web log free
September 10, 2025
kumar

kumar

உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். 

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. 

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்னர்.

இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது. 

நபி இப்ராஹிம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம் மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.

இறை தூதுவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். 

இன்று (29) ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஆசியன் மிரர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய நிதி நிவாரணம் இதுவாகும்.

அந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும், 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமூகப் பாதுகாப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை உள்ளூராட்சி அமைச்சரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

27-06-2023 அன்று வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் மீறப்படும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஒரு காலத்திற்கு திரும்ப அழைக்க அதிகாரம் உள்ளது.

இதன்படி, கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளப்பெற முடியும் எனவும், உள்ளுராட்சி மன்றங்கள் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அறிவிக்கப்பட்டவாறு உரிய வாக்கெடுப்பை நடத்த முடியாத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம் அரச நிறுவனங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். இந்த அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றம் ஜூலை 1ஆம் திகதி கூடும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் பல கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாட்டில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்ட அவர், நேற்று (27) பேர்த்தில் இலங்கையர்களின் சந்திப்பில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

எம்.பியின் அவுஸ்திரேலியா விஜயத்திற்காக இரண்டு விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தங்குவதற்கு இரண்டு ஹோட்டல்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக எம்.பி., நண்பரின் தனி வீட்டில் தங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரவின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு சேவை ஒன்றின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எம்.பி.யை மாநாட்டுக்கு அழைத்துச் செல்ல கட்சியினர் பங்கேற்கும் பாதுகாப்பு வளையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார். 

பிரதமா் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் லாா்ட்ஸ் அரங்கத்தில், பிரிட்டன் தமிழ்ச் சங்கம், சங்கமம் யுகே ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் இவ்வாறு கூறினார்.  

இலங்கையில் நிலவும் பிரச்னை சுமாா் 80 முதல் 85 ஆண்டுகளாக உள்ளது. 2009 இலங்கைத் தமிழா்கள் வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அப்போதைய காங்கிரஸ் அரசு.கடந்த 9 ஆண்டுகளில், பிரமதா் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

யாழ்ப்பாண கலாசார மையத்தைப் புனரமைத்துக் கொடுத்துள்ளது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை-பலாலி விமான நிலையம் இடையே தினசரி விமான சேவை நடைபெறுகிறது. காரைக்கால்-காங்கேசன்துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்.

அண்மையில் பொருளாதார பாதிப்படைந்த இலங்கைக்கு, 3.8 பில்லியன் டாலா் அளவிலான கடனுதவி, 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவுப் பொருள்கள் என உதவி, இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியது இந்திய அரசு.ஈழத்தில் மிகவும் அபாயகரமான விகிதத்தில், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்த மாற்றங்களை தடுக்க இலங்கை அரசுடன் இணைந்து பிரதமா் மோடி முனைப்புடன் பணியாற்றி வருகிறாா்.

தமிழா்களின் தொல்லியல் தலங்கள், தமிழா்களின் தனித்துவமான கலாசாரம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்துபவை. யாழ்ப்பாணத்தில் பெருமளவில், பௌத்த தொல்லியல் தலங்கள் உருவாகி வருவதால், பிற்காலத்தில், தமிழா்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையே அமைதியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இலங்கை ராணுவம், தமிழா் பகுதியில் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து முகாம்கள் அமைத்திருக்கின்றன. ஈழத் தமிழா்களின் பிரச்னைகள் குறித்து, இலங்கைப் ஜனாதிபதிக்கு கொண்டு செல்லும் முயற்சியின் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, மத்திய மலையகப் பகுதியிலிருந்து செந்தில் தொண்டைமான் எனும் தமிழா், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று பிரதமா் மோடி, தனது இலங்கைப் பயணத்தின்போது வலியுறுத்தினாா் என்றாா் அவா். 

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

காயமடைந்த நபருடன் மேலும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) உள்ளிட்ட மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிதியங்களின் அங்கத்துவ இருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

கடந்த காலங்களில் செலுத்தப்பட்டுள்ள அதிக ஓய்வூதிய நிதி கொடுப்பனவு வீதங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கூறினார். 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கோ, எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கோ பாதிப்பு ஏற்படாது என கம்பஹா மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் மேற்பட்ட வங்கி வைப்பீட்டாளர்களின் எந்தவொரு வைப்புகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் வங்கி வைப்புகளுக்காக செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார். 

வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைகளை  இன்று (28) நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதேவேளை, பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்து, சபாநாயகர் இன்று பிற்பகல் அதிவிசேட வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார்.

நிலையியல் கட்டளை 16-இன் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மவுஸ்ஸகலே பிரதேசத்தில் சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் Capital Investment LLC நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள காணியொன்றையும் அதே நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் சுவீகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கேள்விக்குரிய நிலம் மற்றும் தீவின் மூலதன முதலீட்டு LLC ஆகியவற்றைப் பயன்படுத்தி ஹோட்டல் வளாகம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனங்களின் ஒப்புதலைப் பெற்று உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில், இது தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். 

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் 500 மில்லியன் டொலர் வரவு செலவுத் திட்ட உதவிக்காக உலக வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் இதுவே மிகப் பெரிய தவணை நிதி என்று கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd