web log free
September 05, 2025
kumar

kumar

அஸ்வெசும மூலம் கண் கட்டப்பட்டுள்ள மக்களை அந்த அடர்ந்த இருளிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு உள்ளது என்று சர்வஜன பலய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர கூறுகிறார்.

உலகில் எந்த நாடும் தனது மக்களுக்கு நிவாரணம் வழங்கி மீண்டதில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதனால்தான் உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளும் தங்கள் மக்களுக்கு தொழில்முனைவோர் மனநிலையை அளித்து முன்னோக்கி அழைத்துச் செல்கின்றன என்றும் திலித் ஜெயவீர கூறுகிறார்.

SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும்கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகிய இருவருக்குமானநிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால்சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கான வங்கியின் மையகொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால்செலுத்தப்படும் வியாபார கிடைப்பரப்பொன்றாக பெறுமதிசங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது.  VFC வியாபாரமாதிரியானது தத்தமது தனித்துவமான தேவைகளுக்கெனபிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார்ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும்வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய முயற்சியாக, பாலுற்பத்தி துறைக்கான VFC ஒழுங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டுநிறைவுசெய்துள்ளது. இத்துவக்த்துடனான ஒத்துழைப்புடன்முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை   SDB வங்கியின்குளியாப்பிட்டிய கிளை முகாமைத்துவம் செய்கின்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானதுகால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல்,கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவுஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன. இம்முயற்சிகள் உள்ளுர் பாலுற்பத்தி கைத்தொழிலினைவளர்ப்பதற்கும் விருத்திசெய்வதற்குமாககுறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வங்கியானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களதுதுறைகளில் அறிவூட்டுவதனை நோக்கமாக கொண்டவிழிப்புணர்வு அமர்வினை நடாத்தியது. இவ்வமர்வானதுஅவர்களது உற்பத்தி மற்றும் நிதியியல் அறிவினைவளப்படுத்துவதற்கு அத்தியாவசியமான பெறுமதிமிக்க அறிவுமற்றும் திறனை உள்ளடக்கியிருந்தது.

இத்துவக்கம் குறித்து கருத்துரைத்த, SDB  வங்கியின்நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கபிலஆரியரத்ன அவர்கள், 'SDB வங்கியின் பெறுமதி சங்கிலிநிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள் மூலமாகதுறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமதுஅரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எமது முதலாவதுசெயற்றிட்டமாக, CEETEE உடனான எமது கூட்டுறவானதுபாலுற்பத்தி துறையின் அபிவிருத்திக்கான எமதுஅர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது. அத்தகையதுவக்கங்கள் அக்குறித்த துறைகளை உயர்த்துவதுமாத்திரமின்றி தேசிய அளவிலான அபிவிருத்திக்குபங்களிக்கக்கூடிய பரந்த பொருளாதார பரப்பிற்கும்பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம்' என்றார்.

பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடுஉற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்பு தொழிநுட்பகொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கியவிடயங்களை உள்ளடக்கியிருந்தது. வெளிவாரி நிபுணர்கள்மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில்நடாத்தப்பட்ட,இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்திவிவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும்திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொருஅடியாக விளங்கியது.

சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள்,சுயதொழில்வாண்மையாளர்கள், மற்றும் முன்னேற்றகரமானசிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கனைஎப்பொழுதும் ஆதரிக்கும் வங்கியாக, அதே போன்று உள்ளுர்பாலுற்பத்தி துறை அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடையதாகவிளங்குவதுடன் இத்துறையில் நிலைபேறான அபிவிருத்திமற்றும் வளர்ச்சியினை பேணுவதற்கு பங்குதாரர்களுடன்தொடர்ந்தும் கூட்டிணைய எதிர்பார்த்துள்ளது

 

SDB வங்கி:

வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளை வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளை பொருத்தமான வகைகளில் வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. நாட்டை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, மகளிரை வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில்  ஈடுபட்ட பொறியியல் பீட  இரண்டாம் மற்றும்  மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 22  பேர், கல்வி நடவடிக்கைகளிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  பொறியியல்  பீடத்தின்  முதலாம்  ஆண்டு  மாணவர்களை பகிடிவதைக்கு  உட்படுத்தியதாக தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன்  தெரிவித்தார்.மூன்று வாரங்களுக்கு  முன்னர்  இடம்பெற்றிருந்த இந்த பகிடிவதைச் சம்பவம்  குறித்து  பல்கலைக்கழக  நிர்வாகத்துக்கு  கடந்த 19 ஆம் திகதியே   முறைப்பாடு செய்யப்பட்டது.

 

 

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. 

இதனையடுத்து, நேற்றிரவு கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், 12 நாள்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றுவந்த இஸ்ரேல் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சண்டை நிறுத்தத்தை ஈரான் அறிவித்திருப்பதாகவும், இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் குறிக்கவில்லை என்று கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, ​​கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விஜேபால மேலும் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஆயுதத்தை எடுத்துச் சென்று துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என சபை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம், ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது.

இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான டி. ஏ. காமினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 ஏப்ரல் (21) அன்று ஏராளமான மக்களின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் அடுத்த மாதம் புதன்கிழமை (09) நடைபெற உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கும் குறுகிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்தைத் தடுப்பது அல்லது சீர்குலைப்பது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று (22) அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, எதிரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்கு மூடுவது அதன் விருப்பங்களில் ஒன்றாகும் என்று தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

உலகின் எண்ணெயில் கிட்டத்தட்ட 30 சதவீதமும், உலகின் திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) மூன்றில் ஒரு பங்கும் இந்த ஜலசந்தி வழியாக தினமும் செல்கின்றன என்றும், அதை மூடுவது உலகளாவிய விநியோகத்தை உடனடியாகக் குறைக்கும் என்றும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தெஹ்ரான் கூறியது.

ஈரான் இஸ்ரேலுடன் விரோதப் போக்கைத் தொடங்கியதிலிருந்து, ஈரானிய அதிகாரிகள் இந்த ஜலசந்தியை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.

இதற்கிடையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினரான மூத்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்மாயில் கௌசாரி, அமெரிக்க படையெடுப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் மௌனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, உலக எரிசக்தி வர்த்தகத்தில் இந்த முக்கிய புள்ளியை மூட ஈரானிய நாடாளுமன்றம் இப்போது முடிவு செய்துள்ளது என்றார்.

ஜலசந்தியை மூடுவது குறித்து சட்டமியற்றுபவர்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஜலசந்தி மூடப்பட்டால், அது மூடப்பட்ட முதல் வாரத்தில் எரிபொருள் விலைகள் சுமார் 80% அதிகரிக்கும் என்றும், மாற்று வழிகள் அதிக விலை கொண்டதாக மாறும் என்பதால், இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகப் பாதை என்பதால், இங்கு ஏற்படும் ஒரு தடங்கல் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும்.

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் கட்டமாக 55 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இன்று(21) ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இதற்காக 14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd