web log free
March 24, 2025
kumar

kumar

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிற்கு  கடிதம் வழங்கியதாக ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் வருமாறு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நஸீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய இரண்டு சொகுசு ஜீப்களைதனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய 20 கோடி ரூபா பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும் அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களாகும்.

இவ்விரு வாகனங்களும் மீள ஒப்படைக்கப்படாதமை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் அவருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என பதிலளித்துள்ளார்.

ஆனால் இந்த வாகனங்கள் இதுவரை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் வார்டன் ஒருவரின் கணவர், வீட்டின் பராமரிப்பில் இருக்கும் 20 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த சில நாட்களில் மேலும் நான்கு குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் இருந்து மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரையிலான காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 29 முதல் ஜூன் 8 வரை நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு சுமார் 300,000 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

கடந்த உயர்தரப் பரீட்சை நடாத்துவதில் தாமதம் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு என்பனவும் இந்த பெறுபேறுகளை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டைப் புறக்கணித்திருந்தனர். 

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் பறிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.

அரகலயவின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சன்னங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அகழ்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தலுக்கு கட்சியை உடனடியாக தயார்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் காலங்களில் கட்சி உறுப்பினர் குழுக்களை அமைத்து தொகுதி நிர்வாக சபை கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் பொதுத் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது.
 
வணிக வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு அல்லது வழக்கமான வைப்புகளுக்கு மத்திய வங்கி வழங்கும் வட்டி 9 வீதமாக காணப்படுகின்றது.

இதனிடையே, மத்திய வங்கியினால் வழங்கப்படும் கடனுக்காக, வர்த்தக வங்கிகளில் அறவிடப்படும் வட்டி வீதம் 10 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மூன்றாவது முறையாக வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நேற்றுடன் (24ஆம் திகதி) முடிவடைந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

சில அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் சீர்குலைவு காரணமாக புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படாமையால் பொலிஸ் திணைக்களத்தின் பணிகள் நெருக்கடியான நிலையில் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி அனைத்து நாட்டு மக்களையும் இணைத்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படும் எனவும் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மசோதாவை எதிர்க்காதவர்கள் யாராவது இருந்தால் அவர் குருடனாகவோ அல்லது ஊமையாகவோ இருக்க வேண்டும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd