web log free
September 20, 2024
kumar

kumar

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முனைப்புடன் கட்டியெழுப்பி வந்த கூட்டணியின் பணிகள் மீண்டும் விரைவுபடுத்தத் தொடங்கியுள்ளதாக அந்தக் குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அதன் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தலைமைத்துவ சபை அறிவிப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், தற்போது முடிவடைய வேண்டிய கூட்டணியின் துவக்கமும் தாமதமானது.

எவ்வாறாயினும், தற்போது அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்பிட்டிவல சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் இன்று (21) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெட்டியாராச்சி சுஜித் என்ற 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 07.15 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.

ஆனால் முன்னுரிமை வகைகளில் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அமைச்சுக்கான இருபத்தி ஒரு வாகனம் மற்றும் விமான சேவைக்கு மூன்று வாகனங்கள் உட்பட இருபத்தி ஒரு வாகனங்கள் மட்டுமே அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் கொள்கைகளுக்கு கேடு விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பொன்சேகா தனது பதவியை பறிக்க போவதாகக் கூறி கட்சியின் தலைமை, பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் பல தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடை உத்தரவும் பெற்றுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குழுவின் கூட்டம் நேற்று பிற்பகல் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றதாகவும் அதில் பொன்சேகா சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

ஏசியன் மிரர் “புதிய பாதை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் போது, மருத்துவமனை ஊழியர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அடியாட்களின் நடவடிக்கைகளால் தான் தாக்கப்படுவதாக மருத்துவர் கூறினார்.

எக்காரணம் கொண்டும் மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் எனவும் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறையில் இடம்பெற்று வரும் பல மோசடிகள் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் எனவும் அந்த நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுடுவதற்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்கு நள்ளிரவில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை குறிப்பிடுகிறார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா, சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் என பாராளுமன்ற உறுப்பினர்ஐ எஸ்.எம். மரிக்கார் குறிப்பிடுகிறார்.

தாம் சமகி ஜன பலவேகவில் இருந்தால் கட்சியுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியுடன் இருந்தால் உடனே செல்ல வேண்டும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக இணையவுள்ள எதிர் கட்சி எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பிலும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது வெற்றியடையும் பட்சத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான கலந்துரையாடலில் சமகி ஜன பலவேகவின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், அரசாங்க தரப்பில் இருந்தும் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இக்கலந்துரையாடலில், தேசிய அரசாங்கத்தின் அமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், அதனை விரைவில் முடிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.

சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றின் போது அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதன் காரணமாக அரசியலமைப்பு மீறப்படுகிறது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்படுகிறது, நாட்டின் இறைமை மீறப்படுகிறது என வசந்த பண்டார தெரிவித்தார்.

அதன் காரணமாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.