web log free
July 27, 2024
kumar

kumar

Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது. தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் 16 நிபுணர்கள் தயாரித்த அறிக்கை கொழும்பு மாநகரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அன்றாட பாவனைக்காக பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப் பொருட்களை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு நகரில் ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் அதேவேளையில் நாளாந்தம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியூர்களில் இருந்து கொழும்புக்கு வருவதாகவும் இந்த மக்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் எந்தவொரு உணவுப் பொருளும் கொழும்பை அடையும் தூரம் ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

இந்த ஆய்வின்படி, கொழும்பு மாவட்டத்தில் உணவு வீணாக்கப்படுவது தேசிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சுயேட்சை உறுப்பினர்களின் குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இதுவரை உருவாகியுள்ள மிகப்பெரிய கூட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் குமார வெல்கம ஆகியோரும் இந்த கூட்டணி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் இது போன்ற இன்னும் பல குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எம்.பி. கூறினார்.

ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் நிமல் லான்சா மேலும் தெரிவித்தார்.

வெலிவேரிய நகரிலிருந்து குறுக்கு வீதியில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காரில் பயணித்த 24 வயதுடைய நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வலது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலவேரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

புதிய கூட்டணியின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு மஹகம சேகர மாவத்தையிலுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றது.

நிமல் சிறிபால, ஜோன் சேனவிரத்ன, அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த், நிமல் லான்சா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவன்ன, பியங்கர ஜயரத்ன, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"இப்போது மொட்டு கட்சியினர் மிகவும் பயந்துவிட்டனர். அதனால் தான் இதை நிறுத்துமாறு ஜனாதிபதி பசிலிடம் கூறுகிறார்" என பிரியங்கர கூறினார்.

அதற்கு நாம் சளைத்திருக்கக் கூடாது என அனுர யாப்பா தெரிவித்துள்ளார்.

லான்சா களத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்று பசிலுக்கு தெரியும், அதற்குத்தான் பயந்து இருக்கிறது” என்று லான்சாவைப் பார்த்து பிரியங்கர கூறினார்.

இதேவேளை, தற்போதைய மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி வார்த்தைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

“இப்போது மொட்டு கட்சியினர் வாய்சவடால் விடுகின்றனர். ஆரம்பத்தில் இருந்த நிலை இந்த பிசாசுகளுக்கு நினைவில் இல்லை” என்றான் ஜோன்.

ஆம், வெளியில், வீதியில் இறங்கவோ கூட முடியாமல் இவர்கள் இருந்தார்கள் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

“ஜனாதிபதி தலையிட்டு இந்த நாட்டை அமைதிப்படுத்தினார். நாம் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கினார். அதை நினைத்துக்கூட பார்க்காமல் ஜனாதிபதியை தாக்குகிறார்கள்” என்று கூட்டத்தை பார்த்து லன்சா கூறினார்.

இதற்கிடையில் அமைச்சர் அமரவீர வந்திருந்த மக்களுக்கு இரவு உணவை தயார் செய்திருந்தார்.

“அமரே வீட்டில் ஆப்பம் பிழைக்காது அதனால் சாப்பிட பயமா இருக்கு” ​​என்று சிரித்துக் கொண்டே சுசில் கூறினார். அந்த விருந்து அமைச்சர் அமரவீரவின் மனைவி தான் தயாரித்தது என்றும் குழுவினர் பேசினர். அரசியல் கதைகள் தவிர, சுவாரசியமான கதைகளுக்கு இங்கு பஞ்சமிருக்கல்லை.

இந்த வருடத்தின் (2023) முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 7,386 மில்லியன் ரூபா மொத்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2022 செப்டெம்பர் மாதம் முதல் தண்ணீருக்கான புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்டதன் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் சபையின் வருமானம் 16,597 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் சபை 483 மில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.

அந்த நட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் நீர் வழங்கல் சபை 2,778 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.

தண்ணீர் கட்டண உயர்வு காரணமாக இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தண்ணீர் விற்பனை 196 மில்லியன் கன மீட்டர் குறைந்துள்ளது.

2022-ம் ஆண்டு இந்த காலகட்டத்தில் தண்ணீர் விற்பனை 210 மில்லியன் கனமீட்டராக இருந்தது.

இளம் பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு அவரது நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய துறவி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது யுவதியின் நிர்வாண படங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் களுத்துறை பயாகல மலேகொட விகாரை ஒன்றில் வசிக்கும் 26 வயதான  தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அவருக்கு 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சிறுமி இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்து, சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த பிக்கு அடையாளம் காணப்பட்டதாகவும், தன்னை துறவி போன்று பாவனை செய்து அணுகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகம எரியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 04) அதிகாலை குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வேனுடன் பின்னோக்கி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனுக்குள் இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும், 36, 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 55 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 06 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 8 வயது சிறுமியும் அடங்குகின்றனர்.

வேன் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். அதிவேகமாக வாகனம் செலுத்திய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லொறியின் சாரதி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகுமென, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாணசபை முறைமையுடன் ஒற்றையாட்சியும், ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும். ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக சர்வக்கட்சி மாநாடு இடம்பெற்றது. இதில் ஜனாதிபதியோ தனது தனிப்பட்ட யோசனையை எம்மூடாக நிறைவேற்றிக் கொள்ள முயன்றார்.

ஆனால், அங்கு கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறுதான் வலியுறுத்தினர். இதனால், அவருக்கு தனது திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, இறுதியில் வழங்கப்படவுள்ள அதிகாரங்களைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.