web log free
September 19, 2024
kumar

kumar

 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மனுதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன இதனால் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அவர், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தான் பிறந்து வளர்ந்த இந்த பகுதியில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்று கூறிய கானா பாலா, நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன் என்றும் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள கானா பாலா, தனது பாடல்கள் மூலம் மக்களின் மனங்களை வென்றதைப்போல, தேர்தலிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வெலி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று 74வது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்படவுள்ள கைதிகள் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை.

இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அபராதம் செலுத்தாததற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேல் அனுபவித்தவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் போன்றோர் விடுதலை பெற்றனர்.

 20 பேர் மஹர சிறையில்
18 கேகாலை சிறைச்சாலையில்
17 வெலிக்கடை சிறைச்சாலையில்
13 களுத்துறை சிறைச்சாலையில்,
11 போகம்பரா சிறைச்சாலையில்,
11 மட்டக்களப்பு சிறைச்சாலையில்,
வாரியபொல சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும், எந்தவொரு கைதியையும் எந்த நேரத்திலும் விடுவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

 

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் வழிகாட்டலில் பொலிஸார் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே ஈரானில் இருந்து போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர்.

இதன் போது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறையில் இருந்த போது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் தம்மை அணுகி தமது வாழ்க்கை கதைகளை கூறியதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிக்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலகிலும் ஐரோப்பாவிலும் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து நாட்டுக்கு எதிராக அணிதிரளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இந்தக் கைதிகளை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய போது "அது செய்யப்பட வேண்டும்" என்பதை ஜனாதிபதி மனதில் வைத்திருந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார.

விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களை விடுவித்தால், பிரிவினைவாத இருண்ட நிழல்கள் மறைந்துவிடும் எனவும், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி ஒரு சிலரையாவது விடுதலை செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார். இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.

 

 

சினிமா துறையில் முன்னணியாக விளங்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் கடந்த 2010-ம் ஆண்டில் புகைப்படங்களை மட்டும் பகிரும் ஒரு செயலியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உலகளாவிய ஒரு சமூக வலைதளமாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் செயலியை பிரபலங்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வெறுமனே தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு மட்டும் இந்த செயலியை பயன்படுத்துவதில்லை. அவர்களைப் பின்தொடர்பவர்களிடம் பலதரப்பட்ட பிராண்டுகளின் விளம்பரத்தை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்துகின்றனர். பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பிராண்டுகளை விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் பணம் வாங்குகின்றனர்.


பிரியங்கா சோப்ரா
பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 7.3 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் (FOLLOWERS). இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பொலிவுட் பிரபலங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார்.


ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் 5.8 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்குகிறார்.


ஷாருக்கான்
பொலிவுட்டின் அரசன் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். ஷாருக்கானை 2.7 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.


தீபிகா படுகோனே
பொலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையான தீபிகா படுகோனேவை இன்ஸ்டாகிராமில் 6.4 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் வரை ஒரு பதிவிற்கு வாங்குகிறார்.


அக்‌ஷய் குமார்
பொலிவுட்டின் கில்லாடி என்று அழைக்கப்படும் அக்‌ஷய் குமார் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். அக்‌ஷய் குமாரை 5.9 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

நாட்டில் சில பகுதிகளில் தற்சமயம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்துவதாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 12 வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46/1 தீர்மானம் உள்ளடங்களாக 07 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், இலங்கை அரசாங்கமும் பெருமளவுக்கு அமுல்படுத்தப்படாத கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளதாக இரா. சம்பந்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்தாத அரசாங்கம், இராணுவமயப்படுத்துதல், சமூக மற்றும் ஊடகத் துறையினர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உயிரிழந்த உறவுகளை நிறைவுகூருவோரை புதிதாக கைது செய்வதோடு அரசியல் கைதிகளை கால வரையறை அற்று தடுத்து வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு எனும் போர்வையில் இடம்பெறுகின்ற காணி சூறையாடல்களையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்துள்ளார்.

ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கைக்குள் வட, கிழக்கு மாகாணங்களில் சுய மரியாதையோடும்  கன்னியத்தோடும் பாதுகாப்புடனும் தமிழ் மக்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கத்தை தூண்டுதல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமது கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது. கடந்த மாதம் உணவுப்பொருள் இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு ரூ.6700 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் முக்கிய நேரங்களில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்ய, நாட்டின் எரிபொருள் தேவைக்காக பெட்ரோல், டீசலை வழங்குமாறு இலங்கை அரசு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சு வார்த்தையில் இலங்கைக்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.