web log free
September 19, 2024
kumar

kumar

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று தமது கட்சிக்காரரிடம் 30 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக வர்த்தகர் விரஞ்சித் தபுகலவுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரந்தித் தபுகலவின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது இரகசிய பொலிஸ் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கும் அனுமதி கோரப்பட்டுள்ளதாக விரஞ்சித் தபுகலவின் சட்டத்தரணி தெரிவித்தார்.

முதலில் கப்பம் கோரிய 30 கோடி, பின்னர் 5 கோடியாகக் குறைக்கப்பட்டு, 2 கோடியை ரகசியப் போலீஸ் அதிகாரிகள் முற்பணமாகப் பெற்றதாக சட்டத்தரணி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளிக்க தனது கட்சிக்காரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பினரின் உண்மைகளையும் கருத்திற்கொண்ட நீதிமன்றம் விரஞ்சித் தபுகலவுக்கு பிணை வழங்கியதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தென்மேற்கு பருவமழை செயலில் உள்ள நிலை காரணமாக, தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலை மேலும் எதிர்பார்க்கப்படலாம்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்யும்.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பகல் காலங்களில் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு எல்லைகளில் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் கி.மீ. (50-60) வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடும் என்பதால், மீள் அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடற்கரை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை, மழையுடன் கூடிய அனர்த்த நிலைமை ஏற்பட்டால், கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தொலைபேசி எண் 117 ஊடாக உதவிகளைப் பெறலாம் .

இன்று (27ம் திகதி) பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து, 'ஒன்றுபடும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த தேசம்' என்ற தொனிப்பொருளில் 'சர்வ ஜன பௌல' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதற்காக மௌபிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, துடுகாம தேசிய உரையாடல் வட்டம், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை உறுப்பினர் மன்றம் என்பன உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

அதன்படி, தொடர்புடைய அரசியல் இயக்கத்தை நிறுவுவதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியில் தெரிவித்துள்ளார். 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, 

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கும் முழு மலையகத்துக்கும் பாதுகாப்பாக திகழ்ந்தவர். சமரசமின்றி மலையக மக்களிக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகத்தான தலைவர்.

சம்பள பேச்சுவார்த்தை முதல் மக்களின் உரிமைகளை வென்றுக்கொடுப்பதில் ஆளும் அரசாங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்ததுடன், அடிப்பணியாது செயல்பட்டார். 

அவரது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா தமது பயணத்தை தொடரும் என்றும் செந்தில் தொண்டமான் தமது சிரார்த்ததின செய்தியில் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பல பிராந்திய அமைப்பாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து சமகி ஜன பலவேகயவில் இணைந்துகொண்டனர்.

சமகி ஜன பலவேகவினால் அமுல்படுத்தப்படும் மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற   போது அமைச்சராக இருந்த நந்தசேன ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான திலக், இது தவிர, மக்கள் விடுதலை முன்னணியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த எச். சமந்த பண்டாரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு நாளை பிற்பகல் அனுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். 

இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட தலைவர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், பொஹொட்டுவே தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தொகுதி மாநாட்டின் பின்னர் பொஹொட்டுவவில் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி மாநாடுகள் நடத்தப்படும் எனவும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு, நாளை எட்டியாந்தோட்டை நகரில், ஸ்ரீ விநாயகர் ஆலயத்துக்கு எதிரே, கே.ஜி .எல். குணவர்த்தன மண்டபத்தில், கட்சி தலைவர், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி, கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கபீர் ஹசீம் எம்பி, சுஜித் சஞ்சய் பெரேரா எம்பி, ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் வேலு குமார் எம்பி  ஆகியோர் உட்பட கட்சி, கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களும், விசேட அழைப்பாளர்கள், மாவட்ட கட்சி அங்கத்தவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் முருகேசு பொறுப்பெற்றுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக வலய, தோட்ட பிரிவு வலய, நகர வலய அமைப்பாளர்களின் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய முழு மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடாக இந்நிகழ்வு, “ஒன்றிணைந்து வெல்வோம்! தேசிய அரங்கில் இடம்பெறுவோம்!” என்ற தொனிபொருளில்  நடைபெறும் என  பரணீதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.      

எதிர்வரும் 15ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற கதை தமக்கு தெரியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் கருத்து தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வினவியபோதே பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் உதயங்க வீரதுங்கவிடம் கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் தனது கருத்தை கலந்துரையாடியதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி உடலில் நுழையும் எச்.ஐ.வி வைரஸை குறிவைத்து பலவீனப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தடுப்பூசி மூலம் உடலில் புதிய ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் எச்ஐவி வைரஸை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடுப்பூசி எய்ட்ஸ் நோயாளிகளிடம் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சோதனைகள் வெற்றிகரமான முடிவுகளை அளித்ததாக தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.