web log free
May 08, 2026
kumar

kumar

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவருக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அரச வதிவிடத்தை இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் தங்களது பல கோணங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்ல. அவர் இந்த நாட்டில் நிலவிய 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர்.  

சர்வதேச அழுத்தங்களுக்கு ஒரு போதும் அடிபணியாமல் தன் நாட்டுக்காகத் தனது பொறுப்பை சரிவர செய்து முடித்தார்.

மகிந்தவுக்கு மூன்று புதல்வர்கள் உள்ளனர். அவர்களால் மகிந்தவைப் பார்த்துக் கொள்ள முடியாதா? என்று சிலர் கேட்கின்றனர்.

தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தான் பிரச்சனை உள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும் பிரிவினைவாத சிந்தனையுடையோர் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் இந்த நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர். 

அதனால் தான் அரகலய காலத்தில் கூட நிதி வாரி வழங்கப்பட்டது.  அதன் ஓர் அங்கமாகவே மகிந்த வெளியேற்றப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராம மாவத்தைக்குச் செல்ல மாட்டார். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். 

தமது நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை.  ஆனால் இலங்கையில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு - புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெருவிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் 5ஆம் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைககளுக்காக 05 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலதிகமாக விமானப்படை விமானமும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  

மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையின்படி, அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செப்டம்பர் 6 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியவர்கள் இந்நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை மித்தேனிய பகுதியிலிருந்து மேற்கு வடக்கு குற்றப்பிரிவு மீட்டது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெகோ சமனிடம் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், குறித்த இரசாயன மாதிரிகள் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. 

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கையில், 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு ரூ. 2.06 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், குறித்த யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 3 பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் அமர்வு உத்தரவிட்டது.

2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்க செலவினம் 4,434 பில்லியன் ரூபாய் ஆகும். 

அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக நிதி அமைச்சகத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது ரூ. 634 பில்லியன் ஆகும். 

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சகத்திற்கு ரூ. 618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சிற்காக ரூ. 596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் ஆண்டிற்கு சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கு ரூ. 554 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ. 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கல்வி அமைச்சகத்திற்கு ரூ. 301 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அடுத்தாண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 11 பில்லியன் ஆகும். 

2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.7 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது சுமார் ரூ. 8 பில்லியன் அதிகமாகும். 

2026 ஆம் ஆண்டில், முக்கியமாக வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 8.29 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை இவ்வாறு, செலவின அளவு அதிகரிக்க காரணமாகும். 

மேலும், 2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக ரூ. 488 பில்லியன் ஒதுக்ககப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுகட்ட பெறக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் பெறுதலின் அதிகபட்ச வரம்பு ரூ. 3800 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதை மீறக்கூடாது. 

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முதலாம் வாசிப்புக்காக செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதியமைச்சர் என்ற முறையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும். 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

தனது அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு அவர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் சேர்க்க எந்த சொத்துக்களும் இல்லை என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறுகிறார்.

ஒன்று அல்லது இரண்டு பேரின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை மட்டுமல்ல, முடிந்தால், அவர்கள் அனைவரின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளையும் நாட்டின் முன் வைக்குமாறு அவர் நாட்டுக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறுகிறார்.

தனது சொத்து அறிவிப்புகளில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்றவை மற்றும் தனது தொழில் வாழ்க்கையிலிருந்து சம்பாதித்தவை ஆகியவை அடங்கும் என்றும் சுனில் வட்டகல கூறுகிறார்.

ஒரு சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவரது பெருமளவிலான சொத்துக்கள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சமரசிங்கவுக்கு ரூ.275 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வியாபார கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் தங்கம் போன்ற பெரும் சொத்துக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளுக்கு பதிலளித்த அமைச்சர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தனது குடும்பத்திலிருந்து சில சொத்துக்களை அவர் பெற்றதாகவும், 28 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

"எனது குடும்பத்திலிருந்து பெறப்பட்ட சில சொத்துக்கள் எனக்கு உள்ளன. நான் 1997 முதல் கல்வி வகுப்புகளை நடத்தி வருகிறேன், பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகும் அதைத் தொடர்ந்தேன். 28 ஆண்டுகளுக்கு முன்பு தம்புத்தேகம நகரில் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, இப்போது அதை மூன்று மாடி கட்டிடமாக உருவாக்கி வாடகைக்கு விட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் கூறப்பட்ட தங்கம், சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் கிரிப்டோ நாணயங்களை கூட வைத்திருப்பதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

"நானும் என் மனைவியும் 2006 ஆம் ஆண்டு தங்கம் வாங்கினோம், அப்போது ஒரு பவுண்ட் தங்கம் ரூ. 6,000 ஆக இருந்தது. ஐடி (தகவல் தொழிநுட்பம்) துறையில் புத்திசாலியான என் மகன் கொவிட் காலத்தில் நாங்கள் வீட்டில் இருந்தபோது ஒரு கிரிப்டோ கணக்கைத் திறந்தான்," என்று அவர் கூறினார்.

ஒரு அரசியல்வாதியாக பொதுப் பணத்திலிருந்து ஒரு சதம் கூட சம்பாதித்ததில்லை என்று அமைச்சர் கூறினார். "நான் டின் (வரி செலுத்துவதற்கான அடையாள எண்) எண்ணையும் வரிகளுக்கான கோப்பையும் வைத்திருக்கும் ஒரு நபர்," என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளிகள் தங்களிடமிருந்து பணம் வசூலித்த எம்.பி.க்களை அம்பலப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வரி வசூலிப்பவர்கள் போல ஒவ்வொரு மாதமும் குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று எம்.பி.க்கள் பணம் வசூலித்து வருவதாக ஜனாதிபதி கூறினார்.

சில அமைச்சர்கள் பல மாதங்களாக இந்தக் குற்றவாளிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் பகுதியின் தொடக்க விழாவில்  உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு கூறினார்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மேலோட்டமாக அரசுக்கு ஒத்த ஒரு கருப்பு அரசை உருவாக்கியுள்ளதாகவும், நாட்டின் சட்டப்பூர்வ இராணுவம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

"போதைப்பொருட்களை அடக்குவதற்காக இருக்கும் காவல்துறையினர், அந்தக் குற்றவாளிகளின் போதைப்பொருட்களை எடுத்துச் சென்றனர். குற்றங்களை அடக்குவதற்கான கொள்கை உடன்பாட்டைக் கொண்ட அரசியல் அதிகாரம், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. சட்டவிரோத பாஸ்போர்ட்டுகளைத் தடுக்க இருக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, அவர்களுக்கான பாஸ்போர்ட்டுகளை உருவாக்கியது. சட்டப்பூர்வமாக கார்களைப் பதிவு செய்ய இருக்கும் நிறுவனம் அவர்களின் கார்களைப் பதிவு செய்தது. கூடுதலாக, அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பையும் வழங்கியிருந்தன," என்று ஜனாதிபதி கூறினார்.

மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, வலஸ்முல்ல நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்ததை அடுத்து, விசாரணைக்காக 7 நாட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் உத்தரவு

அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது. 

அவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"பெகோ சமன்" மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோர் கடந்த 05 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd