web log free
September 20, 2024
kumar

kumar

இணையச் செயற்பாடுகள் தொடர்பான பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஆன்லைன் முறைகளின் பாதுகாப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

அதன் விதிமுறைகளின்படி, முன்னாள் காதலிகளின் புகைப்படங்களை வெளியிடுவது அல்லது யாரையாவது தேவையில்லாத பிரச்சனையில் சிக்க வைத்து 'கொடுமைப்படுத்துவது' 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரிவு 20 இதனை விவரிக்கிறது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம சமர்ப்பித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம ரம்புக்வெல்லவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று ஆஜரான அமைச்சர்  கெஹலியவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயரிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று [02] தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றி கழகம்

இந்தநிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22.01.2024 அன்று பெலியத்த பிரதேசத்தில் இந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் 39 வயது மனைவி மற்றும் 72 வயதுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பதகம, முத்தரகம, பல்லேவெல பொலிஸ் பிரிவில் மறைந்து இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் கடந்த ஜனவரி 21ஆம் திகதி பெலியஅத்த பகுதிக்கு பேருந்தில் புறப்பட்டு 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் ஒருவருடன் துபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

துபாயில் உள்ள நிபுண மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரும் தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவின் வழிகாட்டலில் இது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெனரல் தயாராத்நாயக்க நேற்று முன்தினம் (30) காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

இதனை எதிர்த்து  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (31) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, ஜெனரல் தயா ரத்நாயக்கவை கடுமையாக விமர்சித்தார்.

அந்த விமர்சனத்தால் ஏமாற்றமடைந்த ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை மௌபிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு வந்து அதன் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த விவாதத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நாட்களில் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் புதியவர்கள் இணைவதற்கு அக்கட்சியின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் அரசியல் சபை குழப்பமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில எம்.பி.க்கள் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஏனைய கட்சிகளின் எம்.பி.க்கள் வருவதால் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தமது மாவட்டங்களில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சில எம்.பி.க்கள் கட்சியை விட்டு விலகவும் முடிவு செய்து வருகின்றனர்.

செயற்குழு உடனடியாகக் கூடி விவாதிக்க வேண்டும் என எம்.பி.க்கள் குழு ஒன்று கட்சியின் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

CEYPETCO எரிபொருள் நிறுவனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிகளை அகற்றும் தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Veet, இலங்கைச் சந்தையில் 'New Veet Pure' ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது.

இந்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பானது, புரட்சிகரமான அம்சங்களை கொண்டு வருகின்றது. மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வானது இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் பெண் ஆளுமைகள் கலந்துகொண்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

இந்நிகழ்வில் உமாரியா சின்ஹவன்ச போன்ற புகழ்பெற்ற பாடகியும் அடங்குகின்றார். அவருடன் இலங்கை பேஷன் மற்றும் மொடலிங் துறையில் ஒரு சின்னமான ரொஷேன் டயஸ், பிரபல அழகுக்கலை நிபுணரும் தொழில்முனைவோருமான ஹாசினி குணசேகர உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

முடி அகற்றுவதில் #NextBigThing என நிலைநிறுத்தும் வகையில், 'New Veet Pure' பல புத்தாக்கமான அம்சங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. அதன் ஒரு தனித்துவமான பண்பான நீண்ட நேர புதிய நறுமணமானது, முடி அகற்றுதல் அனுபவத்தை ஒரு அற்புதமான வழியாக மாற்றுகிறது.

இத்தயாரிப்பானது, உலர் சருமம் (திராட்சை விதை எண்ணெயின் சாரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது), சாதாரண சருமம் (வெள்ளரிக்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது), உணர்திறன் வாய்ந்த சருமம் (கற்றாளைச் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது) என வெவ்வேறு சரும வகைகளுக்கு ஏற்றவாறு 3 வகைகளில் கிடைக்கிறது. 

புதிய சிறப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ள New Veet Pure ஆனது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சவரம் போன்ற குறைவான பாதுகாப்பான முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக, வசதியான, செயற்றிறன் மிக்க, பாதுகாப்பான அம்சங்களின் சாராம்சமாக அமைகின்றது.

Salon waxing போன்ற விலையுயர்ந்த மாற்று நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், New Veet Pure ஆனது விரைவான, தொந்தரவற்ற தீர்வாகத் திகழ்கிறது. இது சிக்கனமானது எநீங்கள் எதிர்பார்க்கும் சிறந்த முடிவை வழங்குகிறது. New Veet Pure இன் அனைத்து வகைகளும், விரிவான, கடுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்பு மற்றும் செயற்றிறனை உறுதி செய்கிறது.

New Veet Pure வெளியீடானது, வழக்கமான தயாரிப்பு வெளியீட்டு முறைகளிலிருந்து மாறுபட்டதாக, முக்கிய விருந்தினர்களான உமாரியா, ரொஷேன் மற்றும் ஹாசினி குணசேகர ஆகியோரைக் கொண்ட குழுவான கலந்துரையாடலை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

நவீன இலங்கைப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதில் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையமாக இக்கலந்துரையாடல் அமைந்தது. இந்நிகழ்வானது, Veet இன் பிரபல தன்மையின் முக்கிய அம்சத்தை கோடிட்டுக் காட்டியது. குறிப்பாக வெறுமனே முடியை அகற்றும் ஒரு பொருளாக இருப்பதன் அர்ப்பணிப்பைக் கடந்து, நவீன பெண்ணை அவளது பயணத்தின் துணையாக மேம்படுத்துவதற்கான ஒரு அம்சமாக விளங்குகின்றது, என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Reckitt Benckiser Lanka Ltd சுகாதாரப் பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சத்துரிகா பொன்சேகா இது தொடர்பில் தெரிவிக்கையில், "முடி அகற்றும் தயாரிப்புகளில் உலகளாவிய ரீதியில் Veet முன்னணியில் உள்ளது. மேலும் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள், இவ்வர்த்தகநாமத்தின் வெற்றியின் மூலக்கல்லாகும்.

புதிய Veet Pure ஆனது, விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) முயற்சிகளின் விளைவான ஒன்றாகும் என்பதோடு, இது முடி அகற்றுவதில் #NextBigThing எனும் அதன் அடிநாதத்திற்கு ஏற்றவாறு திகழ்ந்து, அனைவரிடையேயும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள சந்தைகளில், பயனுள்ள மற்றும் சிக்கனமான சுய சீர்ப்படுத்தும் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வரும் இவ்வேளையில், இப்புதிய தயாரிப்பு உள்ளூர் சந்தைக்கு வருகிறது. அத்துடன், Veet Pure ஆனது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெறும் என நாம் எதிர்பார்க்கிறோம்," என்றார்.

Reckitt Benckiser Lanka Ltd சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் அஞ்சலிகா மஹிந்தபால தெரிவிக்கையில், "முடி அகற்றும் விடயத்தில், Veet எப்போதும் பயனுள்ள, பாதுகாப்பான, பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரிவாக தனித்து நிற்கிறது. New Veet Pure அதை மேலும் உயர்ந்த நிலைக்குசெல்லும். அதன் மேம்படுத்தப்பட்ட கலவையானது, புதிய வாசனை மற்றும் இயற்கை மூலப்பொருட்களுக்கு மேலதிகமாக, நீண்ட நேர மிருதுவான தன்மையை வழங்குவதோடு, ஈரப்பதன் மற்றும் பாதுகாப்பு அடுக்கு பண்புகளையும் அது கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் யாவும் முடி அகற்றுதல் அனுபவத்தை பயனுள்ளதாக மட்டுமல்லாது, சுவாரஷ்யமாகவும், எதிர்பார்ப்பு மிக்க ஒரு சடங்காகவும் மாற்றியமைக்கின்றது," என்றார்.

அழகு நெறிமுறைகளுக்கு அப்பால் பெண்களை மேம்படுத்தும் நோக்குடனும், Reckitt Benckiser இன் விரிவான விற்பனை வலையமைப்பின் ஆதரவுடனும், Veet இலங்கைப் பெண்களுக்கு அதன் 3 வகை தயாரிப்புகளையும் நாடு முழுவதும் கிடைக்கச் செய்கின்றது. அனைத்து வகைகளும் 30 மற்றும் 50 கிராம் பொதிகளில் வருவதோடு, New Veet Pure ஆனது பட்ஜெட்டுக்கு ஏற்றதுடன், அனைத்து பெண்களும் எளிதாக அணுகக்கூடியதாகும்.

Reckitt Benckiser பற்றி:

மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மேம்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட FMCG தயாரிப்புகளில் புகழ்பெற்ற, உலகளாவிய முன்னணி நிறுவனமாக Reckitt Benckiser திகழ்கின்றது. சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகிய பிரிவுகளில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற Reckitt Benckiser நிறுவனம், Harpic, Dettol, Durex, Mortein, Lysol, Air Wick, Strepsils உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த பல்வேறு வர்த்தகநாமங்களின் தாய் வீடாக விளங்குகின்றது.

1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தான் தியானம் செய்ததாக வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதனால் தனக்கு ஞாபக சக்தி அதிகம் என்று கூறினார்.

கணனி, கால்குலேட்டர் அல்லது குறிப்புகள் எதுவுமின்றி தான் கூட்டங்களுக்குச் சென்று எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளை வழங்குவதாகவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எந்த அமைச்சு குறித்தும் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்று கூறினார். 

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.