web log free
September 20, 2024
kumar

kumar

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு  இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது தொழில் செயற்பாடுகளுக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசல் போன்றவை தாராளமாக கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மண்ணெண்ணையின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டதுடன், ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அவை தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா, படபொத, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கட்டிட பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கொங்கலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சந்தேகநபர்கள் சொத்துக்களை திருடி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொலன்னாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் திங்கட்கிழமை (22) மற்றும் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல் அறுவடை இயந்திரங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் போதிய பதில் கிடைக்காவிட்டால் நாளை முதல் அங்கு செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு உடனடியாக எரிபொருளை வழங்குவதற்கு எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சின் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நீர் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது 50 ரூபாவாக இருந்த சேவைக் கட்டணம் 300 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த சேவைக் கட்டணத்தில் 15 கன மீட்டர் தண்ணீர் அல்லது 500 லிட்டர் வழங்குகிறோம். அதாவது 300 ரூபாய்க்கு. உதாரணமாக, மாதத்திற்கு 15,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதையும் மீறிய அழகுகளுக்கு தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்படும்

5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 500 லிட்டர் சமையல் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு போதுமானது என்று உலகில் ஒரு கருத்து உள்ளது.

சதொச கிளைகள் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை (23) முதல் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

485 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பருப்பின் சில்லறை விலையை 460 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசியை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 198 ரூபாவாகவும் விற்பனை செய்ய சதொச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சதொச உயர் கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி மற்றும் பருப்பு விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் சதொச ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில வாரங்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பார் எனவும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (24ஆம் திகதி) இந்த நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவித்தமை பொய்யானது எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்காக மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அது பொய்யானது எனவும், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மாத்திரமே அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாப்பில் உள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தாய்லாந்து வந்தடைந்த பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்பின் கீழ் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

இரத்தினபுரி நகரிலுள்ள முன்னணி பாடசாலையின் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

23 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அதிபரை கைது செய்து இரத்தினபுரி மேலதிக நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்மாதம் 30ஆம் திகதி வரை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு திகதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் (16) பெற்றோர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

சுமார் 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு நேற்று (23) முதல் தற்காலிக இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு, ஆடை உள்ளிட்ட பல பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொக்லெட், கொக்கோ அடங்கிய உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 300 பொருட்கள் அதில் அடங்குகின்றன. 

Condensed milk

Chocolate

Perfumes

Deodarants

Facial tissue

Tableclothes

Men and women's suits

Underpants

Wrist watches

Electronic calculators

Digital electronic educational equipment

Shavers, hair clippers

Hair dryers

Rice cookers

Microwave irons

Playing cards

Keyboard instruments

Electrical alarm clocks

Binoculars

Sunglasses

Warships

Inflatable rafts

Wheelbarrows

Toasters

Electric Kettles

மேலும் தெரிந்துகொள்ள

 http://www.imexport.gov.lk/images/pdf/gazette/english/Gazette_No_2294-30.pdf