web log free
January 13, 2025
kumar

kumar

நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

லங்கா ஆட்டோ டீசல் : ரூ. 55 இனால் அதிகரிப்பு, புதிய விலை ரூ. 176 ஆகும்.
லங்கா 92 பெற்றோல் : ரூ. 77 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்
லங்கா 95 பெற்றோல் : ரு. 75 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 283 ஆகும்.
லங்கா சுப்பர் டீசல் : ரூ. 95 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்.

நாட்டில் உணவுப் பொதியொன்றின் விலையும் உயர்வடைவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலையின் அடிப்படையில், உணவுப் பொதியொன்று 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.

‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
 
வரலட்சுமி சரத்குமார்
 
இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

ரஷ்யா - உக்ரைன் போரில் இரசாயன தாக்குதல்? பல உயிர்கள் அழிவு

உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷியாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷியா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும்.

அமைதியான ரஷியா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். எங்களுக்காக வேறு என்ன தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள்.

எங்கள் மீது குற்றம் சாட்டுவது என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. நான் ஒரு நாட்டின் அதிபர். 2 குழந்தைகளின் தந்தை. எங்கள் நாட்டில் ரசாயன ஆயுதம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் தயார் படுத்தப்படவில்லை. இது உலகுக்கே தெரியும். ரஷியா எங்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தினால் மேலும் பொருளாதாரத்தடைகளுக்கு உள்ளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம்சாட்டி அது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா- இலங்கை பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) ஆகும். ஸ்டேடியத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக மாநில அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதனால் இந்த டெஸ்டில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பகல்-இரவு ஆட்டம் 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. மின்னொளியின் கீழ் நடக்கும் இந்த போட்டிக்கு மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பந்து) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை டெஸ்டில் சூரியன் மறையும் அந்திப்பொழுதில் பந்துவீச்சை எதிர்கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும், அந்த சமயத்தில் கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டும் என்பது பெரும்பாலான பேட்ஸ்மேன்களின் கருத்தாகும். பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை இங்கு பார்க்கலாம்.

*பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் இதுவரை நடந்துள்ள 18 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது. ‘டிரா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆஸ்திரேலியா தான் ஆடியுள்ள 10 பகல்-இரவு டெஸ்டிலும் வாகை சூடி கம்பீரமாக பயணிக்கிறது.

*இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. 2019-ம் ஆண்டு நவம்பரில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து 2020-ம் ஆண்டு இறுதியில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 2 நாளில் அந்த அணியை அடக்கி இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளை அள்ளினார்.

*இலங்கை அணியும் 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.

*பகல்-இரவு டெஸ்டில் இதுவரை 23 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (335 ரன்), பாகிஸ்தானின் அசார் அலி (302 ரன்) ஆகியோர் முச்சதம் விளாசியதும் அடங்கும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் 3 சதம் அடித்துள்ளார். இந்திய தரப்பில் பகல்-இரவு டெஸ்டில் சதத்தை ருசித்த ஒரே வீரர் விராட் கோலி தான். 2019-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்திருந்தார். இது தான் அவர் கடைசியாக அடித்த சதமும் ஆகும்.

*அதிக ரன் குவித்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (704 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கும் (10 டெஸ்டில் 56 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்கள்.

*2019-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 36 ரன்னில் முடங்கியது ஒரு அணியின் மோசமான ஸ்கோராகும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்த பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களை கைது செய்வதாக குறிப்பிட்டார்.

பின்னர், இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது

அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் விலை 27 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம்  தெரிவித்துள்ளது.

நேற்று (10) நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் டீசலின் விலையை 75 ரூபாவாலும் பெட்ரோலின் விலையை 50 ரூபாவாலும் லங்கா IOC அதிகரித்துள்ளது.

அதன்படி புதிய விலை விளம்பரங்கள் வருமாறு,

நாளைய தினமும் மின் தடையை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு நாளை (11) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, நாளை (11) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டரை மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிட மின்வெட்டையும் அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd