web log free
September 19, 2024
kumar

kumar

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று தொடக்கம் (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அநுரவின் வருகையையொட்டி, இலங்கையர்கள் பேருந்துக்கு வர்ணம் பூசி அலங்காரம் செய்து சாலையில் போட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், தென் மாகாணத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும், மேல் மாகாணத்தின் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்த நிலைமை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய இரு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ளார்.

இவர் தனது உயர்கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

அம்பகவெல்ல பிராந்திய வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைவராகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராகவும், உள்ளுர் மருத்துவ அமைச்சராகவும் கடமையாற்றியதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரை சமகி ஜன பலவேகவின் மதவாச்சி பிரதேசத்தின் இணை அமைப்பாளராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தனது முடிவை அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினங்களில் முன்மொழிப்படுவார் என வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை மற்றும் கடும் மழை காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 23 மாவட்டங்களில் நிலச்சரிவு காரணமாக 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமை 2020 இல் இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அவரது கட்சி செயற்பாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (03) பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்தார். 

கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் மண்சரிவு அபாய வலயங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

இந்த எச்சரிக்கை நாளை காலை 7:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்டம் அல்லது சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

களனி, கழு, ஜின், நில்வலா கங்கை பிரதேசம் பெரும் வெள்ளப்பெருக்கு நிலைமையாக உருவாகியுள்ளது.

தவலம பிரதேசத்தில் கிங் கங்கையின் நீர் மட்டம் 8.35 மீற்றரை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நண்பகல் 12 மணியளவில் பத்தேகம பிரதேசத்தில் இருந்து கிங் கங்கையின் நீர் மட்டம் சிறிதளவு வெள்ளமாக அதிகரித்துள்ளதோடு அதன் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

மேலும், அந்த அறிக்கையின்படி, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையும் பாரிய வெள்ள நிலைமையாக உருவாகி அதன் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுபவுல, அலகாவ, இரத்தினபுரி, பகுதிகளிலிருந்து களுகங்கை மற்றும் களுகங்கையின் கிளை நதியான மகுரு கங்கை மகுர பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அதன் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், பிடபெத்தர பிரதேசத்தில் இருந்து நில்வலா நதியும் பெரும் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது.

கனமழையுடன் களனி கங்கையில் நாகலகம்வீதிய, ஹன்வெல்ல மற்றும் க்ளென்கோஸ் ஆகிய பகுதிகளில் இருந்து சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்து நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.