web log free
July 04, 2025
kumar

kumar

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

உலகச் சந்தையின் விலை அதிகரிப்பால் இந்நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் பயன்படுத்திய 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்தை முதலில் சமூகமயமாக்கியவர் யோஷித ராஜபக்ஷ, ஆனால் அவர் அதை உருவாக்கியாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று அவர் கூறுகிறார்.

போராட்டம் தொடங்கும் முன் நடந்த சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆதரித்ததால் தான் ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம், முறையான தயாரிப்பிற்காக சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்த வாரம் பெற்றுக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 10 மில்லியன் ரூபா நட்டஈடு தொகையை வழங்குவது சிறிய விடயம் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் மாத்திரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாவிட்டாலும், தனது நண்பர்கள் உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நானுஓயா பகுதியில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க விடுத்த உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். 

பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்தியசாலைக்கு சென்று அவரை பரிசோதித்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்ச்சியாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முதற்கட்டமாக இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு அந்த அமைச்சுப் பதவிகள் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்குச் சென்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தடுவ வீதி மஹானியார சந்தி பகுதியில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் செய்து முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

போராட்டத்தின் பின்னர் ஏமாற்றமடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விரக்தியடைந்துள்ள மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கான விசா மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளிலும் புதிய முன்னணிகளிலும் இணைந்துள்ளனர்.

நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
 
வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் , உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
உயிரிழந்தவர்களின் விபரம்
01:- அப்துல் ரஹீம் (55)
02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13)
04:- நபீஹா (08)
05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (சாரதி)
ஆட்டோ சாரதி
07:- சன்முகராஜ் (25)
 
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.
 
இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், 'பிரேக்' செயற்படாததாலும் நானுஓயா - ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் சுமார் 50 அடிவரை பள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. வேனும், ஆட்டோவும் கடுமையாக சேதமானது.
 
இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
 
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹொலிகொப்டர்மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd