web log free
September 19, 2024
kumar

kumar

நாகப்பட்டினம், இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயணத்திட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தார்.

செரியாபாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக போக்குவரத்து சேவை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தினை Indsri ferry private limited என்ற தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. கடந்த 13ம் திகதி கப்பல் சேவை தொடங்கும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்தது.

சிவகங்கை என்ற கப்பல் அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சட்டரீதியான அனுமதிகள் கிடைக்காத காரணத்தால் 13ம் திகதி துவங்க இருந்த கப்பல் போக்குவரத்து சேவை, 19ம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்திய எல்லைக்குள் இயக்கும் அனுமதி மட்டுமே பெற்றிருந்த சிவகங்கை கப்பலுக்கு, வணிகக் கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை (19ம் திகதி) நாகப்பட்டினம் - காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

’தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக திட்டமிட்ட கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியவில்லை. கப்பல் இயக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது பயணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால், டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை வௌியிடுமாறு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட இடம்பெயர்ந்திருந்த 8 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வெலிவேரிய நகரின் ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் நால்வரையும் விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி, கம்பஹா வெலிவேரி, ரத்துபஸ்வலவை மையமாகக் கொண்ட தனியார் வர்த்தகக் குழுவொன்றின் தொழிற்சாலையொன்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாகக் கூறி, சுத்தமான நீரைக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த இராணுவ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்து 11 வருடங்கள் ஆகிறது.

அப்போது, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.

அந்த தாக்குதலில் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 10 மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சட்டமா அதிபர் நிரூபிக்கத் தவறியதாக உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இன்று காலை 9.30 மணியளவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் இருவரும் விவாதத்தை நடத்த பயப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவால்களை ஏற்றுக்கொள்ளாத தலைவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது மக்களுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இது சாத்தியமில்லாத விவாதம் என்பதை சஜித் மற்றும் அநுர இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும் என்றும், விவாதம் நடத்தப்பட்டால் ஒருவர் ஆழமான சிங்களம் பேசும் மற்றொருவர் ஆழமான ஆங்கிலமும் பேசும் விவாதத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பயணப் பொதிகளை ஏற்றிச் சென்ற நபரின் காதில் குத்தியதாக தெரிவித்துள்ளார்.

“நான் உண்மையில் என் மனைவியை வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விமான நிலையத்தில் இறக்கிவிடச் சென்றேன், என் மனைவி அவளிடம் இரண்டு பைகளை வைத்திருந்தார், ஒரு போர்ட்டர் அங்கு வந்த பிறகு, நான் இரண்டு பைகளையும் தள்ளுவண்டியில் வைத்தேன்.

700 ரூபாய் கொடுத்த பிறகு, அந்த பணம் போதாது என்று சொல்ல, அப்போது எனக்கு கோபம் வந்தது.

எங்களைப் போன்ற உயரதிகாரிகளை கூட இப்படித்தான் நடத்துகிறார்கள், அப்பாவி ஏழைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நான்  புரிந்துகொண்டு ஒரு புறம் அழைத்துச் சென்று காதில் அறைந்தேன், உண்மைதான். அப்போதுதான் அந்த மனிதர் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

ஆனால், விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஒரு போர்ட்டர் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக விமான நிலையத்தில் விளம்பரப் பலகைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரால் தாக்கப்பட்ட போர்ட்டருக்கு எழுநூறு ரூபாவை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகளுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை மாத நடு வாரத்திற்குள் பணிகளை முடிக்க நேற்று கூடிய கூட்டணியின் நிர்வாகிகள் குழு முடிவு செய்தது.

இந்த கூட்டணியில் சேர்வது குறித்து ஏற்கனவே 15 எஸ்ஜேபி உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளதாகவும் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள ஏறக்குறைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

"ஊபா" சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1980களில் இந்திய அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில் 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான தமிழர் அரசியல் பிரச்சனை தொடர்பான ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால் இலங்கையில் அமைதிப் பணிக்கு சென்ற இந்திய ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது குற்றச்சாட்டு. மேலும் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கையில் உள்ள தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழம் என்ற பகுதியையும் இணைத்து தமிழர்களுக்கான தனிநாடு ' அகன்ற தனித் தமிழ்நாடு" உருவாக்க விடுதலைப் புலிகள் சதி செய்தனர்; இதற்கான ஆயுத குழுக்களை உருவாக்கினர் என்பதும் மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை ஒன்றை நடத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தும் வருகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1967 (1967-ன் 37) பிரிவு-3-ன் கீழ், (1) மற்றும் (3) துணைப்பிரிவுகளின் அடிப்படையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் எல்.டி.டி.ஈ தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்திய குடிமக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை கடைபிடிப்பதாகவுதற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இன்று முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்வதாகவும் மத்திய அரசு- இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல பொஹொட்டுவ எம்.பி.க்கள் குழுவொன்று தயாராகி வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

போலியான செய்திகளால் பொஹொட்டுவ கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி செயற்படமாட்டார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாட்டின் சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் இது குறித்து முறையான ஆய்வு நடத்தி, இணையத்திற்கு அடிமையாகும் குழந்தைகளை காப்பாற்ற பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் இலங்கை இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். 

இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் டபுள் கேப் சூட்டி என அழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சீடர்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டபுள் கேப் சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் வீரர் என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.