web log free
July 12, 2025
kumar

kumar

இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சபாநாயகர் அசோக ரன்வல தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் தனது தகுதிகளை உறுதி செய்வதாக வலியுறுத்திய அமைச்சர் ஜயதிஸ்ஸ, தற்போது அவ்வாறு செய்ய முடியாததால் தார்மீக ரீதியில் பதவி விலகியுள்ளார்.

இவ்வாறானதொரு அரசியல் பொறுப்புக்கூறல் வரலாற்றில் இடம்பெற்றதில்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகின்றார்.

கடந்த 17ஆம் திகதி அசோக ரங்வால ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக இருந்த சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அசோக ரங்வலவினால் பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்.

பின்னர், அரசியல் சாசனப்படி, எம்பிக்களின் தீர்மானங்கள் உறுதி செய்யப்பட்ட பின், சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

வாய் பேச முடியாமல் மற்றும் தேர்தலுக்கு பணம் கொடுக்காத காரணத்தினாலேயே நாட்டின் தேங்காய் பிரச்சினை குரங்குகள் மீது சுமத்தப்படுவதாக மக்கள் போராட்டத்தின் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

தேங்காய் ஏற்றுமதி மற்றும் மழை காரணமாக உற்பத்தி குறைவதால் நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, சில பயிர் சேதம் ஏற்பட்டாலும், தென்னை பிரச்சினையை வெளியில் அனுப்புவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என வசந்த முதலிகே வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அதிகளவான பங்கு ஒதுக்கப்பட்டது. ஆண்டுக்கு 326 மில்லியன் ரூபாவாகும்.  

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது குறிப்பிட்ட குழுவினால் அவ்வப்போது பரிசீலனை செய்யப்படும்.

மேலும், மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்கள், விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்யும் வகையில், ஆயுதப்படையைச் சேர்ந்த பணியாளர்களையும் உள்ளடக்க முடிவு செயப்பட்டுள்ளது.  

 

நாட்டிற்கு இதுவரை சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற இணையத்தளத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தரவுகளை மீள ஆராய்ந்து அவற்றைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் அறிக்கையொன்றை வௌியிட்டு பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறு காரணமாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தவறு தற்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பாராளுமன்ற செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனது சர்வதேச முறிகள் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மிகவும் கடினமான மற்றும் சவால்மிக்க இறையாண்மை கடன் மறுசீரமைப்பை  முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் இலங்கை சர்வதேச முறிகள் முறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு...

கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.

எனது கல்வித் தகுதி குறித்து தான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.

ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.

எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள  மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை எடுத்தது.

தற்போதைய சபாநாயகர் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவ சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் போதும், சபாநாயகர் பதவியின் கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், அவரிடம் இல்லாத மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலாளர் தொடர்பான BSc பட்டம் பெற்றவர் என்றும், ஜப்பானில் உள்ள வசேதா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்றும் சுட்டிக்காட்டி, தனது பெயருடன் கலாநிதி என்று பயன்படுத்தியதால் மக்களிடமிருந்து எழுந்த தொடர்ச்சியான எதிர்ப்பின் போதும், தகவல் வினவப்பட்ட போதும், மௌனமாக இருந்து உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்துவதை தாமதமாக்கியதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை 3 ஆவது பகுதியில் பிரிவு 6 இன் பிரகாரமும், அந்த நடத்தைக் கோவையின் 5 ஆவது பிரிவின் நெறிமுறைகளின் பிரகாரம் உள்ள நடத்தை விதிகளின்படி மேற்படி விதிகள் மீறப்பட்டுள்ளமையால் மற்றும் பாராளுமன்றம், அரசியலயைப்பு மற்றும் அவரால் நேரடியாகத் தலைமை தாங்கப்படும் ஏனைய உயரிய நிறுவனங்களினதும் நம்பிக்கையை மீறியுள்ளபடியால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

 

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விடப்படவுள்ளன.

இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 4.5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, நீண்டகாலத்திற்காக குரங்குகளை கட்டுப்படுத்தும் முன்னோடி செயற்திட்டம் ஒன்றே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து கடந்த ஓராண்டுக்கு முன்னர் செயற்படுத்திய குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவிக்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் குறைந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd