web log free
July 27, 2024
kumar

kumar

ஈரானுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலரை அடுத்த மாதம் முதல் பண்டமாற்று முறையில் திருப்பிச் செலுத்த இலங்கை முடிவு செய்துள்ளது. 

அந்தத் தொகைக்கு ஈடாக இலங்கை தேயிலையைக் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை ஈரானிடம் 250 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள எண்ணெயை 2012இல் கடனாகப் பெற்றது.

பண்டமாற்று உடன்பாடு 2021இல் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் திருப்பிச் செலுத்துவது தள்ளிப்போனது.

தற்போது இலங்கை அதன் முதன்மைச் சந்தையான தேயிலை விற்பனையை அதிகரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது. பண்டமாற்றால் அந்நியச் செலாவணி இருப்பை இலங்கைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இந்த பண்டமாற்றினால் இருதரப்பும் அமெரிக்க டொலரை நம்பியிருக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாதத்துக்கு 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள தேயிலையை 48 மாதங்களுக்கு ஈரானுக்கு அனுப்புவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இதன் ஆரம்பக் கட்டமாக ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள தேயிலையை அனுப்பவிருப்பதாக அவர் கூறினார். 

இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

டெங்கு மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே பரவி வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், காய்ச்சல் ஏற்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கோ அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் , தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மிரிச துறைமுக பொலிஸாரினால் 47 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துப்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் தடுப்பு காவலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு ஆளும் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்திலும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவிலும் வலுவாக வற்புறுத்தின.

கடந்த வாரம், ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பிரதமரிடம், விடயத்திற்குப்  பொறுப்பான அமைச்சர் கோரியிருந்தார்.

காலவரையறையின்றி வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டதால் வேட்பு மனுக்களை கையளித்த அரச ஊழியர்களைப் போன்று ஏனைய வேட்பாளர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தின் கீழ், வேட்பாளர் ஒருவர் தனது தொகுதிகளில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களுக்கு உதவுதல் போன்றவற்றின் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறி, இது குறித்து முடிவெடுத்து, அறிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  வேட்புமனுவை இரத்து செய்ய  பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியின் அனுமதி பெற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வௌிநாட்டு விஜயத்தின் பின்னர் உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அரசியலமைப்பு சபை கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐந்து உறுப்பினர்களை நியமித்துள்ளது.

புதிய ஆணைக்குழுவில் தற்போதுள்ள ஆணைக்குழுவின் உறுப்பினர் எவரும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் இன்று (24) அதிகாலை அம்பிலிபிட்டிய வெலிக்கடை 99 சந்தியில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.

இராணுவ சிறப்புப் படையின் முன்னாள் சிப்பாயான சசிந்து சந்தாமினி மெண்டிஸ் (24) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார், மேலும் அவர் ஹினடியன் மகேஸ் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டவர் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் கைது செய்ய தேடப்பட்டு எம்பிலிபிட்டிய வெலிக்கடை பகுதியில் உள்ள அவரது சகோதரரின் வீட்டில் பதுங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் விசேட அதிரடிப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் சந்தேக நபரை கைது செய்ய படையினர் சென்ற போது, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மினுவாங்கொட பிரதேசத்தில் நபர் ஒருவரின் மரணம், மற்றுமொருவரை சுட்டுக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் இந்த சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமது நம்பிக்கையை கைவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் மிகவும் நிச்சயமற்ற நிலையில் காணப்படுவதனால் உறுப்பினர்கள் நம்பிக்கையை கைவிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டிய 10 பொஹொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அண்மையில் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 06 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி, நான்கு எம்.பி.க்கள் அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமாயின் அவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை என்றால் ஏதாவது தீர்மானம் எடுக்கத் தயார் எனவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இலங்கை வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.

ரஷ்யா, வடகொரியா, பெலாரஸ், நிக்கரகுவா, சிரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து இருந்து விலகியிருந்தன.

உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தை மீறி, டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகள் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த இணைப்பை எந்தவொரு நாடும், சர்வதேச அமைப்புகளும் அங்கீகரிக்க வேண்டாம் என்றும், கோருகின்ற இந்த தீர்மானம், அதன் இணைப்புப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறும், ரஷ்யாவிடம் கோருகிறது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை, ரஷ்யா தனது வெட்டு (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தோற்கடித்த நிலையில், ஐ.நா பொதுச்சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு இம்மாதம் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒருகுடாவத்தை சம்புத்தாலோக விகாரையை இடித்து அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த விகாரையின் தலைவர் சுகத்ஞான தேரர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த போதே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுவை பரிசீலித்தபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.