web log free
May 10, 2025
kumar

kumar

மொனராகல - புத்தல பிரதேசத்தில் இன்று (22) காலை 11.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாவிட்டாலும் கட்டுப்பணத்தை திரும்ப செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை உரிய திகதியில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற போதிலும் அதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை உடன் திரும்ப செலுத்தக்கூடிய சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்ய வேண்டுமாயின் அரசாங்கம் நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் வேட்பு மனுக்களை இரத்து செய்ய முடியும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தலை நடத்தவே முடியாது என கூறவில்லை என நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் 1137 உள்ளூராட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் இது அமைந்துள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் திங்கட்கிழமை நள்ளிரவுடன் இரண்டரை வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தலுக்கு செல்லலாம்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் நாட்டின் தலைவரால் அவையைக் கலைக்க முடியும்.

அரசியலமைப்பின் 70 வது பிரிவின் கீழ், அவையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் என்று கூறும் அவர், அந்த வாகன சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை (22) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஓமல்பே சோபித தேரர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றை நடத்தியதுடன், அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான உண்மையான பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. .

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்த இந்த அரசாங்கம் மக்களிடம் மின்சாரக் கட்டணத்தை அறவிடுவதுடன் கொமிசன் பணத்துக்காக செயற்படுவதாகவும் கூட்டத்தின் பின்னர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கமிஷன் பணத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசு முயற்சி செய்யும் என்றார்.

சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில், தற்போதுள்ள மின்சாரக் கட்டணத்தை மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறி இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களினால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(20) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நகர்த்தல் பத்திரம் ஒன்றினூடாக தேர்தல் ஆணைக்குழு இதனை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறித்த நகர்த்தல் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

410.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படும் வரை வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகர் அறிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளதாகவும் அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் 03 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது தெரிவித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு ஆவண ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மக்கள் கோரும் தேர்தலை நடத்தாவிட்டால், வீதியில் இறங்கி அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி, தேர்தலில் எப்படியாவது நடத்தி வெற்றி பெறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

நாட்டை அழித்த ராஜபக்சக்களை போராட்டம் மூலம் விரட்டியடித்தாலும், பதவியேற்ற ராஜபக்ச நிழல் அரசாங்கமும், ராஜபக்சவின் கைப்பாவையாக இருந்த ஜனாதிபதியும் சுகபோக வாழ்க்கை வாழ வழிவகுத்ததாகவும், அவர்களுக்கு பிரச்சினை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

அமைதியான போராட்டத்தை தாம் நன்றாக ஏற்றுக்கொள்கின்றேன் எனவும், ஆனால் போராட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தீ வைத்து, மக்களை கொன்று, அரச சொத்துக்களை நாசம் செய்த சில அரசியல் கட்சிகள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இந்த நாட்டு மக்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைக்க வழி செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கம்புருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனசெத பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவர் நிலந்த குமார ரணசிங்கவின் வளர்ப்பு நாயை அரம்பேபொல பச்சவத்த வீட்டில் வைத்து அயலவர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரணசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அயலவரை விசாரித்து வாக்குமூலம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு வேளையில் தோட்டத்திற்கு வந்த காட்டுப் பன்றி என நினைத்து அது நாய் என்று தெரிந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க மாட்டேன் என அயலவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாயைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்றும் அதற்கான உரிமம் அவரிடம் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd