web log free
July 04, 2025
kumar

kumar

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் சந்தேகத்திற்குரிய இடங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சாமரி பிரியங்கா முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மரணம் தொடர்பில் பல குறிப்பிட்ட உண்மைகளை முன்வைத்து சுமார் ஐந்து பக்கங்கள் கொண்ட விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா நேற்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப், கன்டெய்னர் ட்ரக் வண்டியுடன் ஜனவரி (25) மோதியதில் இராஜாங்க அமைச்சரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையை கேட்பதில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என அவர் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது அவர்களை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொதுவான நடைமுறையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையும் தமது கட்சி கடுமையாக விமர்சிக்கும் வேளையில், ஜனாதிபதி இருக்கும் மேடையில் கயந்த கருணாதிலக்க ஏறுவது பாதகமானது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றம் சுமத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் எப்போதும் கருத்து வெளியிடும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அழைப்பாக இருந்தாலும் இந்நேரத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்த சீனியர்கள் குழுவினர் கேட்டுக் கொண்டதை அவர்கள் அறிந்திருக்கலாம்.

தம்புள்ளையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கயந்த கருணாதிலக்கவும் இணைந்து கொண்டதாக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. 

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இந்த செய்தி தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில் இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்துள்ளார்.

ஜேவிபி தலைவர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு இடையே இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை இலங்கையின் NPP மற்றும் JVP தலைவர் அனுர திஸாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம்.

மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினார்.

இந்தியா, அதன் அயல் மற்றும் பிராந்திய கொள்கைகளுடன் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்று கூறுகிறார். 

 

மக்கள் வங்கி தனது யூ டியூப் தளமானது 50,000 சந்தாதாரர்கள் என்ற சாதனை இலக்கினை எட்டியுள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவித்துள்ளதுடன், நாட்டில் எந்தவொரு நிதி நிறுவனமும் கொண்டுள்ள அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை இலக்கினை இலங்கையில் எட்டியுள்ள முதலாவது நிதி நிறுவனம் என்ற வகையில், டிஜிட்டல் வழியிலான ஈடுபாட்டைப் பேணுவதில் தான் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் மக்கள் வங்கி இதன் மூலமாக நிரூபித்துள்ளது.

வங்கித்துறையில் எதிலும் முன்னோடியாகத் திகழ்வதில் பெயர்பெற்றுள்ள மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) அடங்கலாக டிஜிட்டல் தளங்களை தொடர்ச்சியாக உள்வாங்கி வந்துள்ளது.

திறன்மிக்க தொடர்பாடல் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுவதில் பல்வகைப்பட்ட சமூக ஊடக தளங்களை உபயோகப்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பை யூ டியூப் தளத்தில் அதன் சாதனை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 

மக்கள் வங்கியின் யூ டியூப் தளமானது பல்வேறுபட்ட தகவல் விபரங்களைக் கொண்டுள்ள ஒரு மையமாக மாறியுள்ளதுடன், நிதியியல் தொடர்பான அறிவு மற்றும் வங்கியின் செயல்பாடுகள் தொடர்பில் பெறுமதிக்க ஆழமான விடயங்களை வழங்குகின்றது.

சமூக ஊடக தளங்களை உபயோகிக்கும் வங்கியின் மூலோபாயமானது வாடிக்கையாளர்களுடனான இடைத்தொடர்பு மற்றும் தொடர்பாடல் ஆகியன மாற்றம் கண்டு வருகின்ற போக்கினை அனுமானித்து, அவற்றை முற்கூட்டியே உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையை பிரதிபலிக்கின்றது.   

மாநகர பொறியியல் திணைக்களத்தினால் நிலத்தடி குழாய்கள் அமைக்கும் பணியின் காரணமாக இன்று (05) முதல் மார்ச் (11) வரை பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள நவம் மாவத்தை மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுகள் நாளை முதல் மூடப்படவுள்ளன.

உத்தரானந்த மாவத்தையின் நவம் மாவத்தையிலிருந்து புகையிரத கடவை வரையிலான பகுதி இன்று (05) முதல் எதிர்வரும் (19) வரை மூடப்படவுள்ளது.

உத்தரானந்த மாவத்தை பெரஹெர மாவத்தையிலிருந்து நவம் மாவத்தை வரையிலான பகுதி எதிர்வரும் (20ஆம் திகதி) முதல் மார்ச் மாதம் (04ஆம் திகதி) வரை மூடப்படும்.

மார்ச் (05) முதல் மார்ச் (11) வரை உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை, ரொட்டுண்டா கார்டன் சந்தி மூடப்படும்.

கஞ்சாவை மருத்துவ தாவரமாக வளர்ப்பதற்கு முதலீட்டாளர்களை அழைப்பதற்கான சட்ட அதிகாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று (05) அமைச்சரவையில் சமர்பிக்க உள்நாட்டு மருத்துவ அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்றுமதிக்காக மட்டுமே மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

அவை மருந்து உற்பத்தி நோக்கங்களுக்காக மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

முதலீட்டு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் இந்த கஞ்சா வளர்க்கப்பட உள்ளது.

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடிக்கு முதலீட்டாளர்களை அழைப்பது தொடர்பான சட்ட விதிமுறைகளை தயாரிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாததால், அதற்கான ஒப்புதலை பெறுவதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கஞ்சா செய்கை தொடர்பில் பல முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், அது தொடர்பான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சு நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார அமைச்சு, ஏற்றுமதிக்கான மருத்துவ கஞ்சா  திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும். 

மேலும் சிறையில் உள்ள ஒருவரை அமைச்சரவையில் வைத்து பிரச்சனைகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோருகிறது.

அவரை மேலும் அமைச்சரவையில் வைத்தால் எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் அவ்வாறான ஒருவரை அமைச்சரவையில் வைத்தால் சர்வதேச ரீதியிலும் இந்நாட்டு அமைச்சரவை மீது அதிருப்தி ஏற்படலாம் எனவும் அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd