web log free
November 22, 2025
kumar

kumar

கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளிகள் தங்களிடமிருந்து பணம் வசூலித்த எம்.பி.க்களை அம்பலப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வரி வசூலிப்பவர்கள் போல ஒவ்வொரு மாதமும் குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று எம்.பி.க்கள் பணம் வசூலித்து வருவதாக ஜனாதிபதி கூறினார்.

சில அமைச்சர்கள் பல மாதங்களாக இந்தக் குற்றவாளிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் பகுதியின் தொடக்க விழாவில்  உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு கூறினார்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மேலோட்டமாக அரசுக்கு ஒத்த ஒரு கருப்பு அரசை உருவாக்கியுள்ளதாகவும், நாட்டின் சட்டப்பூர்வ இராணுவம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

"போதைப்பொருட்களை அடக்குவதற்காக இருக்கும் காவல்துறையினர், அந்தக் குற்றவாளிகளின் போதைப்பொருட்களை எடுத்துச் சென்றனர். குற்றங்களை அடக்குவதற்கான கொள்கை உடன்பாட்டைக் கொண்ட அரசியல் அதிகாரம், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. சட்டவிரோத பாஸ்போர்ட்டுகளைத் தடுக்க இருக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, அவர்களுக்கான பாஸ்போர்ட்டுகளை உருவாக்கியது. சட்டப்பூர்வமாக கார்களைப் பதிவு செய்ய இருக்கும் நிறுவனம் அவர்களின் கார்களைப் பதிவு செய்தது. கூடுதலாக, அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பையும் வழங்கியிருந்தன," என்று ஜனாதிபதி கூறினார்.

மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, வலஸ்முல்ல நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்ததை அடுத்து, விசாரணைக்காக 7 நாட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் உத்தரவு

அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது. 

அவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"பெகோ சமன்" மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோர் கடந்த 05 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வாழ்ந்திருக்கின்றனர். 

இவ்வாறானவர்கள் தான் தம்மால் இவற்றிலிருந்து செல்ல முடியாது எனக் கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் கொழும்பில் இல்லங்கள் உள்ளன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக உத்தியோகபூர்வ இல்லங்களில் வாழ்வதற்கு அடிமையாகியுள்ளனர். இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர். 

எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பொது சட்டத்தின் கீழ் தற்போதைய ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளும் நீக்கப்பட்டுள்ளன. மக்கள் இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்ட நிறுவனமொன்றின் ஊடாக குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம் கோரியிருக்கின்றார். சிலர் இல்லத்திலிருந்து வெளியேறிருந்தாலும் பொருட்களை ஒப்படைக்கவில்லை.

இவர்கள் முழுமையாக வெளியேறியதன் பின்னர் அந்த இல்லங்களை எவ்வாறு பயன் மிக்கதாக பயன்படுத்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும். அவற்றின் பெறுமதி, சந்தைப் பெறுமதி என்பவற்றை கணித்து பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்கும் வகையில் அவை பயன்படுத்தப்படும்.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் பல மில்லியன் வாடகையை கட்டிடங்களுக்காக செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிறுவனங்களை இவற்றுக்கு மாற்ற முடியுமா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க இது தொடர்பில் கூறுகையில்,வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த “தியாக தீபம்” எனப்படும் திலீபனின் 38 ஆவது நினைவு

தின நிகழ்வுகள் நேற்று (15)  திங்கட்கிழமை  யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றன. யாழ்ப்பாணம், நல்லூர் பிரதான வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், உண்ணாவிரதத்தை   ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமகைின. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து  மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துதல்,தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குதல்,ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை களைதல்,தமிழர் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவதை நிறுத்துதல் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளார். 

சம்பத் மனம்பேரி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரியின் சகோதரர் ஆவார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியல் திட்டமான "மகிந்த காற்று, நாமல் வாசனை" விரைவில் தொடங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தங்கல்லையில் தங்கியிருந்தபோது கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி தனது பதவியை இழந்த பிறகு "மகிந்த காற்று" திட்டத்தைத் தொடங்கியதைப் போலவே, இந்தப் புதிய அரசியல் திட்டமும் தொடங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உட்பட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கான தனது பயணத்தை முடித்த பின்னர், ஜனாதிபதி திசாநாயக்க, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்ல உள்ளார்.

ஜப்பானில், இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் உலக எக்ஸ்போ சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளார், மேலும் ஜப்பானின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் உள்ளார்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd