இன்று (11) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளராக இருந்த அசங்க ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.
அதன்படி இன்று முதல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்டத்தின் கட்டுகம்பல தொகுதி அமைப்பாளராக கடமையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு தனது நிறுவன பலத்தை வழங்குவதே அசங்க பெரேராவின் நோக்கமாகும்.
இது குறித்து அறிவிப்பதற்காக குருநாகல் கடுகம்பல பிரதேசத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.
534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.
ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது.
எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து 11 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று (11.02.2024) காலை 10.30 மணியளவில் இருந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகள், மீனவர்கள் என ஆயிரக்கணக்கானோர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமான wionற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கேள்வி – எனது முதல் கேள்வி இந்திய இலங்கை உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் இந்த உறவுகள் குறித்த உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன ?
பதில் - உண்மையில் இந்திய இலங்கை உறவுகள் முன்னேற்றமடைகின்றன. நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றோம், இரு நாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க முயல்கின்றோம். இதுவே சரியான வழி என நான் கருதுகின்றேன்.
கேள்வி- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை 4 பில்லியன் டொலர் உதவியுடன் முன்வந்த நாடு இலங்கை உங்கள் நாட்டிற்கான இந்தியாவின் உதவியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்-நாங்கள் இந்தியாவிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பிபிழைத்திருக்கமாட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக வர்த்தக பொருளாதார வெற்றிகள் குறித்து முன்னோக்கி செல்வதற்கு இதுவே வழி.
கேள்வி- உங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது?
பதில்- நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்தோம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் ஓசிசியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளவேண்டும். எங்களின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆரம்ப கட்ட நடவடிக்கைள் தற்போது இடம்பெறுகின்றன உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான உடன்படிக்கைக்கு பின்னர் நாங்கள் ஏனைய அனைத்து கடன்வழங்கிய நாடுகளுடனும் நிதியமைப்புகளுடனும் உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும்.
கேள்வி – அது எப்போது சாத்தியமாகும்?
பதில்- ஜூன் மாதமளவில் அது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.
கேள்வி – பிராந்திய பாதுகாப்பு என்ற விடயம் குறித்து பேசும்போது சீன கப்பல்களின் விஜயம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சீன கப்பல்களிற்கு அனுமதி வழங்குவது இல்லை என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன். சீன கப்பல்களின் விஜயங்கள் குறித்தும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் குறித்தும் கருத்துகூற முடியுமா?
பதில்- நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளளோம்.
இலங்கைக்கு வந்த சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்.
ஏனைய நாடுகளின் ஏனைய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்ப .வேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இதன்காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வர முடியாது என நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம்.
கேள்வி – உங்களிற்கு சீனா கப்பல்களின் வருகை குறித்து தெரியவருமா?
பதில் - சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இந்திய கப்பல்கள் வருகின்றன, ஜப்பான் கப்பல்கள் வருகின்றன அனைத்து கப்பல்களும் வருகின்றன – அமெரிக்க கப்பல்கள் வருகின்றன.
கேள்வி- இந்தியா இந்த விஜயங்கள் குறித்து கவலையடைந்துள்ளது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து கவலையடைந்துள்ளது என்பதால் சீனா இந்தியாவிற்கும் உங்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றது என கருதுகின்றீர்களா?
பதில் - சீனகப்பல்கள் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகின்றன. சீனா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் கரிசனை கொள்ளவேண்டிய விடயம் என்று எதுவுமில்லை, இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை, குறையவுமில்லை, மேலும் இலங்கைக்கு வருகை தராத நாடுகளின் கப்பல்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.
கேள்வி – கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் பங்களிப்பு – சீனா உரிய பதில்கள் இல்லாமல் இழுத்துச்செல்கின்றதே?
பதில் - கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவிடம் நோக்கம் உள்ளது. அவர்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இதற்கான அவர்களின் கட்டமைப்பு ஏனைய நாடுகளிடமிருந்து வித்தியாசமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படவேண்டும். அந்த நாட்டின் எக்சிம் வங்கியுடனும் இணைந்து செயற்படவேண்டும்.
கேள்வி – மற்றுமொரு முக்கியமான விடயம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது. இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது – முன்னோக்கி செல்வதற்கான வழி என்ன?
பதில் - அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.
அதன் காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும். இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டித்தன்மை மிகுந்ததாக காணப்படும்.
மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.
இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.
சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என்று கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவின் 50% உடன் முழு கூட்டு கொடுப்பனவையும் வழங்குவதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த வார தொடக்கத்தில் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கூட்டு கொடுப்பனவின் எஞ்சிய பகுதியும் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாம் ஒரு நாட்டிற்குச் சென்று ஒரு நாட்டின் அரச தலைவர்களைச் சந்திப்பது எமது அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கையை மாற்றுவதற்குக் காரணமல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவுக்கு வரும் முதல் அரசியல் குழு நாங்கள் அல்ல.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்துள்ளதோடு, எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும் உலக நாடுகளும், இந்தியத் தலைவர்களும் அறிவர் எனவும், தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை பொருட்படுத்தாது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நாட்டின் முக்கிய அரசியல் திருப்புமுனையாக மாறும்.
இந்திய அரசாங்கத்துடனான உடன்படிக்கையில், அரசாங்கங்களுக்கிடையில் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும், நாங்கள் ஒரு அரசியல் இயக்கம் என்பதால், நாங்கள் புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டுள்ளோம் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுரகுமார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்று (10) பிற்பகல் 03.10 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானமான யுகே-131 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு முடியும் வரை அரசாங்க நிதிக்குழு மற்றும் வழிவகைகள் குழுவிற்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நியமிக்க கூடாது என எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
அதற்குப் பதிலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வழிவகைகள் குழுவின் தலைவராக கடமையாற்றினார்.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிதி மற்றும் வழிமுறைகள் குழுவிற்கு எதிர்க்கட்சிகளால் பெயர் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
புதிய அமர்வு ஆரம்பமானதும் மேற்படி குழுக்கள் உட்பட பல குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் நேற்று சபாநாயகரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பயணித்த காரை தங்காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று துரத்திச் சென்ற போது, சந்தேக நபர் காரை தும்மலசூரிய புறநகர் பகுதியிலுள்ள துந்தோட்ட பாலத்திற்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போது தங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்ய முற்பட்ட போது காரில் இருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையில் காரை துந்தோட்டைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே தும்மலசூரிய பொலிஸாரின் ஆதரவுடன் தங்காலை பொலிஸ் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமாக அனுர பிரியதர்ஷன யாப்பாவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த நியமனம் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும், பின்னர் புதிய கூட்டணியின் ஒற்றுமையுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.
நிமல் லான்சா மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய பெரமுன அமைக்கப்படவுள்ளதுடன், அதன் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பின் பல சரத்துக்கள் திருத்தப்பட உள்ளன.
கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து, கொழும்பு மக்கள் 15 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.
கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8 மணியுடன் முடிவடையும் என NWSDB தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நீர் வெட்டு அவசியமானது என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு NWSDB அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை NWS&DB கேட்டுக் கொண்டுள்ளது.
கட்சியின் தலைமையை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டு முடிவுகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சமகி ஜன பலவேக தீர்மானித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.
இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.