web log free
July 27, 2024
kumar

kumar

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (09) பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியினால் தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000-க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வர பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, இந்திய பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பை அடிப்படையாகக் கொண்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழமையான வான்வழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸ் ஆணையாளர் சஞ்சய் அரோரா அறிவித்துள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்படுமாயின், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதற்கேற்ப இரண்டு வருடங்கள் நீடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நிபந்தனை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவ்வாறான உடன்படிக்கையை மேற்கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கை தூக்குவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை தொடக்கத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் அதிக அளவில் உள்ளதால் அவர்களின் ஓய்வூதியத்தை இழப்பதை தவிர்க்க அவர்களின் பதவிக்காலத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

அதன்படி, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே பொருத்தமானது என்பது ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும்பான்மையினரின் கருத்தாகவும், இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திரப்படுத்தி தேசியத் தேர்தலுக்கு செல்வதே விரும்பத்தக்கது என்பதே அவர்களின் வாதமாகும்.

1982 இல், ஜே.ஆர். பாராளுமன்ற நேரத்தை நீடிக்கும்போது ஜனாதிபதி நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு முறையில் அதனை செய்ய முடியுமா என்றும் தடைகள் ஏதும் ஏற்படுமா என சட்ட நிபுணர்களிடம் அரசாங்க உயர்பீடத்தினர் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மாற்று வழிகள் என்ன என்று சட்ட நிபுணர்களிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தேர்தல் வழிநடத்தல் குழுவிலும் பத்தரமுல்லை "வாட்டர்ஸ் எட்ஜ்" ஹோட்டலிலும் இவ்விடயம் தொடர்பில் இரண்டு விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஆனால், பொது வாக்கெடுப்பு நடத்த இரண்டு வாய்ப்புகள் உள்ளன என்பது சட்ட வல்லுநர்களின் வாதம், அதில் முதலாவது நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி வாக்கெடுப்பு நடத்தலாம் என்பதும், இரண்டாவது உச்சநீதிமன்றம் ஒரு மசோதாவின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொண்டு, பிறகு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம்.

மேலும், நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட முப்பது முஸ்லிம் மற்றும் தமிழ் எம்.பி.க்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வாக்கெடுப்பு தொடர்பான தங்கள் கருத்தை சரியாக விளக்காததால், அவர்கள் வாக்கெடுப்புக்கு ஒப்புதல் பெறுவார்களா அல்லது இழப்பார்களா என்ற நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டமையும், பல சந்தர்ப்பங்களில் அந்தக் கட்சிகளின் பிரசன்னம் தவறியமையும் இதற்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்கு சட்டம் கொண்டு வரப்பட்டால், அது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மற்றும் பதவிக் காலத்தை நீடிக்க கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து. ஜனாதிபதி, அரசாங்கம் அரசியலமைப்பிற்கு எதிரான சட்டத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பொது வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என தேசிய மக்கள் படை அறிவிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு ஆறு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு ஆறு மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் தண்ணீர் கேட்டாலும் மதுபானமே வழங்குவதாக கிராம பிக்குகள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிடுகையில், இது மிகவும் பழைமையான கிராமம் எனவும், அது பற்றி பேசுவதற்கு கூட வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அக்கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழு நேற்று (06) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பத்தரமுல்லையில் கூடியது.

அதாவது எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 31 உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இது தவிர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை இன்று (07) காலை கூடவுள்ளது.

கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கட்சியின் புதிய முக்கிய பதவிகள் உருவாக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 44மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டது. அரசு மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த 62 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

விவாத முடிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான அலி சப்ரி ரஹீம்,,ஜோன் செனவிரத்ன அநுர பிரியதர்சன யாப்பா,பிரியங்கர ஜயரத்ன நிமல் லான்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான பௌசி ஆகியோர் வாக்களித்தனர்

இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்,தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் சகோதரர் மனோகரன் என்பவர், ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் 1975ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சகோதரர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கடந்த 2009ஆம் ஆண்டு மரணமடைந்து விட்டதாக பொதுத் தளத்தில் முதல் முறையாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபாகரனின் உறவினர்கள் சிலர் குறிப்பாக, அவரது மகள் உயிரோடு இருக்கிறார் என்பது பொய்யான தகவல் என தமிழகத்தைச் சேர்ந்த சிலரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கையில் பிரபல செய்தி தளத்திற்கு  வேலுப்பிள்ளை மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் "2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை போரில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என அனைவரும் மரணமடைந்து விட்டனர். அவர் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். அவரது மூத்த சகோதரன் என்ற முறையில் அத்தகைய பொய்யான தகவல்களுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மேலும், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாகக் கூறி இலங்கையில் புலம்பெயர் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெரும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக இலங்கையில் செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, "எனது சகோதரர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்து தியாகத்தை அடைந்துள்ளனர். இதனை உண்மை என ஏற்றுக் கொள்வது முக்கியமானதாகும். மேலும், எனது சகோதரர் மற்றும் அவரது குடும்பம் உயிருடன் இருப்பதாகக் கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக, இளம்பெண் ஒருவர் தன்னை பிரபாகரனின் மகள் என பொய்யாகக் கூறி வருகிறார். மேலும், இதனை சுட்டிக்காட்டி இலங்கையில் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது” என மனோகரன் கூறியதாக இலங்கையின் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி மாறும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இரகசிய கலந்துரையாடல்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தயாராகி வருவதுடன், விசேட கலந்துரையாடலொன்று நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதற்கு சப்ரகமுவ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் மிகவும் சூடு பிடிக்கும் என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புக்கள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம் இந்த நாட்டில் 15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 பேரின் நிதி, ஏனைய நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு அல்லது TRO, தேசிய தவ்தீஹ் ஜமாத் அல்லது NTJ, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அல்லது ஜேஎம்ஐ போன்ற 15 பேரின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 113 பேரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதிலும் உள்ள இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.