தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.
தற்போது ஷாருக்கான் நடித்துவரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்
இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, அனைவரும் ரசிக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கதை டிஸ்கஷன்,படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி பிரியாவுடன் வெளியாடு, உள்நாடு என ஜாலியாக சுற்றி வருகிறார்.
அட்லீ தனது மனைவி பிரியாவின் சிவந்த கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திறமையான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.
பாடகி, நடிகை என பல திறமைகளைக் கொண்ட ஆண்ட்ரியா இப்பொழுது கடற்கரையில் காற்று வாங்கும் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதனை பார்த்த ரசிகர்கள் அனு அனுவாக ரசித்து வர்ணித்து வருகின்றனர்.
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் உதித் லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் அண்மையில் அலரிமாளிகைக்கு வந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதமரின் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 5 கோடி ரூபா காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமரின் நண்பர்களை மகிழ்விப்பதற்காகவே தான் இந்தப் பணத்தைப் பெற்றதாகவும்
அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வேறு முதலீட்டுக்கு செலவு செய்துள்ளதாகவும் லொகு பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடலூர் அருகே கிஞ்சம் பேட்டை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்ததை குறித்து கியூ பிரிவு பொலிசாருக்கும், கடலோர காவல் படை பொலிசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு உறவினர்கள் வீட்டிலும், லாட்ஜிலும் தங்கியுள்ளனர். பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் கிஞ்சம் பேட்டையில் தங்கி வந்ததாகவும் கூறினார்கள். பின்னர் அவர்கள் முறைப்படி விசா வைத்துள்ளார்களா? என்பதனை கியூ பிரிவு பொலிசார் சோதனை செய்தனர்.
அப்போது விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆகியும் கடலூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் விசா கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் க்யூ பிரிவு பொலிசார் மற்றும் கடலோர காவல் படை போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இது சம்பந்தமாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 பேரையும் தீவிரமாக கண்காணிப்பதோடு இவர்களுடன் வேறு யாரேனும் வந்து உள்ளார்களா? அல்லது எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்? விசா காலம் முடிந்தும் ஏன் இங்கு தங்கி உள்ளார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை சற்றுக் குறைந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் தேவை உயரும் என்றும், இந்த ஆண்டு தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 22 கரட் ரூபா 1,14,300/- ஆகவும் 24 கரட் ரூபா 1,23,500/- ஆகவும் உள்ளது.
கடந்த காலங்களில் உலக மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில் கரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
குடிநீர் போத்தல்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குடிநீர் போத்தலுக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.