web log free
July 01, 2025
kumar

kumar

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைக்கா நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தியாகராய நகர் உள்ள விஜயராகவா சாலையில் உள்ள லைக்கா நிறுவன அலுவலகம், அடையாறில் உள்ள சுபாஷ்கரனின் இல்லம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விஜயராகவா சாலையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெளிநாடுகளில் பெரிய அளவில் இந்நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான கணக்குகள் தொடர்பாகவும் (இதை சரியாக அந்நிறுவனம் காட்டவில்லை என புகார் உள்ளது). சோதனை நடைபெறுவதாக தெரிய வருகிறது.

சோதனை முடிவில் நிறுவனம் எந்த அளவுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வரும் என கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளார்.

நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற உள்ள அரச நிகழ்வில் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக தற்போது செயல்படும் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தின் பதில் முதலமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

பல வருடங்கள் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட செந்தில் தொண்டமானின் சிறந்த தலைமை நிர்வாக திறமை மிக்கவராவார்.

இவரது நிர்வாக திறமையின் பலனாக இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஒருவராக முதல் முறை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியில் செந்தில் தொண்டமான் அமர உள்ளமை விசேட அம்சமாகும்.  

ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கும் வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருக்க முடியும் எனவும் அதனை எவரும் சவால் செய்ய முடியாது எனவும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி நோட்டீஸ் கொடுத்தால், அவர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஆளுநர் பதவியில் இருக்க அவருக்கு உரிமை இல்லை என்றும் ஆளுநர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக ஒரு நிமிடம் கூட ஆளுநர் அலுவலகத்தில் இருக்க முடியாது. ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய அதிகாரபூர்வமாக நோட்டீஸ் கொடுத்தால் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.”

ஜனாதிபதி தனது கையொப்பத்தின் கீழ் அல்லது வழக்கறிஞரின் அதிகாரத்தின் கீழ் ஆளுநரை நியமிப்பார் மற்றும் 04 வது அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் அங்கீகாரம் வரை அவர் பதவியில் இருப்பார். அரசியலமைப்பு இவ்வாறு கூறுவதாக  வில்லி கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும், பல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த குழு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒருவர் போதுமானளவு காலை உணவை எடுத்துக்கொள்ளாத அல்லது காலை உணவு இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சீர்செய்வது தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இதனை தெரிவித்துள்ளது. 

அவர்களுள் 14 இலட்சம் மாணவர்கள் அடங்குவதாக அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்ததாக சமகி ஜன பலவேகவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கட்சி பேதங்கள் பற்றி தமக்கு கவலையில்லை, ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்வேன் என்று கூறும் வடிவேல் சுரேஷ், தொழிற்சங்க தலைவரும் பொதுச் செயலாளரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்றார். 

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் நேற்று (14) பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் வடிவேல் சுரேஷும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடிவேல் சுரேஷ் தற்போது சஜபேயில் இருப்பதாகவும், அவர் எவ்வளவு காலம் அங்கு தங்குவார் என கூற முடியாது எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் ஆணையாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, டெங்கு அபாய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்நிலையில், மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெறவுள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண ஆளுநரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் இரண்டு போயாவிற்கு முன்னர் சமகி ஜனபலவேகவில் பாதி பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சரும், சமகி ஜனபலவேகவின் உப தவிசாளருமான பி. ஹரிசன் வெளிப்படுத்தினார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்தை எதிர்கொண்டாலும், இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தானும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகவும், 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்னுடன் இணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் பி. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூராட்சி சபை தேர்தல் வர வாய்ப்பில்லை. மாகாண சபைத் தேர்தல்கள் இல்லை. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையின்றி உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நான் பதவிகளுக்காக காத்திருக்கவில்லை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டு வருகிறேன். அதனால்தான் நானும், எங்கள் தொகுதியின் உள்ளாட்சி உறுப்பினர்களும், மற்ற 100 உள்ளாட்சி உறுப்பினர்களும் இரண்டு வாரங்களில் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறோம் என்று முடிவு செய்தேன். அது மாத்திரமன்றி, இன்னும் ஓரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவின் மடிக்குச்  சமகி ஜனபலவேகவின் பாதி பேர் செல்வதை நிறுத்த முடியாது என்பதை  கூறுகிறேன். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்திடம் முகத்தைக் காட்டினாலும் இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்கான அவதானிப்புகள் அழைக்கப்பட்டு, அவதானிப்புகளைப் பெற்ற பின்னர், சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு வழியமைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் கஞ்சா ஏற்றுமதி மற்றும் பெரிய அளவில் பயிரிடுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை வருடாந்தர அனுமதி முறை மூலம் அடையாளம் காண அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd