web log free
April 13, 2026
kumar

kumar

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இன்று (10) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ராஜகருணா, தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது என்றும், உலகளாவிய நிலைமைகள் சீராகும் வரை நாட்டுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.

"இது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல; இது மிகவும் மோசமான நிலை" என்று அவர் கூறினார், பயணத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை வாங்குவதன் மூலமும், குறைந்த அளவிலான எரிபொருள் பயன்பாட்டை பேணுவதன் மூலமும் நெருக்கடியை நிர்வகிக்க கூட்டாக உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் பீதியால் மக்கள் அதிகரித்த கொள்னவு எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கொள்வனவாலும், எரிபொருளை பதுக்கி வைத்தல் காரணமாக , குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே தீர்ந்துவிட்டதாகவும் , இதன் விளைவாக, எரிபொருள் விலை திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கொள்முதல் நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் இந்த மாத இறுதி வரை முன்னைய எரிபொருள் விலையை அதிகாரிகள் பராமரிக்க முடிந்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கான கொடுப்பனவுகள், இறக்கும் நேரத்தில் நிலவும் ஐந்து நாள் சராசரி உலக சந்தை விலையின் அடிப்படையில் செய்யப்படுவதால், புதிதாக வழங்கப்படும் எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே நாட்டின் எரிபொருள் சேமிப்பு வசதிகள் குறைவாக இருப்பதாலும், அதிக அளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுவதாலும் , தற்போதைய நெருக்கடி நிலை தீரும் வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே எரிபொருளைப் பயன்படுத்துமாறும் , தேவையற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வீதி விபத்துகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட சுமார் 50% அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து பிரிவு பிரதிபொலிஸ் மாஅதிபர் பி.ஜே சேனாதீர இந்த தகவலை வெளியிட்டார்.

இதனால் முக்கிய வீதிகளில் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வீதி விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

உலகளவில் கவனம் பெற்ற வெளிவிவகார அமைச்சர்களை உருவாக்கிய நாட்டில், இன்றைய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை சர்வதேச அரங்கில் நகைச்சுவையாக மாற்றி வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றம் சாட்டினார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற உலகளவில் மதிப்பைப் பெற்ற தலைவர்கள் இருந்த நாட்டில், தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொருவருக்கும் செய்யக்கூடியதும் செய்ய முடியாததும் இருக்கின்றன. தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதை தானே பாராளுமன்றத்தில் வெளிப்படையாக கூறியதாகவும், ஆனால் தமிழில் பேசும் திறன் தன்னிடம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தகுதி இல்லாத சிலர் ஆட்சிக்கு வந்து தமக்கால் முடியாதவற்றையும் செய்ய முடியும் என்று நினைத்து உலக அரங்கில் நாட்டையே அவமானப்படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இது இரண்டாவது முறை எனவும், இதற்கு முன்பு “மாத்தறை பிக் குச்சன்” என அழைக்கப்படும் ஒருவர் இதேபோல் நாட்டை அவமானப்படுத்தியதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் அரசில் உள்ள அனைவரும் “பிக் குச்சன்” ஆக மாறக்கூடும் என்றும் அவர் விமர்சித்தார்.

இந்தக் கருத்துகளை அவர் Sri Lanka Freedom Party ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.

 

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஓட்டோ டீசல் 22 ரூபாபவால் அதிகரித்து 303 ரூபாவாகவும்

சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 353 ரூபாவாகவும்

பெற்றோல் ஒக்டேன் 92, 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 317 ரூபாவாகவும்

பெற்றோல் ஒக்டேன் 95, 25 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 365 ரூபாவாகவும்

மண்ணெண்ணெய் 13 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 195 ரூபாவாகவும் விற்கப்படும்.

ஈஸ்டர் தாக்குதல் ஏதேனும் சதித் திட்டத்தின் விளைவாக நடந்ததா என்பதை ஆராய்வதற்காக இரண்டாவது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை சுமார் ஒரு ஆண்டுக்காலம் நடத்தப்பட்டு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவ புலனாய்வு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் படி, முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்திருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஆனந்த விஜேபால மேலும் வெளிப்படுத்தினார்.

அதேவேளை, சுரேஷ் சலே தற்போது ஒரு சந்தேக நபராக மட்டுமே கருதப்படுகிறார் என்றும் அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை எதிர்காலத்தில் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு, தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும் பாதுகாக்கப்படும் வகையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இந்நேரத்தில் தீர்மானங்களை எடுத்து வருவதாக பாதுகாப்பு துணை அமைச்சர் அனுர ஜெயசேகர தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளை சரியான முறையில் நிர்வகிக்க அரசாங்கம் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் யாரும் பதற்றமடைய தேவையில்லை என்றும் துணை அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், நிலவும் புவியியல்-அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர்நிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்படவோ அல்லது விலைகள் பெரிதாக உயர்வதற்கோ காரணம் எதுவும் இல்லை என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

எனினும் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் காப்பீட்டு கட்டணங்களில் ஏற்பட்டுள்ள சிறிய உயர்வு மற்றும் ஆர்டர்களில் ஏற்பட்டுள்ள குறுகிய தாமதங்கள் காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சுமார் 5% முதல் 10% வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் பண்டிகை காலத்திற்காக பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பொருட்களின் பெரும்பாலானவை இந்தியா வழியாக வருவதால் உணவுப் பொருட்களின் கிடைப்பில் அல்லது விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் அல்லது விலைகள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார சபை (CEB) நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் 25% ஊதிய உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய இணை நிறுவனங்கள் நிறுவப்பட்டு பணியாளர்கள் அவற்றுக்கு இணைக்கப்படும் செயல்முறையுடன் இணைந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்துக்குள் நீண்ட காலமாக இருந்து வந்த ஊதிய வேறுபாடுகளை நீக்குவது மற்றும் பணியாளர் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை பரிசீலிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த ஊதிய உயர்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் அமலுக்கு வரும் வகையில், நிலுவைத் தொகையுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் தெரிவிப்பதன்படி, இந்த தீர்மானத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் இடையில் நல்லிணக்கமான உடன்பாடு உருவாகியுள்ளது. அதேசமயம் நிறுவன மாற்றக் காலத்தில் பணியாளர்களிடையே இருந்த அனிச்சையையும் குறைக்க இது உதவியுள்ளது.

மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் முறைமை இயக்கம் ஆகியவற்றுக்கு பொறுப்பான புதிய நிறுவனங்களுக்கு லங்கா மின்சார சபையின் செயல்பாடுகள் ஒப்படைக்கப்படும் போது, பணியாளர் படையின் நிலைத்தன்மையை பேண இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு இலங்கைக்கு போதைப் பொருட்கள் காரில் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் காரிகூட்டம் பேருந்து நிலையம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரிலிருந்த 219 கிலோ கஞ்சா, 19 கிலோ மெத்தபெட்டமைன், 10 கிலோ ஹெரோயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரிலிருந்த மண்டபத்தைச் சேர்ந்த இபுராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் சாலை மார்க்கமாக மண்டபம் கொண்டு வந்து, கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

வழக்கில் தொடர்புடைய மண்டபத்தைச் சேர்ந்த சேக் ரகுமான் (25) என்பவரை போலீசார் தேடி வருகிறனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இனிப்புச் சுவைக்குப் பதிலாக மாற்று உணவுகளைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சீனி வரி (Sugar Tax) மீண்டும் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் துணை பணிப்பாளர் நாயகம் (பல் சேவைகள்) சிறப்பு வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க வருடத்திற்கு சுமார் 10 கிலோ கிராம் சர்க்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால் இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு சுமார் 34 கிலோ கிராம் சர்க்கரை பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் 5வது தேசிய வாய்ச் சுகாதார ஆய்வு தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பு வைத்தியர் சந்தன கஜநாயக்க இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd