web log free
July 27, 2024
kumar

kumar

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக, கொவிட் தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை எனவும், உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொவிட் அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் வாரத்திற்குள் எரிபொருளை ஏற்றி வரும் 5 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்முலம் நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருக்கும் என தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபைக்கும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்குவதற்கு CPC தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மின்சார சபை எரிபொருள் இருப்புக்களை பெற ரூபாவில் செலுத்த வேண்டும் என விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கமைய 155 வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் சரவஸ்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது எனவும் கூறினார்.

3 மாதங்களுக்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகுப்புவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ,வங்கதேசத்திலோ,ஈரானிலோ,ஈராக், இந்தோனேசியாவிலோ சட்டப்பூர்வ முத்தலாக் கிடையாது என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது மதச்சார்பற்ற தேசத்தில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் அளித்துள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்.

லாஸ்லியா கிளாமர் லுக்கில் தற்போது, வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

இவர் நடத்தும் போட்டோஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா தன்னுடைய பின்னழகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளதால், அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

 

 

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல அரசியல் கட்சிகள் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பில் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டுக்காக உழைக்கக் கூடிய பல சகோதர அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒன்றுபடும் என்றார். அடுத்த தேர்தலில் இந்த கூட்டணியின் மூலம் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது நாடளாவிய ரீதியில் நகர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கையில் இவ்வாறான கட்சி அமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறிசேன வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக உள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

எனவே, அரசாங்கத்தை தாம் தொந்தரவு செய்யப்போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டு மக்களின் பிரச்சினைகளில் தமது கட்சி தலையிடும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் நீதி கிடைக்கவில்லை என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயப் பரப்புகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது  

    என அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சில அமைச்சுக்களில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பான ஆராயப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சர்களின் விடய தானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகும் வரை நீடித்ததுள்ள குழப்ப நிலை என்பன தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார்.

ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்துவதற்காக வாக்கு எந்திரம் உள்ள பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. ஏஜெண்ட் கருத்துக்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மேலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவை புறக்கணித்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்ட் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

இதன் காரணமாக அல்அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.