web log free
May 10, 2025
kumar

kumar

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இது அமைந்துள்ளது.

பிரையன் தாமஸின் கைத்தொலைபேசியை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் நேற்று பகல் முழுவதும் அவர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

சுமார் இருநூறு கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த படகுகள் தெற்கு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களும் படகுகளுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இலங்கை சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையுடன் இலங்கை கிரிக்கெட் ஊடகப் பணிப்பாளர் பிரயின் தோமஸ் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. 

பிரயின் தோமஸ் நடுநிலையாளராக செயற்பட்டு தினேஸ் சாப்டரிடம் 134 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயத்தில் ஏற்கனவே பிரயின் தோமஸ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

3வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி அந்த கலந்துரையாடல்களை நடத்தியதாக அக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் குறிப்பிடுகின்றார்.

காணி மற்றும் காவல்துறை தொடர்பான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனத் தெரிவித்த அவர், இதனை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி நேர்மையாக தலையிட்டுள்ளதாகவும், கலந்துரையாடலின் போது கட்சித் தலைவர்களினால் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் ஷாஃப்டர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாஃப்டர் இன்று (15) அதிகாலை பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.

ஷாஃப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

லங்காதீபவின் படி, அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர் பொரளை மயானத்தில் இருப்பதாக அவரது மனைவியின் கைத்தொலைபேசிக்கு சமிக்ஞை கிடைத்தது.

காயங்களுடன் ஓட்டுநர் இருக்கையில் கட்டப்பட்டிருந்த நிலையில், அவரது அலுவலக ஊழியர் ஒருவரால் அவர் கல்லறைக்குள் கண்டெடுக்கப்பட்டார்.

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற விடயம். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம்.

போதைப்பொருள் வருவதை தடுப்பது முக்கிய செயற்பாடு. அரச அதிகாரிகளோடு பொலிசாரோடு இணைந்து இதை செய்வதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகிறது.

காரணம் அதிகாரிகள், பொலிசார், படைத் தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது .இதனை தடுப்பதற்காக இதனை செய்பவர்களை காட்டிகொடுக்கின்ற போதேல்லாம் அவர்களோடு பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும்

இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் ஐம்பத்திரண்டு வயதான வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் நேற்று பிற்பகல் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், மாலையில் இருந்து அவர் பதிலளிக்காததால், அவரது மனைவி ஜிபிஎஸ் மூலம் தொழிலதிபரை கண்டுபிடித்தபோது அவர் பொரளை கல்லறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

காரின் சாரதி இருக்கையில் கட்டப்பட்டிருந்த ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவரது கழுத்தில் கம்பியால் இறுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த வர்த்தகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்காத நபர் ஒருவருக்கு எதிராக குறித்த வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அம்பலாங்கொட நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆளும் பொதுஜன பெரமுன 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் பதிவாகியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாக்களிக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஜனதா விமுக்தி பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd