web log free
September 19, 2024
kumar

kumar

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெண்ணெய் முறையாக விநியோகிக்கப்படும் என்றும், விலையை 87 ரூபாவிலிருந்து மாற்றியமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதால், மண்ணெண்ணெய் விலையும் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பாதித்துள்ளனர். ஒருசில பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்றம் நேற்று (10) உரையாற்றும் போதே மேற்கண்வாறு அவர் தெரிவித்தார்.   

இதேவேளை மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. அவ்வாறான நிலைமையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்பட்டு 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்றார். 

 கடற்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்துகிறார்கள். எனவே, எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்படும் என்றார். 

ஆப்பம் மற்றும் முட்டை ஆப்பத்தின் விலை உயர்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில பிரதேசங்களில் ஒரு ஆப்பம் தற்போது 60 முதல் 65 ரூபாய் வரையிலும், முட்டை ஆப்பம் 120 முதல் 130 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

முட்டை விலை பாரிய அதிகரிப்பு மற்றும் காஸ் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த விலை உயர்வால், ஆப்பம் மற்றும் முட்டை ஆப்பத்தின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் ஆப்பம் பற்றி வெகுவாகப் பேசப்பட்டது. காரணம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக தன்னை வௌிப்படுத்துவதற்கு முதல்நாள் மாலை தங்களுடன் அமர்ந்து ஆப்பம் சாப்பிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் கூறப்பட்டது. இதனால் மைத்திரிபால சிறிசேனவை ஆப்பக்காரர் என்றெல்லாம் அழைத்தனர். 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு சபையின் 15 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பதவிக்கு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அர்ஜுன ரணதுங்கவை நியமித்துள்ளார்

கொள்ளுப்பிட்டியில் உள்ள டர்டன்ஸ் வைத்தியசாலையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் பல வந்துள்ளன.

தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையின் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

எதிர்வரும் கல்விக் கொள்கையில் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான பருவப் பரீட்சைகள் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலப் பரீட்சைகளுக்குப் பதிலாக மட்டு மூலம் தொடர்ச்சியான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உத்தேச கல்விக் கொள்கைகளில் மாணவர்களின் பரீட்சை சுமை குறைக்கப்படும் என்றார்.

கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும், நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மை காரணமாக திட்டமிடப்பட்டதை விட ஒருவாரம் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஒருவாரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உயர்தரப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திற்கு மாற்றியமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். "ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஒரு வாரம் தாமதமாகும். ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவுகளை வெளியிடுவோம்" என்று அவர் கூறினார்

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் சிவாஜிலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, தான் அதிபராக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். இருப்பினும், அந்தக் கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைபடவில்லை.

இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம்; சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே, இலங்கை அரசு அவா்களுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழா்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவா்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

இன்றைய இலங்கையில் ஈழத்தமிழா்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீா்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும். இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவா்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழகப் பகுதிகளை ஈழத்தமிழா்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீா்வாகும்.

சா்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சா்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உள்பட சா்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்னையை இந்தியா உற்றுநோக்கி வருகிறது. இந்திய அரசு, இலங்கையில் சீனாவின் இருப்பை விரும்பவில்லை. இலங்கைக்கு பல நூறு கோடி உதவிகளை இந்தியா அளித்துள்ளதை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வியாபாரத்தளம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில், இலங்கையில்  மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை பணிபுரிய அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளின் பணி நேரங்களை கருத்திற்கொண்டு, அவுட்சோர்சிங் (நிறுவனத்தின் பணிகளை, நிறுவனத்துக்கு வெளியே இருந்து மேற்கொள்ளும் முறை) துறைகளில் உள்ள பல வணிக நிறுவனங்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்களை இரவில் பணியமர்த்த அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கொண்ட சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1954 ஆம் ஆண்டின் கடை மற்றும் அலுவலக ஊழியர்களின் சட்டத்தின் 19வது இலக்கத்தை, திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பேருவளை நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பேருவளை பொலிஸ் இரவு ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை தாக்கியதோடு, கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடையூறு விளைவித்த 29 வயதுடைய ஒருவர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், நண்பர்கள் குழுவுடன் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர் பயணித்த காரில் பேருவளை நகரில் மக்கள் கும்பலுடன் தவறாக நடந்துகொண்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்தவுடன் முச்சக்கரவண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட சந்தேக நபரை பொலிஸ் ரோந்து முச்சக்கரவண்டியும் அடக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவ்விடத்திற்கு வரவழைத்து சந்தேக நபரை கைது செய்ததாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வைத்தியரிடம் அழைத்துச் சென்ற பொலிஸ் குழுவினர், அவர் அதிக போதையில் இருந்ததை உறுதிப்படுத்தியதாகவும், சந்தேக நபரை விடியும் வரை பொலிஸ் அறையில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வசந்த யாப்பா பண்டார, திலக் ராஜபக்ஷ மற்றும் சமிந்த விஜேசிறி ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ​தெரிவித்துள்ளனர்.

எம்.பி.க்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முறையானதா இல்லையா என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா பண்டார இனந்தெரியாத அழைப்பாளர் ஒருவர் தாம் பாராளுமன்றத்தில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியதாக கூறினார்.

ஒரு மர்மமான அழைப்பாளர் என்னைத் தொடர்புகொண்டு, நான் சபையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.

உரையாடல் பதிவுகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன், இது குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சபாநாயகரிடம் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.