web log free
April 25, 2024
kumar

kumar

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75 பாகை அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும். (40-45) வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பலாங்கொடை, சமனல வத்த பகுதியில் 5 நாட்களுக்குள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி சமனல வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் ஒருவர் கடந்த 3ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர்கள் இருவரும் காணாமல் போன விதம் மர்மமாக இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர் துஷார சம்பத் என்ற திருமணமானவர் எனவும், கடந்த 8ஆம் திகதி காலை தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய தேனீர் குடித்துவிட்டு இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மதியம் 11 மணி ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது மனைவி தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​காணாமல் போனவர் அணிந்திருந்த இரண்டு செருப்புகளில் ஒன்று, தேயிலை கொழுந்து பறிக்கப் பயன்படுத்திய மூட்டையும் அங்கு காணப்பட்டன.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நேற்று (09) குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், காணாமல் போனவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

சமனல வத்த பகுதியைச் சேர்ந்த (45) வயதுடைய ஒருவரும் கடந்த (03) முதல் காணாமல் போயுள்ளதுடன், இன்றுடன் (11) ஒன்பது நாட்களாகின்றன.

அவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சஹான் குமார தர்மசிறி என்ற பாடசாலைச் சிறுவனும் (09) காணாமல் போயிருந்த நிலையில், அவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வண்ணத்துப்பூச்சி தோட்டம் பகுதியில் சிறுத்தைப்புலிகள் அடிக்கடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், குதிரைகள் மற்றும் சிறிய பசுக்கள் அடிக்கடி காணாமல் போவதாக பிரதேசவாசிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் நோக்கில் நேற்று (10) பகல் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் களுத்துறை தனியார் கல்வி வகுப்பு ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான இவர் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் திருமணமானவர், மேலும் அவருக்கு எதிராக அவரது மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் வெளிவரும் என்றும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக மறு அறிவித்தல் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று(11) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் மேல், தென் கரையோர பகுதிகள் மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக ஆர்வலரான பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தயார்படுத்தப்படாமையால் வடக்கு அபிவிருத்தி தொடர்பான விடயத்தையும் ஒத்திவைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் மற்றும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேற்றுமுன்தினம் சம்பந்தனின் வீட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சைத் தொடங்கியது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கருத்தியலுக்கு அமைவாகவே தமது பேச்சுக்கள் இருக்கும் என்பதை எடுத்துரைத்தனர். நாளை, நாளைமறுதினம், அதற்கு மறுநாள் என்று 3 நாள் பேச்சுக்களில் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தமை தொடர்பில் ஆட்சேபம் எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், முதலில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேசிவிட்டு பின்னர் கிழக்கு மாகாணத்துடன் அதேபோன்றதொரு தனியான சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு – கிழக்கு என்று பிரித்துப் பேச முடியாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதனை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கு அமைவாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நாளை 11 ஆம் திகதி பொதுப்பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்பிலும், மறுநாள் 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பேச இணக்கம் காணப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் திட்டவரைவு தயாரில்லாததால் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் 13ஆம் திகதி பேசுவதில்லை என்றும், கிழக்கு அபிவிருத்தி தொடர்பான திட்டவரைவு தயாராகிய பின்னர் இரு மாகாணங்களையும் இணைத்துப் பேசுவது என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நேற்று மாலை ஜனாதிபதியுடன் முதலில் சந்திப்பு நடந்தது. வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்பேசும் மக்கள். எந்த விடயம் என்றாலும் வடக்கு – கிழக்கைப் பிரித்து உங்களின் செயற்றிட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தீர்வு முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளவேண்டும். வடக்கு – கிழக்கைப் பிரித்து பேச்சு நடத்த விரும்பினால் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் பங்கேற்கமாட்டோம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.

எமது கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். வடக்கு – கிழக்கை இணைத்துத்தான் அனைத்துப் பேச்சுக்களையும் முன்னெடுப்போம் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சு முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரகத்துக்கு நான், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சென்றோம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.

வடக்கு – கிழக்கைப் பிரித்து அரசு மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கோம் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியுள்ளோம் என்பதை இந்தியத் தூதுவருக்கு விசேடமாக சுட்டிக்காட்டினோம்.

இந்தியா எமது அயல்நாடு. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வு விடயம் தொடர்பிலும் அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நாடு.

எனவே, இந்தியாவின் ஆலோசனைகளை நாங்கள் பெறுவோம். எமது பிரச்சினைகளையும் இந்தியாவுக்கு எடுத்துரைப்போம். அந்தவகையில்தான் இந்தியத் தூதுவரைச் சந்தித்தோம்." - என்றார்.

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகள் முன்பாக விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் வேனில் வந்த சிலர் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு உணவு வகைகளை வழங்கி அவர்களை கடத்திச் செல்ல முற்பட்ட போது இரு பிள்ளைகள் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து அலறியடித்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி, மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாகவும், வீதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களை வீதியில் தனியாக நடமாட வேண்டாம், குழுவாக நடமாடுமாறு அறிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்து பாடசாலைக்கு வரும்போது, ​​குழுவோடு வரவோ அல்லது வீட்டில் பெரியவர்களுடன் வரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்டவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் காரசாரமான விவாதம் காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவது சட்டவிரோதமானது என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உரிய விவாதம் நடத்தப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.

எனினும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு - பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.