலும் கம்பஹாவிலும் 20 இடங்களில் இன்று (28) முதல் முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டை விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் முட்டை விற்பனை செய்வது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்துரையாடினார்.

அங்கு ஒரு முட்டையை 55 ரூபாய்க்கு விற்க சங்க அமைச்சர் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, இன்று (28) கொழும்பு நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் முட்டை விற்பனைக்காக 20 லொறிகளை ஈடுபடுத்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு புகையிரத நிலையம், தெமட்டகொட, கொமபனி வீதி, தெஹிவளை, பத்தரமுல்ல, நுகேகொட, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையங்கள், தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் ஹோமாகம ஆகிய இடங்களில் இந்த முட்டைகள் விற்பனை செய்யப்படும்.

மேலும், வத்தளை, ஜாஎல, ராகம மற்றும் நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை, பேலியகொட போன்ற நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்வதற்கு லொறிகளை வைக்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான வர்த்தகர் திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அது கொழும்பு பிரதான நீதவான் விதித்த அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே.

இன்று (27) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று(27) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை வில்லைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.