web log free
May 17, 2024
kumar

kumar

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத மீன்பிடியானது மீன்வளத்தை மட்டுமன்றி ஏனைய மீனவர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கலந்துரையாடப்பட்டது.

இந்த சட்டவிரோத முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர், மீனவர் சங்கங்கள் கடற்படையினருக்கு தகவல்களை வழங்குவதுடன் மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  

லிந்துலை பெரிய ராணி வத்தை பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரலில் 10 வீடுகள் தீக்கிரையாகி 40 பேர் நிர்கதியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 475 யு கிராம சேவகர் பெரிய ராணிவத்தை இலக்கம் 01 தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (25) ஏற்பட்டுள்ளது.
 
பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போதிலும் தீ பரவல் காரணமாக 10 வீடுகள் வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
 
எவருக்கும் உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படாத போதிலும் அத்தியாவசிய ஆவணங்கள், உடுதுனிகள், தளபாடங்கள் உட்பட உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் தோட்டத்தில் உள்ள அம்மன் ஆலயத்திலும் கிருஸ்தவ தேவாலயத்திலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளன.
 
குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் தீ விபத்துக்கான காரணத்தினையும் ஏற்பட்ட தீ சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

முட்டை ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. 

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில்  35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீர் பெர்ணான்டோ  தெரிவித்தார். 

சமகி ஜன பலவேகவில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார பற்றிய தகவல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த இரண்டு எம்.பி.க்களும் இனி சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் அல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அக்கட்சி அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அதிகளவு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கோட்பாடு புத்தகத்தின்படி புத்திக்க பத்திரனவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளின் எண்ணிக்கை 10 ஆகும்.

அதனையடுத்து, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அதிக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்துள்ள தனியார் சபை முன்மொழிவுகளின் எண்ணிக்கை ஆறு.

மேலும், ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்பட்ட கோட்பாட்டுப் புத்தகத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோகில ஹர்ஷனி குணவர்தன ஆகியோரும் தலா ஒரு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை உள்ளடக்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் முன்மொழிவுகளில், உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவுகளை அகற்றுவதை முறைப்படுத்துதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலன்புரிதல், வீழ்ச்சியடைந்த நிதி நிறுவனங்களை புனரமைத்தல் போன்ற யோசனைகள் விவாதிக்கப்பட உள்ளன.

புத்திக்க பத்திரன எம்.பி.யின் தனிப்பட்ட முன்மொழிவுகளில் தீவு முழுவதும் முதியோர் பராமரிப்பு வாரியங்களை விரிவுபடுத்துதல்,  மாணவர்களின் மதிப்பை சமூகமயமாக்குதல் மற்றும் ராவண மன்னன் குறித்து முறையான ஆய்வு நடத்துவதற்கான முன்மொழிவு ஆகியவை அடங்கும்.

இந்த முன்மொழிவுகள் எதிர்காலத்தில் விவாதிக்கப்படும். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாளை (26) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் சமகி ஜன பலவேகய இணைந்து கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் முன்வைக்கப்படவில்லை என கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை மதித்து சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அதன் முன்மொழிவுகள் குறித்து ஆராய்வதாகவும், சமகி ஜன பலவேகவாக பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தானும் பங்கேற்கவுள்ளதாக கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

இன்று (ஜூலை 25) கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி இல்லம், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஒல்காட் மாவத்தை, யோர்க் வீதி, வங்கி வீதி, லோட்டஸ் வீதி, சத்தம் வீதி போன்றவற்றிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுப்பதுடன், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தடுக்கிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னிலை சோசலிச கட்சியின் தொழிலாளர் போராட்ட மையம், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணி தொடர்பில் கோட்டை பொலிஸார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக் காவலர் என அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (25) தெரிவித்தார்.

இந்த பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கடமையாற்றுவதுடன், அக்கம்பக்கத்திலுள்ள காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, குறித்த காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் பெண் இருந்த காட்சியை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கு கோரப்பட்ட காணியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். 

இந்த காணி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏற்ற காணி என ஆளுநர் திருப்தி வெளியிட்டார். 

மேலும் மைதானத்தை அண்மித்து பொழுது போக்கு மையம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.