web log free
September 20, 2024
kumar

kumar

தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில், நடிகர் விஜய் அரசியல் உள்நுழைவதற்கான முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விஜய் அரசியலில் நுழைந்திருக்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணங்கள் இருக்கின்றன. விஜய்க்கு இரண்டு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வந்தன.

மத்தியில் பா.ஜ.க.வில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வந்தது. அதேபோன்று இங்கே தமிழகத்திலும் அவர் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

தி.மு.க வில் இளைய வாரிசு என்று திடீரென்று உதயநிதியை கொண்டு வந்து எதிர்கால முதல்வர் என்ற விம்பத்தை உருவாக்கி செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர் கிட்டத்தட்ட சினிமாவின் முழு கட்டுப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக தெரிகிறது.

அவரும் நடிகராக இருந்தவர். அவருக்கு இந்த விடயங்கள் தெரியும். சினிமாவில் இருக்கின்ற சகல பிரச்சினைகளையும் ஏறத்தாழ அவர் தான் கையாளுகின்றார் என்று தெரிகின்றது. இதில் விஜய்யின் படங்களும் உட்படுகின்றன.

மிகப் பிரமாண்டமான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனமே வெளியிடுகின்றது. அப்படிப் பார்த்தால் சினிமா துறையிலும் விஜய்க்கு நெருக்கடி வருகின்றது.

இந்த நெருக்கடிகளை எப்படி முறியடிக்க முடியும் என்ற பின்னணியில்தான் விஜய்யின் அரசியல் பிரவேசம் அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி - விஜய் அரசியலில் பங்கெடுக்கும் போது அது இலங்கை தமிழ் மக்களுடனான அவரது உறவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

இலங்கை தமிழ் மக்கள் நிச்சயமாக விஜய்யை நேசிக்கின்றார்கள். இதற்கு நான் பல இடங்களில் சான்று பகிர்வேன். விஜய்யின் ரசிகர்களை நான் முல்லைத்தீவில் பார்த்திருக்கின்றேன்.

மனம் சோர்ந்திருக்கின்ற மக்கள் கூட விஜய்யை நேசிக்கின்றார்கள். மக்களுக்கு விஜய்யின் மேல் நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கையை விஜய் எந்தளவு தூரம் காப்பாற்றுவார் என்பதே எனது ஆதங்கமாக இருக்கின்றது.

இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டுமென்றால் அந்த நாட்டின் அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும். எனவே இதனை விஜய் எவ்வாறு அணுகுவார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில் பெரிய மாற்றங்களை செய்யக் கூடிய இடத்தில் தான் விஜய் இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாத சிங்கள பௌத்த இனவாதி என்றும் புலிகளுக்கு எதிரானவர் எனவும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தனது சித்தாந்தம் அல்ல என்றும், இவை அக்காலகட்டத்தில் எழுந்த பிரச்சினைகள் என்றும் அறிவிக்கிறார்.

மக்களை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது சித்தாந்தம் என ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகம் மற்றும் பிற நாடுகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்க சார்பு பொருளாதார மாதிரியை நமது நாடு இப்போது அகற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து பாலர் பாடசாலை முதல் உயர்நிலைப் பாடசாலை வரையிலான குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை மார்ச் 7ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள குழந்தைகளுக்கான மன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்வி அமைச்சினை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாக இருந்தாலும், குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்களை தயாரித்து முடிக்க முடியாத நிலையே மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளதுடன், பாடத்திட்டத்திற்கு அமைய புத்தகங்களை தயாரிக்கும் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அந்தப் பொறுப்பை அமைச்சு இதுவரை நிறைவேற்றாததால், சுகாதார அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக மன்றத்தின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

பாடத்திட்டத்தின்படி சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வரைகலை வடிவமைப்பு அன்றைய தினம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் குற்றச் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. மேலும் அவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

கூரகல விகாரை தொடர்பில் தாம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதுடன் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல்கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் கூண்டில் இருந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கின் சாட்சிய விசாரணை முடிவடைந்த பின்னர், வழக்கின் தீர்ப்பு மார்ச் 28ஆம் திகதி வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூரகல விகாரை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தேசிய மற்றும் மத அமைப்புகளுக்கு தீங்கானது என கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (17) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

இன்று (17) மாலை 05 மணி முதல் நாளை (18) காலை 09 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என சில கட்சிகள் போலியான கருத்துக்கணிப்புகளை முன்வைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதுமே அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்றும், ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் காளான்கள் போல் கணக்கெடுப்பு அறிக்கைகள் வெளிவருவதாகவும், அந்த தரவுகள் பொய்யானவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வு அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள அறிக்கை தரவுகளிலிருந்து மாதிரிகள் மற்றும் தகவல்களை எவ்வாறு எடுப்பது என்பது தெளிவாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

சமகி ஜன பலவேக கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைமையையும் கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்ததற்காக கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவை பதவியில் இருந்து நீக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் பல மூத்த தலைவர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மிக விரைவில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேச நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையை பராமரிக்காவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2800-3200 மில்லியன் தேங்காய்களாகவும், உள்நாட்டு நுகர்வுக்கு எடுத்துக் கொண்டால் 70% ஆகவும் உள்ளது.

மேலும், ஒரு தேங்காய் 70 ரூபாவுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயாக மாற்றினால், ஒரு போத்தல் எண்ணெய் 600 ரூபாவாகும் எனவும், தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 – 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.