web log free
May 03, 2024
kumar

kumar

அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக அமைச்சரவை நியமனம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றது.

வெற்றிடமாக உள்ள 10 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தில் பெரும்பான்மையைக் கொண்ட மொட்டுவவைச் சேர்ந்த 10 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெற்றிடங்களுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவரின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாக உள்ள 10 அமைச்சுப் பதவிகளுக்கு 14 பேர் முன்மொழியப்பட்டுள்ளதால், அமைச்சரவை நியமனங்கள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானது புனர்வாழ்வு சட்டம் எனவே இந்த நாட்டிலே நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (08) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் தமிந்த தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட் பேரணியில் நா.உ. இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.;

இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் தமிழ் பேசும் மக்களை கடந்த 40 வருடமாக அடக்கிய சட்டம் தான் இந்த சட்டம் 2019 ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் பேசும் மக்களான இஸ்லாமிய சகோதரர்களை இந்த தடைச் சட்டத்தில் கைது செய்தனர்.

2022 ம் ஆண்டு விசேடமாக நீண்ட காலத்திற்கு பின்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள சகோதரர்களை இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தனர்.

தமிழ் பேசும் மக்கள் இது ஒரு மோசமான சட்டம் இதனை நீக்கவேண்டும் இந்த சட்டத்தின் ஊடாக எங்கள் மக்களுக்கு அநீதி நடக்கின்றது என தெரிவித்தபோது ஒரு சிலர் பார்வையாளர்களாக இருந்தாளும் கூட இன்று இந்த சட்டம் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக பயன்படுத்தும் போது அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என போராடுகின்றோம்.

கடந்த 25 நாட்களாக இந்த சட்டத்தை முழுமையாக நீக்க கோரி காங்கேசன்துறையில் இருந்து அம்பாந்தோட்டை வரைக்கும் கையொழுத்து போராட்டத்தை செய்திருந்தோம். அந்த கையொழுத்து போராட்த்தில் கூட நாங்கள் பெரும்பான்மை சமூக சகோதரர்களை சேர்த்து இந்த போராட்டத்தை செய்திருந்தோம்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, தேரர் போன்றோரை உடன் விடுதலை செய்ய வேண்டும் என கோருகின்றோம் ஆனால் அதனுடன் சேர்த்து இதே சட்டத்தில் கைது செய்து நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இன்று மேடையிலே 50 நாட்களாக சிறையிலே இருக்கின்றனர் என பேசும் இவர்கள் எங்களுடைய உறவுகள் இந்த சட்டத்தில் கைது 5 ஆயிரம் நாட்களாக சிறையில் இருப்பதை ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால் இவ்வாறு சில விடயங்களில் இரு சமூகத்துக்குள் கருத்து முரண்பாடு இருந்தாலும் கூட இந்த சட்டத்தை நீக்கும் கோரிக்கையில் இன்று ஒன்றாக இணைந்திருக்கின்றோம்.

இந்த சட்டத்தை நீக்க கோரியுள்ள நிலையில் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி இந்த சட்டத்தை விட மோசமான சட்டத்தை கொண்டு வந்து மக்களை அடக்குவதற்கும் முடக்குவதற்கும் சில முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அவ்வாறு ஒரு சட்டம்தான் புனர்வாழ்வு சட்டம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் ஆவது சிறையில் வைத்திருக்க சில உத்தரவு எடுக்கவேண்டும். ஆனால் புனர்வாழ்வு சட்டம் கொண்டுவந்தால் எவரையும் விரும்பிய காலப்பகுதியில் தாங்கள் நினைக்கும் வரைக்கும் வைத்திருந்து சித்திரவதை செய்யலாம் அவர்களை புன்வாழ்வு என்று வதைக்க கூடியது.

இந்த நாட்டிலே புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவாகள் யார் என பார்த்தால் நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அளித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்கள்.

எனவே இந்த சட்டத்தை முழுமையாக நீக்கும் வரைக்கும் எமது போராட்டங்களின் வடிவம் மாறினாலும் போராட்டம் தொடரும் என்றார்.

இன்று (09) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனம் நடத்தி, கோடீஸ்வர தொழிலதிபர்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பல பிரபல நடிகைகள் விசாரிக்கப்பட உள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதில் இந்த நடிகைகளுடனான உறவுகள் தெரியவந்துள்ளன.

மேலும் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ள கோடீஸ்வரர்கள் பணம் கேட்கும் போது அவர்களுடன் இந்த நடிகைகளை இணைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்தந்த நடிகைகள் அந்த கோடீஸ்வரர்களுடன் பேசிய உரையாடல்களை பதிவு செய்து தொழிலதிபர்களிடம் காட்டி பயமுறுத்தியுள்ளனர்.

அதற்காக ஒரு நடிகைக்கு ஒரு வாய்ப்புக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த உரையாடல்களின் நாடாக்கள் தற்போது இரகசியப் பொலிசாரின் பாதுகாப்பில் உள்ளன.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு 32 ரூபா அறவிடப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே கொல்லப்படுவார் என ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தேவுக்கு கடிதம் வந்துள்ளதாக வசந்த முதலிகேவின் சகோதரர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தே கடந்த 4ஆம் திகதி மிரட்டல் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

அநுர முதலிகே கருத்துத் தெரிவிக்கையில், “என்னை விஷம் சாப்பிட்டு சாகச் சொல்லியிருக்கிறார்கள். வன்னிலத்தேவை ஆஜராக வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

குருநாகலிலிருந்து இந்தக் கடிதம் வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திகோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் தொடர்பில் உள்ளதாக அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, அந்த செய்திகள் பொய்யானவை என்றும், ஆதாரமற்றது என்றும் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் திலினி பிரியாமாலி கலந்து கொண்ட நிகழ்வில்  ஷிரந்தி ராஜபக்ஷ கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது, ஆனால் அது திரைப்படத் தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான வெளியீட்டு நிகழ்வில்  ராஜபக்ஷ கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

திலினி பிரியமாலியுடன் ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாரோ தொடர்பு கொண்டிருந்தார் என்பதை வன்மையாக மறுக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, தவறான நோக்கத்துடன் தொடர்புடைய படத்தைப் பரப்பும் சிலரின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தம்முடன் இருப்பதால் அவர் நல்ல விடயங்களையே கூறுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'ஒன்றாக எழுவோம் - களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்' என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க இந்த பயணத்தை தொடர ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

“ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம். அன்று ரணிலை திட்டினோம். ரணில் ஒரு ஐ.தே.க. இப்போது ரணில் எங்களுடன் இருக்கிறார். நாங்கள் இப்போது ரணிலுக்கு நல்லது சொல்கிறோம். ஏனென்றால் அவர் இப்போது சரியான பாதையில் திரும்பியிருப்பதாக அவர் நம்புகிறார். எனவே, நாங்கள் அவருக்கு ஆதரவளித்து, இந்தப் பயணத்தைத் தொடர உதவுகிறோம்” என்றார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தலைப்பில் பேரணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த, சனத் நிஷாந்த, அனுப பஸ்குவேல் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, சஞ்சீவ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர். 

நேற்று மாலை காலி முகத்திடல் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கெசல்வத்தையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரைக் காணவில்லை என்றும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் நம்புவதாகவும் பின்னர் அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்துள்ளார். அதை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொது நிர்வாகத்தின் நவீனமயமாக்கல், சுகாதாரக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், கல்விக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கைகளின் நவீனமயமாக்கல், மின்சாரம் மற்றும் எரிசக்தி நவீனமயமாக்கல் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்கு துணைக் குழுவின் முன் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களை அழைக்க உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின்படி, குறுகிய கால முன்மொழிவுகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால முன்மொழிவுகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால முன்மொழிவுகளை மூன்று மாதங்களுக்குள்ளும் சமர்ப்பிக்க துணைக்குழு உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்