web log free
July 27, 2024
kumar

kumar

நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிசுமண தேரரை இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக பொரளை சிறிசுமண தேரர் நேற்று (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.


இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பதுடன், கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இன்றைய தினம் வேலை நாள் என்ற போதும் கூட கொழும்பில் அதிகளவில் மக்கள் நடமாட்டத்தை காண முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்

இரத்தினபுரி - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஊர்வலம் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

'அடக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் ஜே.வி.பி கலந்து கொள்ள வாய்ப்பில்லை. 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாவிற்கும், ஒரு பால் தேநீர் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய பொரளை சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனியான குழுவாக அமைவதற்கு மற்றுமொரு அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் மொட்டு எம்.பி.க்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக இணையாமல் தனியான குழுவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் இக்குழு தனித்தனியாக ஒழுங்கமைக்க தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பில் இருப்பதாக முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் திலினியின் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் இந்த பெண்ணிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்களின் சம்மதத்தின் அடிப்படையில் அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை விரைவில் தயாரித்து அதற்கேற்ப கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜன உட்பட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான பிரபல பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டும் பணிகளை ஆரம்பிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.