web log free
May 12, 2025
kumar

kumar

2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது.

இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

"அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை த் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்."

- இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தற்காலிக உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமைகளில் ஈடுபடாமலிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இ - சேவைக்குள் பிரவேசித்து முறையான வழிமுறைகளை பின்பற்றி தமக்கான வாக்காளர் அட்டைகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமல்ல. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகின்றது. இ - சேவை ஊடாக வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்காளர்களுக்கும், வாக்களிப்பு மத்திய நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இலகுவானதாக இருக்கும்.

வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தை அண்மித்த பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முன்னெடுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொகுதிகளில் உள்ள காரியாலயங்கள் மற்றும் அவற்றை சூழ அமைக்கப்பட்ட பதாதைகள், கட்சி கொடிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமையாகும். ஆகவே, வாக்களிக்கச் செல்வதற்கு அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு தாபன விதிக்கோவையின் பிரகாரம் குறைந்தபட்சம் 4 மணித்தியாலங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை வழங்க வேண்டும்.

தனியார்துறை சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவது தொழில் அல்லது சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும்.

தூரப் பிரதேசங்களில் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிக்கச் செல்லவுள்ள வாக்காளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும்.

வாக்களிக்கச் செல்லும்போது தேசிய அடையாள அட்டை (பழையது அல்லது புதியது), செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜை அடையான அட்டை ஆகியவற்றைக் காண்பித்து தமது ஆளடையாள அட்டையை உறுதிப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பிக்க தவறும் பட்சத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.

வாக்களிப்பு தினத்தன்று வாக்காளர்கள், வாக்களிப்பு மத்திய நிலைய பணிக்குழாம், போட்டியிடும் வேட்பாளர், வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், வாக்களிப்பு நிலைய கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

போட்டியிடும் வேட்பாளர் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும். ஆனால், வாக்களிக்கும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது.

வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாக்களிப்பு மத்திய நிலையத்தையும், வாக்களிப்பதையும் புகைப்படமெடுப்பதையும், காணொளியாகப் பதிவிடுவதையும், தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கைவசம் வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி விட்டு வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்குச்சீட்டுக்கள் இரண்டு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மொனராகலை, பொலனறுவை, கேகாலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 'ஒற்றை நிரல்' வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும். ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கு 'இரட்டை நிரல்' வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படும்.

வாக்காளர் ஒருவர் தாம் விரும்பும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்தின் முன்பாகப் புள்ளடியிட்டு வாக்களிக்க முடியும். வேட்பாளர் விருப்பு வாக்கு ஒன்றை அளிக்க விரும்புவாராயின் ஒரு விருப்பு வாக்கு இலக்கத்தின் முன்பாகப் புள்ளடியிட முடியும்.

இரண்டு விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் இரண்டு விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்னிலையில் புள்ளடியிட முடியும். அதேபோல் 3 விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் 3 விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்பாகப் புள்ளடியிட முடியும்.

வாக்குச்சீட்டில் உத்தியோகபூர்வ அடையாளமிடாமல் இருத்தல், வாக்குச்சீட்டில் வாக்களிப்பு அடையாளமிடமலிருத்தல், அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்கு மாத்திரம் அளித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தல் ஆகிய காரணிகளால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

தேர்தல் சட்டங்களைச் சிறந்த முறையில் முழுமையாக செயற்படுத்திய காரணத்தால்தான் இம்முறை தேர்தல்கள் வன்முறைகள் மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களின் குடும்பம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதன் விளைவு தாங்கள் ஆதரவளித்த வேட்பாளர்களுக்குத் தாக்கம் செலுத்தாது. ஆகவே, எந்நிலையிலும் உங்கள் குடும்பத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுங்கள்.

வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்றுகூடல், ஊர்வலம் மற்றும் பேரணியாகச் செல்லல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள். முடிவுகள் வெளியானவுடன் பொது இடங்களில் பட்டாசு கொளுத்துவது சட்டவிரோதமான செயற்பாடாகும். முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்குச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்." - என்றார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆம் திகதி இல் போயா தினமும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுக்கடைகள் மூடப்படவுள்ள தினங்களில் அனுமதி விதிகளை மீறி சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கலால் வரி நிலுவையை செலுத்த நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மீது கலால் திணைக்களம் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், அந்த நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் திணைக்கள உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆதரவாளர்கள் இடையில்  மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீனின் வாகனம் மோதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் தொண்ணூறு ஆயிரம் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, 63,145 பொலிஸ் அதிகாரிகள், 32,00 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், 11,010 முப்படை அதிகாரிகள், 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 89,582 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து வாகன வருமான உரிமம் வழங்கும் பகுதிகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் பொதுத் தேர்தல்தான் காரணம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அந்த பகுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் எஸ். எல். தம்மிகா கே விஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வு முடிந்து பணிக்கு வரும் முதல் நாளிலேயே அபராதம் ஏதுமின்றி உரிய உரிமக் கட்டணத்தைச் செலுத்தி வருவாய்த்துறை உரிமம் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியாத நிலையில் இன்னும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“கழிவுகள் வங்கிக் கணக்கில் செல்கிறது. ஒவ்வொரு காப்பீட்டு பெறுநரும் வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடங்க முடியாதவர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர். அடையாள அட்டை இல்லாததே வங்கிக் கணக்கு திறக்க முடியாததற்கு காரணம்.

இப்போது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அதையும் காப்பாற்ற வேண்டும். டிசம்பரில் யாரும் வெளியேற மாட்டார்கள். மேலும் இரண்டு லட்சம் முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீண்டும், தகுதியானவர்களைத் தேர்வு செய்ய மேல்முறையீட்டுக் குழுவை நியமித்துள்ளோம்’’ என்றார்.

சிரச தொலைக்காட்சியின் போர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா பெரியபுளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் எம்பிக்க தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபத் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.பிலிப்குமார் இ.தொ.காவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.  

இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

இலங்கை தொழிலாளர் காங்ரஸில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரோடு அரசியல் ஈடுபட்டு வந்த பிலிப்குமார் 37வருடங்கள் இந்த கட்சியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச சபை உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

37வருட அரசியலினால் தனது வாழ்க்கையை இழந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சந்தேகம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி தனது 50 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுவை 30 ஆகக் குறைக்குமாறும், ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுக்கள் இருப்பதாகவும் தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் விடுத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு பாதுகாப்பு அளவுகோல் செய்யப்பட்டது என்பது தனக்கு புதிராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 5 ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளில் தாம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் என்றும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் தான் என்றும் விடுதலைப் புலிகள் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 63 இராணுவ அதிகாரிகள் மற்றும் 180 பொலிஸ் அதிகாரிகள் 243 பாதுகாப்பு அதிகாரிகள், மைத்திரிபால சிறிசேனவிற்கு 109 பொலிஸ் அதிகாரிகள், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 200 பாதுகாப்பு அதிகாரிகள் 25 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 175 இராணுவ அதிகாரிகள் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஆனால் தனக்கு 50ல் இருந்து 30 ஆக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதென சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd