இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.
அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. தன்மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இறுதியில், எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன்” என்றார்.
65 வயதான நீல் பாரிஷ் பாராளுமன்றத்தில் தான் ஆபாச படம் பார்த்தது குறித்து விளக்குகையில், “ஒரு இணையதளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அதை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்த நேரத்தில் நான் சற்று தடுமாறி, சிறிது நேரம் அதை பார்த்தேன்” என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆனால் எனது குற்றம், மிகப் பெரிய குற்றம் என்னவென்றால், மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் 2-வது முறையாக அதை பார்த்தேன். அதை வேண்டுமென்றே செய்தேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்து கொண்டிந்தபோது மீண்டும் ஆபாச படத்தை பார்த்தேன்” என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் “அந்த தருணத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீல் பாரிஷ் , “அது ஒரு பைத்தியக்கார தருணம். அந்த தருணத்தில் என்னை நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.
தனக்கும் மேலும் நால்வருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தினேஸ் குணவர்தன தனக்கு நெருக்கமான பலருடன் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமக்கு பிரதமர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (01) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டத்தில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஹரின் பெர்னாண்டோவை நோக்கி சத்தம் போட்டு அவரது சாரத்தை கலட்ட முயற்சித்துள்ளார்.
பேரணி உரை பட்டியல் வரிசை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபயணம் சென்றது போல், மே தின பேரணியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான ஹரின் பெர்னாண்டோவை தனது இருக்கையில் வரவழைத்த பொன்சேகா, அந்த காகிதத்தை இங்கே கொடுங்கள் என்று கூறி ஹரின் பெர்னாண்டோவின் கையிலிருந்த காகிதத்தை பிடுங்க முயன்றுள்ளார். ...".
''ஏன்? என ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
“இல்லை எங்கே காட்டு” என்று பேச்சாளர் பட்டியலைப் பறித்தார் பொன்சேகா. ஒரு நெறிமுறையாக, தலைவர் பேசுவதற்கு முன் நான் பேச வேண்டும்.
அந்தப் பட்டியலின்படி சரத் பொன்சேகாவுக்கு அடுத்தபடியாக ஹரின் பெர்னாண்டோவும், பின்னர் சஜித் பிரேமதாசவும் வந்துள்ளனர்.
“இந்தப் பட்டியலை உருவாக்கியது யார்?” என்று ஹரின் பெர்னாண்டோவிடம் பொன்சேகா மீண்டும் ஆவேசமாகக் கேட்டபோது, ஹரின் பெர்னாண்டோ சஜித் பிரேமதாசவை நோக்கி விரலை நீட்டினார்.
“சஜித்துக்கு முன்னாடி என் பெயரை போடவும்..இல்லையேல் நான் இன்றைக்கு பேசமாட்டேன். உடனே பட்டியல் வரிசையை மாற்று” என்று ஹரினுக்கு பொன்சேகா உத்தரவிட்டிருந்தார்.
நீ யார்? எனக்கு உத்தரவிட. நீ எனக்கு அவ்வளவு பெரியவர் இல்லை,'' என்று ஹரின் திட்டியுள்ளார்.
அப்போதுதான் ஹரினின் சாரத்தை கலட்ட பொன்சேகா முயன்றார்.
சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க, மக்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதே ஹரீன் பெர்னாண்டோ பேரணியில் உரையாற்றினார், பொன்சேகா உரையாற்றிய பின்னர், பேரணியில் உரையாற்றுவதற்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா அழைக்கப்பட்டார்.
ஹர்ஷ டி சில்வாவுக்குப் பின்னர் சஜித் பிரேமதாச உரையாற்றினார். அமைப்பாளர்கள் மீதும் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
மோதலின் பின்னர் பேரணியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொன்சேகாவைப் பார்த்து, “வயது போனவர்களின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று கூறினார்.
சஜித் ஜனாதிபதியாகும்போது பாதுகாப்புச் செயலாளராக சரத் இருப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 28ஆம் திகதி கல்கமுவவில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று தண்டிக்கும் பொறுப்பு முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இது கம்பஹா மாவட்டத்தில் உள்ள விருப்பு பிரச்சினை என தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட அமைப்பாளர் ஒருவரை நியமித்த நாளிலிருந்தே கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்த அவர், களனியில் நடைபவணியின் இறுதியில் கூட பொன்சேகா கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் உடனடியாக அதனை செய்ய முடியும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வந்த நிலையிலேயே இன்றைய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய பிரதமரைக் கொண்ட புதிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு ஒரு பிரிவினர் ஜனாதிபதியிடம் கோரி வரும் அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு இன்னும் பெரும்பான்மை பலம் இருப்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என மற்றுமொரு பிரிவினர் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கம் 'தேசிய இனக்கப்பாட்டு அரசாங்கம்' என பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததன் பின்னரே அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக இருப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க தயாராகி வருகிறார்.
அவரது முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமையே இதற்குக் காரணம்.
அரசாங்கத்தில் புதிய அமைச்சரையும் நியமிக்கும். அந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ நீடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.
எவ்வாறாயினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களிடம் முன்வைக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பத்து நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பேட்டியளித்திருந்தார்.
ஆனால் நேரம் செல்லச் செல்ல சமூக வலைதளங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதேநேரம், மே 03ஆம் திகதி உஷாராக இருக்குமாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரியின் பயிற்சியை நிறைவு செய்துள்ள 4 ஆயிரத்து 643 ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், மே 4 ஆம் திகதி நியமன கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தனது கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை (காண்பிக்கும் ) நிரூபிக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"அடுத்த வாரம் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதை அனைவரும் பார்க்க முடியும், இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நான் வெளிப்படுத்த மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார் மேலும் .
"ஜனாதிபதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் தூண்களில் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஏன் வித்தியாசமான பாதையில் செல்கிறார் என வினவியதற்கு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என வெல்கம தெரிவித்துள்ள போதிலும் அவர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இருப்பதா.எவ்வாறாயினும் கடைசியில் அவர் ஐக்கிய மக்கள் சக்தி உடன் தான் வருவார் எனவும் தெரிவித்தார்