web log free
May 09, 2025
kumar

kumar

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5ம் திகதி காலை 10.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் நடக்கிறது. அதற்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்த மாதமும் திருத்தப்படாது என எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் உலக எரிவாயு சந்தையின் விலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தினால், மார்ச் மாதத்தில் அது மாற்றியமைக்கப்படவில்லை எனவும், அதன் காரணமாக 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,250 ரூபாவில் தற்போதும் கிடைக்கப்பெறுவதாகவும் நிறுவனம் மேலும் குறிப்பிடுகிறது. 3 கிலோ சிலிண்டர் 1,707 ரூபாயும், 2 கிலோ சிலிண்டர் 795 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள எரிபொருள் விலையை மாற்றியமைக்காமல் மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் நேற்று (29) நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக சமகி ஜன பலவேகய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

சுயேச்சையாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியின் உறுப்பினர்களும் எதிராக வாக்களிப்பார்கள் என குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த வாரம் பாராளுமன்ற பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் பிரேரணை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (29) வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, முடிந்தவரை உடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் செயல்படுமாறு திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது.

இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை வரை அதிக வெப்பநிலை நிலவும் போது பாடசாலை மாணவர்களை வெளியில் தங்க வைப்பதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும், தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அச்சமின்றி எதிர்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிலைப்பாடு குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைவதாகத் தெரிவித்த சபாநாயகர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேர்மையாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து ஏமாற்றம் அடைந்தாலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

சமகி ஜனபலவேகவினால் தமக்கு எதிராக இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன கனடாவில் வசிக்கச் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன் அது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக எஸ்.இ. முத்துக்குமாரா பதவியேற்க உள்ளார். 

பாதாள உலகக் குழு தலைவர் வெல்லே சாரங்கவின் மைத்துனரான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, பொலீஸ் அதிரடி படையுடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

சூரியவெவ பிரதேசத்தில் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த பாதாள உலக குற்றவாளிக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் அந்த வெற்றிடத்திற்கு முத்துக்குமாரனை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்ட பொதுஜன பெரமுனவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர் முத்துக்குமாரன அடுத்தபடியாக விருப்பு வாக்கு பெற்றுள்ளார். 

உத்திக தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளார்.

உத்திக பிரேமரத்ன கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பட்டியலில் போட்டியிட்டு தேசிய சுதந்திர முன்னணியின் ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை கோள் மண்டலத்தை இன்று முதல் சில நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (27ம் திகதி) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோள் மண்டலம் மூடப்படும்.

அன்றைய தினங்களில் பொதுக் கண்காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோள் மண்டலத்தின் புரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக  இதனை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd