web log free
July 27, 2024
kumar

kumar

வங்கி, வாடிக்கையாளர்களுக்கு இணையவழி CRIB அறிக்கைகளுக்கான அணுகலை வழங்கும் முதலாவது முக்கியமான முறைசார் வங்கியாக மாறியுள்ளது. 

வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட கடன் அறிக்கைகள் (MyReport) மற்றும் கடன் தரப்படுத்தல் புள்ளி (CRIB Score)) தொடர்பில் அறிந்துகொள்வதற்காக பதிவுசெய்து, கோரிக்கை விடுப்பதற்கான, சிரமங்களற்ற மற்றும் திறன்மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் வகையில் கடன் தகவல் பணியகத்துடன் (Credit Information Bureau - CRIB ) ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையான கூட்டாண்மை தொடர்பில் மக்கள் வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது.

தனிநபர் ஒருவரோ அல்லது நிறுவனம் ஒன்றோ கடனொன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதாக தமது கடன் தரப்படுத்தல் தொடர்பில் சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு 'MyReport' மிகவும் முக்கியமானது. இந்த அத்தியாவசியமான மற்றும் புத்தாக்கமான சேவை தற்போது '‘People's Pay’ wallet app மூலம் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் முக்கியமான முறைசார் வங்கியொன்றால் இந்த வகையில் முதன்முறையாக வழங்கப்படும் சேவையாக மாறியுள்ளது.  

இன்றைய வேகமான டிஜிட்டல் யுகத்தில், தனது வாடிக்கையாளர்களின் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மக்கள் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்தும் கூட, தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே முக்கியமான நிதியியல் தகவல் விபரங்களை அணுகுவதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதை உறுதி செய்து, மகத்தான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவங்களை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இந்த சமீபத்தைய முயற்சி சிறந்ததொரு சான்றாகும். 

'இந்த வசதியின் அறிமுகமானது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தை உள்வாங்குவதில் எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது,' என்று மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டார்.

'முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகளாவிய தொற்றுநோய் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக டிஜிட்டல் தீர்வுகள் மீது நாம் மூலோபாயரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். 'MyReport' இல் CRIB  அறிக்கைக்கான வேண்டுகோள் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்துள்ளதன் மூலமாக, இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.    

வாடிக்கையாளர்கள் தற்போது எவ்விதமான ஆவண நடைமுறைகளோ அல்லது கூடுதல் சரிபார்ப்பு வழிமுறைகளோ இன்றி, '‘People's Pay’ wallet app மூலமாக நேரடியாகவே தமது CRIB அறிக்கையை (MyReport) கோருவதற்கான பதிவு நடைமுறையை மேற்கொள்ளலாம். இதற்கான பதிவை மேற்கொண்ட பின்னர், இந்த app இல் ஒரு சில எளிய படிகளின் மூலமாக, மிக இலகுவாக 'MyReport' ஐப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பான, இலகுவாக உபயோகிக்கக்கூடிய தளமானது வாடிக்கையாளர்களின் தகவல் விபரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதேசமயம், தமது கடன் அறிக்கைகள் மற்றும் தரப்படுத்தல் புள்ளிகளை இலகுவாக அணுகுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.     

CRIB  'MyReport' சேவைக்கான பதிவு இலவசமாக வழங்கப்படுகின்றது. ('CRIB Score)' வழங்கும் தங்குதடையின்றிய வங்கிச்சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்கள் தமது மக்கள் வங்கிக் கணக்குகள் மூலமாக இச்சேவைக்காக இணையவழியில் கொடுப்பனவுகளை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.

வங்கித்துறையில் தொழில்நுட்பரீதியான மேம்பாடுகளைப் பொறுத்தவரையில் மக்கள் வங்கி தொடர்ந்தும் CRIB  வகித்து வருகின்றது. 'MyReport' உடன் CRIB  இன் 'CRIB Score)' கோரிக்கை விண்ணப்பத்தை ஒருங்கிணைத்துள்ளமை, இலங்கையில் முன்னிலை வகிக்கும் டிஜிட்டல் வங்கிச்சேவை வழங்குநராக மாறுவதை நோக்கிய வங்கியின் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனையாகும்.  

யாழ். பிரதேச ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும். 

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசாஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது.

ஊடகவியலாளர் வீட்டுக்கு இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பலம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் குழு மற்றும் புதிய கூட்டணியின் எம்.பி.க்கள் குழுவிற்கு இடையில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அண்மையில் மிக இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு வந்த எம்.பி.க்கள், தங்கள் மெய்ப்பாதுகாவலர்களை கூட கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொண்டனர்.

புதிய கூட்டணியில் எப்படி இணைவார்கள், அப்படியானால், அது எப்படி நடக்கும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

எதிர்வரும் 29ஆம் திகதி மொனராகலையில் நடைபெறவுள்ள பேரணியில் இவர்கள் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கையின் வேலைத்திட்டத்தின் 2 ஆவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னர் ஆணைக்குழு இறுதி முடிவை அறிவிக்கும்.

இதன்படி, 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக 2 ரூபாவினாலும், 31-60 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

61-90 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 18 ரூபாவாகவும், 91-120 அலகுகளுக்கு இடையில் மாதாந்தக் கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவாலும் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

டிசம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர்கள் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை விட நாட்டின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கொள்கை சீர்திருத்த உரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் மக்கள் திருப்தியடைந்தால், அந்த முறையை முன்னெடுத்துச் செல்லலாம், இல்லையெனில் சரிந்த பொருளாதாரம் கொண்ட நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக, மருந்துகளை விநியோகிக்க முடியாமல் மக்கள் வரிசையில் நிற்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கூறப்படும் முன் மற்றும் பின் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராய்வதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ என்.ஜே. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் அறிக்கை இவ்வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில்,அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செந்தில் தொண்டமான் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 9 நாட்களில் 879 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், அதிவேக வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 2647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் எண்ணிக்கை 5,624 ஆகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,930 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும் உள்ளனர்.