web log free
September 16, 2024
kumar

kumar

 

குடிநீர் போத்தல்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குடிநீர் போத்தலுக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* பணிபுரியும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது அவளால் வீட்டைக் கையாள முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
*உங்களை கவனித்துக்கொள்ளக்கூடிய மற்றும் உங்கள் வீட்டை முழுமையாக நிர்வகிக்கக்கூடிய ஒரு இல்லத்தரசியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அவர் பணம் சம்பாதிக்கவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* கீழ்ப்படிதலுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தால், அவள் உன்னைச் சார்ந்திருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொண்டு அவளுடைய வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
* வலிமையான பெண்ணுடன் இருக்க முடிவெடுத்தால், அவள் கடினமானவள் என்பதையும், அவளது சொந்தக் கருத்து இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
*அழகான பெண்ணை தேர்வு செய்தால் பெரிய செலவுகளை ஏற்க வேண்டி வரும்.
* நீங்கள் ஒரு வெற்றிகரமான பெண்ணுடன் இருக்க முடிவு செய்தால், அவளுக்கு குணாதிசயங்கள் உள்ளன, அவளுடைய சொந்த இலக்குகள் மற்றும் லட்சியங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சரியான விஷயங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் புதிர் உள்ளது, அது நம்மை தனித்துவமாக்குகிறது.
நிறுத்தி யோசியுங்கள் ?
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் உள்ளனர், அவர்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் ஒருவரின் நிலுவைத் தொகை ரூ.20 இலட்சத்தை தாண்டியதாக சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டியல்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன திடீரென அங்கொட ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு நோய் அறிகுறி அதிகரித்ததால் இவ்வாறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சமஷ்டிக் கட்டமைப்பில், சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம்.

தெளிவாக சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 09ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 04.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10ஆம் திகதி மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரிகள், பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

அதேநேரம், பெப்ரவரி 11ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

அதற்கான காரணம் வருமாறு,

இலங்கையில் மோசடி ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த  வர்த்தகர் ஒருவர் இரகசியமாக வெளிநாடு  தப்பிச் சென்றுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருந்த போது இந்த இராஜாங்க அமைச்சர் தனது பதவி சலுகையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரபுக்கள் பிரவேச பிரிவின் ஊடாக குறித்த வர்த்தகர் நாட்டை வந்தடைய உதவி செய்துள்ளார்.

அதன்பின் குறித்த வர்த்தகர் இராஜாங்க ​அமைச்சர் ஊடாகவே நீதிமன்றில்  ஆஜராகி பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   

இதுகுறித்து புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மலைநாட்டு கிளர்ச்சி காலத்தில் பலன் தரக்கூடிய பல மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் காலிங்கன் யுகத்தில் இந்நாட்டின் வரலாற்று பாரம்பரியம் அழிக்கப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் இந்நாட்டின் விவசாய பாரம்பரியத்தை சீரழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான கூட்டமொன்று தம்புள்ள நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெடிப்புகளை நிறுத்துவதாக கூறி ஆட்சி வந்த அரசாங்கத்தின் கீழ் கையில் எடுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கூட வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அதுமாத்திரமின்றி திரவ உர கொள்கலனும் வெடிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோதாமைக்கு கொண்டுவரப்பட்ட திரவ உரம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு துர்நாற்றம் உடையது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், துர்நாற்றம் அலரி மாளிகை,ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தினால் உணர முடியாது என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களின் துயரங்களை உணரும் நாடி அரசாங்கத்திற்கு கிடையாது என கூறிய எதிர்க்கட்சி தலைவர்,சீனி மோசடி,எண்ணெய் மோசடி,கொவிட் மோசடி போன்ற பாரியளவிலான ஊழல்,மோசடிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது இலங்கையின் ஊழல் விவகாரத்தில் மிகவும் கீழ்தரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய உடல்நிலை சீரின்மையை கருத்திற் கொண்டு அவர் பங்குபற்ற இருந்த அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் வேறு நபர்கள் அதிதிகளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பிரதமர் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்ள இருந்த நிகழ்வுகளில் அவருக்கு பதிலாக அவரது மகன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவே கலந்து கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவருக்கு ஓய்வு தேவை என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

முன்னதாக பிரதமருக்கு சத்திரசிகிச்சை செய்யப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ கூறிய போதும் சத்திரசிகிச்சை நடந்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.

உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.

இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.