web log free
April 26, 2024
kumar

kumar

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் வலையமைப்பு தொடர்பான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்ற அவர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றினார்.

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேற்று இரவு அறிவித்தது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது.

அதில் கொழும்பு நகரைச் சேர்ந்த வியாபாரியான முகமது பாருக் (வயது 57) என்பவர் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் சோதனைகளை முடித்து கொண்டு வெளியே வந்தார்.

விமான நிலைய வளாகத்தில் வந்தபோது முகமது பாருக் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக விமான மருத்துவ குழுவினர் விரைந்து வந்து முகமது பாருக்கை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், முகமது பாருக் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இது பற்றி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

- தினத்தந்தி 

கொழும்பு வாழைத்தோட்டம் புனித செபஸ்தியான் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த இருவர், சென். செபஸ்டியன் தெருவில் உள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைத்தோட்டத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பான சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 பேரும் எதிராக 10 பேரும் வாக்களித்துள்ளனர்.

லக்ஷ்மன் கிரியெல்ல, அஜித் மான்னப்பெரும, அசோக் அபேசிங்க, அநுர திசாநாயக்க, விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, வாசுதேவ நாணயக்கார, வீரசும வீரசிங்க, சரித ஹேரத் மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இராஜாங்க அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தொலைக்காட்சியில் இரவு நேர செய்தியை பார்க்கும் மக்கள் இவ்விடயத்தை வேறுவிதத்தில் புரிந்துக்கொள்ள கூடும்.

அமைச்சுக்கள் அதிகரிக்கப்பட்டுவிட்டதாக மக்கள் குழப்பமடைவர்.

எனினும் ஒருவிடயத்தை இந்த இடத்தில் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இராஜாங்க அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போவதில்லை. அவர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு அமைவாகவே பணியாற்ற வேண்டும்.

இதன் அடிப்படை விடயத்தை எடுத்துக்கொண்டால் உதாரணமாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அமைச்சின் கீழ் 40 திணைக்களங்கள் உள்ளன. இவை அனைத்தையும் அமைச்சரவை அமைச்சினால் கண்காணிக்க முடியாது.

அதேபோன்று அமைச்சர் ரமேஸ் பத்திரணவின் அமைச்சின் கீழ் 72 திணைக்களங்கள் உள்ளன.

இந்த திணைக்களங்களின் அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்து 18 அமைச்சுக்;கள் மட்டுமே இருந்தன.

எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியன் பின்னரே அரசாங்கமானது இராஜாங்க அமைச்சர்களை நியமித்தது.

இந்தத் திணைக்களங்களின் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த நியமனங்களின் நோக்கமாகும்.

எனவே இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித வரப்பிரசாதங்களும் கிடைக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதை இந்த இடத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இதனை மறந்துவிடக்கூடாது.

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.
பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தையில் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுமானத் துறையில் பல பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கும் அதிகாரசபை ஆராய்ந்து வருகிறது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 ஜூன் வரை அரச மற்றும் தனியார் விநியோகஸ்தர்களால் விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சிமெந்து மூடையின் சராசரி விலை 187 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 98 சதவீதம் அதிகரித்துள்ளதாக கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்த நிலையில் காலமானார்.

இன்று (08) பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களில் ராஜபக்ச குடும்பத்தின் ஒரேயொரு அமைச்சராக இருந்த ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை அல்லது ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்த சமயத்தில் இது நடந்துள்ளது.

இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அவருக்கு இராஜாங்க அமைச்சராக நியமனக் கடிதத்தை வழங்கி சில ஆலோசனைகளை வழங்கியதைக் காண முடிந்தது.

அங்கு ஜனாதிபதியின் உரைக்கு இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ சம்மதம் தெரிவித்து “சரி சார் நன்றி” என்று கூறிவிட்டு நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.