web log free
September 30, 2023
kumar

kumar

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும்  பரீட்சைக்கு தோற்றினர்.

ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகளை கொன்ற மூளைக்காய்ச்சல் பாக்டீரியா தொற்றுக்குள்ளான நோயாளி கொழும்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும் ரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரசபையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்கவிடம் கேட்ட போது அவர் கூறினார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் இருந்த சுமார் 30 நண்பர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். 

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகக் காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறன சொற்பாடுகள் இடம்பெறுவதை நாட்டின் சட்டம் அங்கீகரிக்கப் போகின்றதா என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

பௌத்தத்தின் பெயரால் நீதித்துறைக்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கு எதிராக செயற்படுவதையும் எந்த சட்டம் அங்கீகரிக்கின்றது.

ஆகவே நாட்டில் மீண்டும் இனவாத மதவாத வன்முறைகள் பலவந்தமாகத் தூண்டப்படுகின்றதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்தவர், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று உறுதியாக கூறினார்.

ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார்.டாக்டர் ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறினார்.

டாக்டர் ஜெஃப்ரி லாங் கூறுகையில், அவர் படித்த நோயாளிகள், மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவத்தின் தருணத்தில், ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்ததாகக் கூறினார்.

பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றது, அதன் முடிவில் சுரங்கப்பாதையில் ஒரு பிரகாசமான ஒளி இருந்தது.

நோயாளிகள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களின் உண்மையான வீடு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

பிரச்சினை இருப்பின் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

பிரச்சினை இருப்பின் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கொண்டு வரப்பட்ட உணவு பார்சலில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் பொதியை அனுப்பி வைத்த சந்தேக நபரின் மனைவியை கைது செய்ய சென்ற பின்வத்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோரின் கையை சந்தேக நபர் கடித்துள்ளார்.

பொலிஸ் காவலில் உள்ள போதைப்பொருள் சந்தேக நபரின் நண்பருக்கு மனைவி இந்த உணவுப் பொதியை அனுப்பி வைத்துள்ளார். உணவு பார்சல் மீது சந்தேகம் அடைந்த பொலீசார், அதை ஆய்வு செய்த போது, பெரிய மீன் துண்டில் ஐஸ் போதைப்பொருள்  மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேகநபர் சந்தேக நபரை கைது செய்வதற்காக வீட்டுக்குச் சென்ற போது, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளை கடித்துவிட்டு ஓட முற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபரிடம் மேலும் ஐந்து ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.ட

அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் பயனாளிகளில் 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த 'அஸ்வெசும' தொடர்பான தகவல்களை அறிய வேண்டுமாயின் 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழைக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரண்டு வகையான வருகை மற்றும் வதிவிட விசாக்களின் கீழ் வழங்கப்பட்ட விசா வகைகளின் தற்போதைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள வீசா முறைமைகளை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் வீசா முறைமையை மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கில், அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம், முட்டைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள 03 நிறுவனங்களிடமிருந்து விலைமனுக் கோரல் விடுக்கப்பட்டுள்ளது.