web log free
April 28, 2024
kumar

kumar

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசடி வீதி குருமன்வெளி-12 பிரதேசத்தைச் சேர்ந்த (19) வயதுடைய சசிக்குமார் கஜானணன் என்பவரே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை, மதிய உணவருந்தி விட்டு வெளியில் சென்ற போது குறித்த நபரின் தாயார் அவரின் உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனை அவதானித்த தாய் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை உடைத்து உட்சென்ற போது குறித்த இளைஞன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதனையடுத்து தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதனை கடமையில் இருந்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த இளைஞன் அதே பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவரை காதலித்து வ்ந்ததாகவும் யுவதியின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட குறுந் தகவலின் பின்னரே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு பகுப்பாய்வின் படி, Omicron துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு இருக்கும் பிறழ்வுகள் காரணமாக நடத்தை பெரும்பாலும் டெல்டா வகையைப் போலவே இருப்பதால் அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் என்று உலக விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர் என்று பேராசிரியர் ஜீவந்தரா வலியுறுத்துகிறார்.

முந்தைய நோய் அல்லது தடுப்பூசிகள் மூலம் உடலில் கட்டமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இந்தப் புதிய துணை வகைக்கு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் பேராசிரியர் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த நாட்டில் பரவி வரும் கோவிட் (B.A 5) உப வகை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக அமையலாம் என டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உயர் பணவீக்கம் காரணமாக சுமார் 630,000 இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக உணவுத் திட்டம் இதனைக் காட்டுவதாகவும், அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள், உரம் போன்றவற்றைக் கூட வழங்க முடியாமல் இலங்கையர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில்  ஆரம்பமான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடுகளை அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய பசிபிக் பிராந்தியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர்ச் சூழல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு யுத்த மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் மீண்டு வருமென இலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்பார்த்தது.

ஆனால், எமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும், மக்களின் வாழ்க்கை சீர்குலைவுகளும் தாங்க முடியாதவை. நான் மேற்கூறிய விடயங்களை நிறுவாமல் யுத்தம் முடிவடைந்த பின்னர் நெருக்கடி நிலைக்குச் சென்ற நாடு என்பதற்கு இலங்கை உதாரணம் என்று கூறுவது வருந்தத்தக்கது.

இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்க்கின்றேன் என்று அவர் கூறினார்.

நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. 

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சேகர் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, முருகன், சுப்பையா, சசி என 6 பேர் சென்ற விசைப்படகு இன்ஜின் பழுது ஏற்பட்டு தலைமன்னார் அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ் ரணஜெயா என்ற ரோந்து படகு, இன்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகினை மீட்டனர்.

முதற்கட்டமாக 6 மீனவர்களுக்கும் உணவளித்த இலங்கை கடற்படையினர் பழுதான விசைப்படகின் இன்ஜினையும் பழுதுபார்க்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் இயந்திரக் கோளாறை சரி செய்ய முடியாததால் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையிலும் ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகை கடற்படையின் ரோந்து படகு மூலம் இழுத்து வந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மற்றொரு விசைப் படகிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இலங்கை கடற்படை எல்லைகளை பாதுகாப்பதுடன் மனிதநேய உதவிகளை செய்வதிலும் முன் நிற்கும்'' என தெரிவித்துள்ளது. 

தேசிய எரிபொருள் அட்டை Q.R. முறையில் நேற்று (31) இரவு வரை 50 இலட்சம் வாகனங்கள்  எரிபொருளைப் பெற பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 1,140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்க உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அந்த 1,140 எரிவாயு நிலையங்களில், 964 சிபெட்கோ நிலையங்கள் என்றும் ஐ.ஓ.சி. 176 நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும், அந்த நிரப்பு நிலையங்களுக்கு நேற்று 10 மில்லியன் லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் எரிசக்தி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பதிவு செய்யப்பட்ட 50 லட்சம் வாகனங்களில் 2,891,260 மோட்டார் சைக்கிள்கள், 876,158 முச்சக்கர வண்டிகள் மற்றும் 651,314 கார்கள் உள்ளடங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

ரணில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றாலும் தனக்கு செல்வதற்கு வீடு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீடற்றவர் வீட்டிற்கு செல்வதற்காக ஊர்வலம் செல்வதில் அர்த்தமில்லை, எனவே தயவு செய்து இவ்வாறான காரியங்களை செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், கண்டி மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

"நீங்கள் தயாராக இருந்தால், ஒரு பெரிய கூட்டத்தை வரவழைக்கவும். ஆறு மாதங்களுக்குள் எனது வீட்டைக் கட்டுங்கள். வீட்டைக் கட்டி, நான் அங்கு சென்ற பிறகு, ரணிலை வீட்டிற்கு செல்லுமாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்ய வாருங்கள், கிராமத்தைக் கட்டுங்கள், அல்லது எனது வீட்டைக் கட்டுங்கள். அதில் ஒன்றைச் செய்யுங்கள்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மீன்பிடி படகு உரிமையாளர் ஆவார்.

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு வலை கியர் எடுப்பதற்காக வேனில் மற்றுமொரு நபருடன் வந்துள்ளார்.

அப்போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், வலைகளை ஏற்றிக் கொண்டிருந்த அவரை துப்பாக்கியால் சுட்டதாக, பொலீசார் தெரிவித்தனர்.

டி. 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம், இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

"சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு தாம் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

எனினும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் தாம் பங்கேற்பதாகவும் தம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

நாட்டினுடைய பிரச்சினை, நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காதுவிட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. எனவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.

கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார்.

கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது.

இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8% ஆல் குறைந்துள்ளது.

மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% ஆலும் குறைந்துள்ளது.