web log free
May 12, 2025
kumar

kumar

பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய  உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும், வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், முகத்துவாரம், மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிரஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில் வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பிரதாப் ராமனுஜம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் கலாநிதி வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோரே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களாவர். 

சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு சபை செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன், தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.  

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று வரிசைகள் இல்லையென்று சிலர் மகிழ்ச்சியடைகின்றனர். விலைகள் அதிகரித்ததுடன், கூப்பன் முறைகளும் கொண்டு வரப்பட்டன. இதனாலேயே வரிசைகள் இல்லாமல் போயின. ஆனால், மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது என்று கூற முடியாது. வாழ முடியாத நாடே இப்போது காணப்படுகின்றது.

விலைகள், கட்டணங்கள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வரிச்சுமைகள் அதிகரித்துள்ளதுடன், வருமான வரி அதிகரிக்கப்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுற்றுலாத்துறை நிறுவனங்களை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது ஜனாதிபதி அரசியல் இலாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றார். அவர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கூறுகின்றார். அனைத்து மாகாண முதலமைச்சர்களும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைப்பதை விரும்புவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளனர். அது முற்றிலும் பொய்யாகும். அவ்வாறு எவரும் அதனை கேட்கவில்லை என்றார். 

 இந்த நேரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இவ்வாறான விடயத்தில் பங்களித்து பாவத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று கேட்கின்றோம். 13ஆம் திருத்தம் ஊடாக அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நாடு பொருளாதாரத்தில் முதலில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இல்லாது அதனை நிறைவேற்றினால் நாட்டில் இனவாதம், பிரிவினைவாதம் ஏற்பட்டு மக்களிடையே குழப்பமே ஏற்படும் என்றார்

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

மேலும், மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளை செலுத்தாவிட்டால், மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள்  நிலை உருவாகியுள்ளது.

அதற்குக் காரணம், பெட்ரோலியம் சட்டக் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை வாங்கத் தேவையான ரூபாய்கள் இல்லை.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டது. 

கொட்டாஞ்சேனையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான 'கிம்புல எலே குணா'வின் நெருங்கிய சகா ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் காருக்குள் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் காயமடைந்த நபர் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக யுடியுப் சமூக செயற்பாட்டாளரும் நடிகருமான சுதத்த திலகசிறி வீதியில் செல்லும் மக்களிடம் இருந்து சேகரித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார்.

நேற்றைய தினம் (17) கொழும்பு கோட்டையில்  10 கோடி ரூபாவை செலுத்த நடிகர் பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார். 

அவர் நேற்று வசூலித்த 1,810 ரூபாயை  முன்னாள் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த சுதத்தா, மைத்திரிபால சிறிசேன நிரபராதி, பணமில்லாததால் அபராதம் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இன்று நான் பெட்டாவுக்கு சென்று தகரத்தை கொட்டி பிச்சை எடுத்தேன். பின்னர் மைத்திரிபாலவிடம் கொடுத்தேன். நான் சேகரித்த பணத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தன்னிடம் பணம் இல்லாததால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் இழப்பீடுகளை சேகரித்து வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு தொடர்களில் தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணி கேப்டன் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவரது தனிப்பட்ட அந்தரங்க விடியோக்கள், புகைப்படங்கள், குரல்பதிவுகள் போன்றவை ஆன்லைனில் லீக்கான நிலையில், இணையவாசிகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவரின் காதலியுடன் பாபர் அசாம் நெருக்கமாக இருக்கும் விடியோ வெளியாகி, அந்நாட்டில் விவாதபொருளாக மாறியுள்ளது.

இந்த விடியோவை கண்ட பாபர் அசாம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்துகளை பகிர்வதோடு, பாபர் அசாமை குறிவைத்து அவரை இழிவுபடுத்தும் விதமாக இந்த விடியோக்கள் கசியவிடப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற தோல்வியால், அவரை முதலில் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு ஷான் மஸுத்தை கேப்டனாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிகவும் கொண்டாடப்பட்ட வீரராக இருந்து வந்த பாபர் அசாம், தற்போது கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக வெளியாகும் தகவல்கள், பாலியல் விடியோ தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 29 அரசியல் கட்சிகளும் 52 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

நேற்று (17) காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை அந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, 50 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை 52 சுயேச்சைக் குழுக்கள் நேற்று செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு பணம் வழங்கும் கட்சிகளை வெளிப்படுத்தும் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், கட்சித் தலைவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு பணம் செலவழிக்கும் கட்சிகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது.

நேற்று (17ஆம் திகதி) எதிர்கட்சித் தலைவர்கள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைச் சந்தித்து அந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கு தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.

நீதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்ததன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை இலங்கையின் சிவில் சமூகம் மற்றும் பல வெகுஜன அமைப்புகளிடம் கொண்டு வருமாறு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், அதனை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd