web log free
May 10, 2024
kumar

kumar

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவையொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் றிசாத் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைத்து பேசுவார் என அறியப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது. 

ரயில் கட்டண திருத்தம் இன்று (23) முதல் அமுல்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய ரயில் கட்டண திருத்தத்தின்படி, 10 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச ரயில் கட்டணம் 20 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், முதல் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேடை டிக்கெட் கட்டணமும் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டாலும், பேருந்துக் கட்டணத்தை ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் இன்னும் குறைவாகவே உள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி அவரை நியமித்து அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது.

அரகலய எதிர்ப்பாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


“விஹார மகாதேவி பூங்காவை எதிர்ப்பாளர்களுக்கு வழங்குவதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார். இப்போது அமைதியான இடமாற்றத்தைத் தொடங்குவதற்கும் அவரைத் தடுத்தது எது? என்று கேள்வி எழுப்பினார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரகலய மக்கள் வீட்டுக்கு அனுப்பியதன் பின்னர், விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்திற்கு வந்த தேசியப் பட்டியல் இடத்தை மீண்டும் சமகி ஜன பலவேகய (SJB) விடம் ஒப்படைக்க வேண்டும், இதனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று பரிந்துரைத்துள்ளார்.

 

பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முறைப்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன

கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மகிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்ரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர

சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ

இலங்கையின் 27வது பிரதம மந்திரியாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தினேஷ் குணவர்த்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு போராட்டக்காரர்களும் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்,பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்புத்தரப்பினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 எனினும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை பிற்பகல் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன