web log free
September 08, 2024
kumar

kumar

 

உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஈ.வலயத்துக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும் எஃப் வலயத்துக்கு பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை ஈ வலயத்துக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை எஃப் வலயத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டும், P,Q,R,S வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை T,U,V,W வலயங்களுக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை P,Q,R,S வலயங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று நாடு உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மக்களிடம் மருந்து பொருட்களை கொண்டு சேர்க்காத அரசு. பனடோல் மாத்திரையை மக்களிடம் கொண்டு சேர்க்காத அரசு. மேலும், குழந்தைகளுக்கு பால் மா கொடுக்காத அரசு. நெடுஞ்சாலைகள் அமைக்கத் தெரியாத அரசு. அப்படி அனுதாபம் இல்லாத மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது. இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? இது மக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான அவமானம். பால்  மா, மருந்து, எண்ணெய், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது மிகப்பெரிய அவமானம். எந்த வழியும் இல்லை. நாடு இப்போது உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளது. என சம்பிக்க தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை வீட்டில் சேகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை தரக் கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் கனவில் நினைத்தது கூட நடக்க இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுபகாரியங்கள் கைகூடி வரும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் உண்டாகும்.

மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்டநாள் பிரச்சினைகளை போகிற போக்கில் விட்டுவிடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதலாக அதிக ஈடுபாடு தேவை.

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற முடிவை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். மூன்றாம் மனிதர்களுக்காக கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் கவனம் தேவை.

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் முன்கூட்டியே யோசிப்பது நல்லது. செய்து முடித்த பிறகு யோசிப்பதை தவிர்க்கவும். வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றியை காண கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தேவையில்லாத வம்பு வழக்குகள் வந்து சேரலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்களின் மூலம் அனுகூல பலன் காணலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அசையும் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.

மகரம்: மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல தடைகளை தாண்டி முன்னேற்றம் காணக் கூடிய நாளாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் கூடுதல் மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்கள் மூலம் புதிய நட்பு வட்டம் விரியும். சுபகாரியத் தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
 
மார்ச் மாத இறுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
ரயில் மற்றும் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நீக்கி போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் இருந்த பாரிய மரமொன்றை வெட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஜீ.ஜீ. பிரதீப ஜெயசிங்க முன்னிலையில் நேற்று(28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை மற்றும் 15,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாட்சியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கக்கூடாது என சந்தேகநபர்களுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

நவகிரகங்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நம் ஜாதகத்தில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் கிரக நிலைகளால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாத ராசி பலன்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்: கடமையில் கண்ணியம் தவறாத மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் நிகழும். இதுதான் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே நீங்கள் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும். தொழில் ரீதியான போட்டிகள் குறையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த கடமைகள் நிறைவேறும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்: எவரையும் அவரிடத்தில் இருந்து யோசிக்கும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ரொம்பவே அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும் எனினும் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த நெருக்கம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலையிலிருந்து தொழில் சூடுபிடிக்கும் துவங்கும். வியாபாரிகள் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். -

மிதுனம்: எதற்கும் கலங்காத மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இந்த மாதம் அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் காணும். உத்யோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது. வியாபார தந்திரங்களை கையாளுவது உத்தமம். சுபகாரியத் தடைகள் விலகி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் ஏற்றம் காணும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் அகலும். ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

கடகம்: சொன்னதை செய்து காட்டும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்காமல் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். சுயதொழில் புரிபவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகஸ்தர்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ராகு கால துர்க்கை பூஜை தடைகளை அகற்றும்.

சிம்மம்: யாரையும் ஏமாற்ற நினைக்காத சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாக்காமல் ஆற போடுவது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். சுய தொழில் புரிபவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்துக்களுக்கு ஒத்து போவது நல்லது. பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள். சனிக்கிழமையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். -

கன்னி: கவலையை மறந்து சிரித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்துடன் செயல்பட கூடிய மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மரியாதை உயரும். எதை செய்வதாக இருந்தாலும் குலதெய்வ ஆசி பெறுவது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும். சனிக்கிழமையில் தயிர் சாதம் தானம் செய்யுங்கள்.

துலாம்: நேர்மையின் சிகரமாக விளங்கும் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் மனதை மேலும் வலிமைப்படுத்த கூடிய வகையிலான அமைப்பு என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. சுயகட்டுப்பாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சந்தேகங்களை களைவீர்கள். புதிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் அக்கறை அதிகரிக்கும். மறைமுக போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். தேவையில்லாத பகையை வளர்த்துக் கொள்வது தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயில் முருகனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

விருச்சிகம்: கலைத் திறன் மிகுந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் உங்களுக்கு சில விசித்திரமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணியிட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தனுசு: இனிமையான பேச்சாற்றல் கொண்டுள்ள தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எண்ணற்ற நற்பலன்கள் காணப் பெறுகின்றன. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும். பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுயதொழில் புரிபவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் குறையும். கந்தனுக்கு கவசம் பாடுங்கள்.

மகரம்: எவரையும் எளிதில் எடைபோடும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை அமைதியான நிலையில் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பிரிந்து சென்ற சில உறவுகள் மீண்டும் உங்களை வந்து சேர்வதற்கு யோகம் உண்டு. சுப காரியத்தில் இருந்து வந்த குறுக்கீடுகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த நீண்டநாள் பாதிப்புகள் நீங்கும். திங்கட்கிழமையில் புளி சாதம் தானம் செய்யுங்கள்.

கும்பம்: பொறுப்புகளை வரமென ஏற்கும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் விடுதலைக்கான மாதமாக அமைய இருக்கிறது. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையை கையாளுவதன் மூலம் அதிர்ஷ்டம் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பொழுது பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக் கவலைகள் அகலும். ஆரோக்கியம் வலுப்பெறும். வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மீனம்: மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் போட்ட பணம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வீண் பழிகள் வந்து சேரலாம். பொருளாதார ரீதியான விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை திறம்பட சமாளிப்பீர்கள். குறை தீர்க்கும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

 மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மிக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாக பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி தின ஆன்மிக செய்தியானது, ஒவ்வொருவரிடையேயான ஒற்றுமையை

மேலும் பலப்படுத்தும். ஆன்மிக சிந்தனை, உத்வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் சிவனிரவு, அனைவரதும் நோக்கங்களை அடைய வழிவகுக்கும் நன்னாளாக அமைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், உங்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை தாயின் மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் அனைத்தும் கைகூடும் எதிர்காலம் அமைய இந்த சிவராத்திரி தினம் மிகவும் முக்கியமானது என்பது தமது நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

துன்பங்கள் என்ற இருள் நீங்கி இன்ப ஒளி எங்கும் பரவ வேண்டித்துதிக்கும் பக்தி மிகுந்த இந்த நாளில், அனைவருக்கும் சௌபாக்கியமே கிடைக்க இறையருளை மனதார வேண்டித்துதிப்போம் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான, உறுதியான குறிக்கோளுடன் உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கும் ஆணவம் மற்றும் தற்பெருமையை இல்லாதொழிக்க உறுதுணையாக அமையும் ஞான ஔி பரவக்கூடிய தினமாகவும் உலக வாழ் இந்து மக்களுக்கு அமைதியையும் கருணையையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர வழிவகை செய்யும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாகவும் இந்த தினம் மலர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக் குழுவினர் புறப்படவிருந்த பேருந்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி டெஸ்ட் தொடருக்காக பயணிக்கவிருந்த பேருந்தில் இருந்து குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணியினர் பேருந்தில் ஏறுவதற்கு முன் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.