web log free
March 29, 2024
kumar

kumar

இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேச நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையை பராமரிக்காவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2800-3200 மில்லியன் தேங்காய்களாகவும், உள்நாட்டு நுகர்வுக்கு எடுத்துக் கொண்டால் 70% ஆகவும் உள்ளது.

மேலும், ஒரு தேங்காய் 70 ரூபாவுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயாக மாற்றினால், ஒரு போத்தல் எண்ணெய் 600 ரூபாவாகும் எனவும், தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 – 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 9,434 முறைப்பாடுகள் கடந்த 2023 ஜனவரி (01) முதல் டிசம்பர் (31) வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், மிருகத்தனம் தொடர்பான 2242 முறைப்பாடுகள், சிறுமிகளை கற்பழிப்பு தொடர்பான 51 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர்களை ஆபாசமான செயல்களில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகள் உள்ளன.

போதைப்பொருள் கடத்தலுக்கு குழந்தைகளை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், குழந்தைகளை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான 'குடு சலிந்து' என்பவரின் உதவியாளர் ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

பியுமி ஹஸ்திக எனும் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகராக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள குடு சலிந்துவுடன் இணைந்து சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குடு சலிந்து அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சலிது மல்ஷிகாவின் முதன்மை கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட 'பியுமா' என அழைக்கப்படும் பியும் ஹஸ்திகா டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை 'பியுமா' கண்காணித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசேட குழுவொன்று அவரை டுபாயில் வைத்து கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் எந்த ஒருவரின் பெயரையும் பாடசாலைகளுக்கு பெயர் வைக்க பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேம்ஜயந்த தெரிவித்தார்

இன்று (15) அனுசரிக்கப்படும் சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் புற்றுநோய்க்கு ஆளானதாக பதிவாகியுள்ளதென தெரிவித்தார்.

அத்துடன், வருடாந்தம் 250-300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம அபேஷா வைத்தியசாலையின் குழந்தைப் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சஞ்சீவ குணசேகர தெரிவித்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இரத்தப் புற்றுநோயானது சிறுவர்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை சாப்பிடுவதே பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்றும், ஆனால் குழந்தை பருவ புற்றுநோய்க்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வருடத்திற்கு 1,000 முதல் 1,200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் புதிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு ஹைட் சதுக்கத்தில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதுடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மக்களின் நன்மதிப்பை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் விசேட அம்சமாகும்.

இவர்களுக்குப் பின்னால் உள்ள மேலும் பல பிராந்திய அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பதையும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் தேர்தல் பிரசாரத்திற்காக இந்தியாவில் இருந்து முந்நூறு மில்லியனுக்கும் அதிகமான ரூபாவை பெற்றதா என்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கலாநிதி வலவ ஹங்குன்வேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த பணம் ஜனதா விமுக்தி பெரமுனவினால் பெறப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார். 

 

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் சுமார் 9,750,000,000 ரூபா என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் 2024 பட்ஜெட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்டது.

“பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் இதேபோன்ற வரவு செலவுத் திட்டம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதிப்படுத்தினார். "ஆனால் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

சாலியவெவ 15ஆம் கட்டை பகுதியில் கை உழவு இயந்திரத்துடன் சொகுசு ஜீப் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சாரதியுடன் தனது வாகனத்தில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப், அவருக்கு முன்னால் பயணித்த கை உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.